அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

மருதம் - தலைவி கூற்று NOT PALLAN

மருதம் - தலைவி கூற்று பாடியவர்: ஆதிமந்தியார். இவர் ஒரு பெண்பாற் புலவர். இவர் சோழன் கரிகால் வளவனின் ஒரேமகள் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். சங்க இலக்கியத்தில் இவர் இயற்றியதாக இந்த ஒரு பாடல் மட்டுமே காணப்படுகிறது. பாடலின் பின்னணி: ஒரு நாட்டியமாடும் ஆண்மகனைத் தலைவி காதலிக்கிறாள். அவனைச் சிலகாலமாகக் காணவில்லை. அவனைக் காணாமல் வருந்தியதால், தலைவி உடல் மெலிந்தாள். அவள் கையில் உள்ள வளையல்கள் நெகிழ்ந்தன. தலைவியைப் பார்க்க வந்த தோழி, தலைவியின் வருத்தத்திற்குக் காரணம் என்னவென்று தெரியாமல் திகைக்கிறாள். தலைவி, “ என்னைப் பார். என் கையிலுள்ள வளையல்கள் நெகிழ்கின்றனவே என்று திகைக்கிறாயா? என்னுடைய இந்த நிலைக்குக் காரணம் நான் என் தலைவனைப் பிருந்திருப்பதுதான். நான் ஒர் நாட்டியம் ஆடும் பெண் என்று உனக்குத் தெரியுமல்லவா? என்னைப் போலவே என் தலைவனும் நாட்டியம் ஆடுபவன்தான். சிலநட்களாக அவனைக் காணாததால், நான் அவனைப் பல இடங்களில் தேடினேன். ஆனால், அவனைக் காணவில்லை.” என்று கூறித் தன் காதலைத் தோழிக்குத் தெரிவிக்கிறாள். மள்ளர் குழீஇய விழவி னானும் மகளிர் தழீஇய துணங்கை யானும் யாண்டுங் காணேன் மாண்தக் கோனை யானுமோர் ஆடுகள மகளே என்கைக் கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த பீடுகெழு குரிசிலுமோர் ஆடுகள மகனே. அருஞ்சொற்பொருள்: மள்ளர் = வீரர்; குழீஇய = குழுமியுள்ள (கூடியுள்ள) ; விழவு = விழா; தழீஇய = தழுவிய; துணங்கை = ஒருவகைக் கூத்து; யாண்டும் = எங்கும்; மாண் = மாட்சிமை; தக்கோன் = தகுதி உடையவன்; யான் = நான்; ஆடுகள மகள் = ஆடுகின்ற களத்திற்குரிய பெண் (நாட்டியம் ஆடும் பெண்) ; கோடு = சங்கு; ஈர்த்தல் = அறுத்தல்; இலங்குதல் = விளங்குதல்; நெகிழ்தல் = நழுவுதல்; பீடு = பெருமை; குரிசில் =தலைவன்; ஆடுகள மகன் =ஆடுகளத்தில் உள்ள ஆண் ( நாட்டியம் ஆடும் ஆண்மகன்). உரை: மாட்சிமை பொருந்திய தகுதியை உடைய என் தலைவனை வீரர்கள் கூடியுள்ள விழா நடைபெறும் இடங்கள், ஆண்கள் மகளிரைத் தழுவி ஆடுகின்ற துணங்கைக் கூத்து நடைபெறும் இடங்கள் ஆகிய எல்லா இடங்களிலும் தேடினேன். ஆனால் அவனைக் காணவில்லை. நான் ஒரு நாட்டியம் ஆடும் பெண். சங்கை அறுத்துச் செய்யப்பட்டு, ஓளியுடன் என் கையில் விளங்குகின்ற வளையல்களை நெகிழச் செய்த, பெருமை பொருந்திய தலைவனும் நாட்டியம் ஆடுபவன்தான். விளக்கம்: ஆட்டனத்தி என்ற ஒரு நடனமாடும் இளைஞனைச் சோழமன்னன் கரிகால் வளவனின் மகள் ஆதிமந்தி காதலித்ததாகவும், அவன் காவிரியாற்றுக் கரையில் நடனம் ஆடிக்கொண்டிருந்தபொழுது, காவிரியில் தோன்றிய வெள்ளப்பெருக்கு அவனைக் கவர்ந்து சென்றதாகவும், அவனைக் காணாததால், ஆதிமந்தி அவனைப் பல இடங்களிலும் தேடி அலைந்ததாகவும், பின்னர் இருவரும் ஒன்று கூடியதாகவும் சங்க இலக்கியத்திலும் சிலப்பதிகாரத்திலும் பலகுறிப்புகள் காணப்படுகின்றன. ஆதிமந்தி தன் காதலனைக் காணததால் வருத்தப்பட்டுத் தேடி அலைந்ததாக, வெள்ளிவீதியார் என்ற பெண்பாற்புலவர் அகநானூற்றுப் பாடல் 45-இல் குறிப்பிடுகிறார். ஆட்டனத்தியைக் காவிரியாறு கவர்ந்து சென்ற செய்தியை அகநானூற்றில் நான்கு பாடல்களில் (76, 222, 376, 396) பரணர் குறிப்பிடுகிறார். சிலப்பதிகாரத்தின் மதுரைக் காண்டத்தில் (வஞ்சின மாலை, வரிகள் 10- 15) சோழ மன்னன் கரிகால் வளவனின் மகள் ஆதிமந்தியின் காதலனாகிய ஆட்டனத்தியைக் காவிரி கவர்ந்து சென்று கடலில் சேர்த்ததாகவும், கடல் ஆட்டனத்தியை ஆதிமந்திக்குக்கு மீட்டுக்கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டில், சிறந்த கவிஞராக விளங்கிய கவியரசு கண்ணதாசன், ஆதிமந்தியின் வரலாற்றை ”ஆட்டனத்தி – ஆதிமந்தி காவியம்” என்று ஒரு நூலாக இயற்றியிருக்கிறார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆதிமந்தியின் வரலாற்றை “சேர தாண்டவம் “ என்ற பெயரில் ஒரு நாடகமாக இயற்றியுள்ளார். ஆட்டனத்தி – ஆதிமந்தியின் காதலை மையமாக வைத்து ”மன்னாதி மன்னன்” என்ற திரைப்படம் 1960- ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

Labels:

மன்னாதி மன்னர்கள்: புறப்பொருள் வென்பாமாலை பாடிய சேர மன்னன்

மன்னாதி மன்னர்கள்: புறப்பொருள் வென்பாமாலை பாடிய சேர மன்னன்: மறவர்குடியே முதுகுடி என புகழ்ந்த சேர மன்னன் தொல்காப்பியர், அன்பினால் நிகழும் அகத்திணை ஒழுகலாற்றை ஏழு திணையாகப் பகுத்தாற் போன்று, அன...

பழனியில் 18-ம் நூற்றாண்டு செப்பு பட்டயம் கண்டுபிடிப்பு


பழனியில், 18-ம் நூற்றாண்டை சேர்ந்த நகல் செப்பு பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழனியில் மடம் அமைத்து பூஜை நடத்துவதற்காக இந்த நகல் பட்டயம் எழுதப்பட்டுள்ளது. பதிவு: ஏப்ரல் 03, 2018 03:30 AM பழனி, திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய வீட்டில் இருந்த பழங்கால பெட்டியில் ஒரு செப்பு பட்டயம் இருந்துள்ளது. அவருடைய வீட்டில் சுத்தப்படுத்தும் பணி நடந்த போது அந்த பட்டயத்தை சிவக்குமார் பார்த்தார். உடனே அதனை பழனியை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளரான நாராயணமூர்த்தியிடம் அவர் காண்பித்தார். இதையடுத்து அந்த பட்டயத்தை நாராயணமூர்த்தி தலைமையிலான தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது அது 18-ம் நூற்றாண்டை சேர்ந்தது என்பது தெரியவந்தது. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது:- பழனியில் கண்டுபிடிக்கப்பட்ட செப்பு பட்டயம் பண்டைய தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டயம் 36.4 சென்டி மீட்டர் உயரமும், 20.2 சென்டி மீட்டர் அகலமும், 870 கிராம் எடையும் கொண்டது ஆகும். இதில் மொத்தம் 139 வரிகள் எழுதப்பட்டுள்ளன. சாலிவாகன சகாப்தம் 1,627-ம் ஆண்டு பார்த்திவ ஆண்டு சித்திரை மாதம் 30-ந்தேதி இந்த செப்பு பட்டயம் எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் செப்பு பட்டயம் 18-ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பது தெளிவாகிறது. பட்டயத்தில் உள்ள எழுத்துக்களை ஆய்வு செய்த போது, ரகுநாத சேதுபதியின் ஆட்சி காலத்தில் அவருடைய மகன் ரெணசிங்க தேவர் கட்டளைப்படி மருதம்பிள்ளை என்பவர் தாமிரத்தால் எழுதிய மூல பட்டயத்தின் நகல் தான் இந்த செப்பு பட்டயம் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த நகல் செப்பு பட்டயத்தை சிவகங்கை சீமையின் 2-வது அரசரான முத்துவடுகத்தேவர், அவருடைய மனைவி வேலுநாச்சியார் ஆகியோருக்கு காரியகர்த்தராக இருந்த தாண்டவராய பிள்ளையின் கட்டளைப்படி திருப்பத்தூரை சேர்ந்த பழனிஆசாரி என்பவரின் மகன் முத்தாண்டி என்பவர் எழுதியுள்ளார். மூலப்பட்டயம் எழுதப்பட்டு 50 ஆண்டுகளுக்கு பிறகு இந்த நகல் பட்டயம் எழுதப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சார்பில் இந்த பட்டயம் எழுதப்பட்டுள்ளது. பழனி மலையில் கந்தபுராணம் வாசிக்கும் சோழநாட்டு வடமுட்டத்தை சேர்ந்த ஏகாம்பர உடையாரிடம் இந்த பட்டயம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் பழனி பகுதியில் மடம் அமைத்து, பூஜை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று பட்டயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக அரண்மனையில் வசிக்கும் ராஜ வம்சத்தார் ஆண்டு ஒன்றுக்கு 5 பொன்னும், ஒரு துப்பட்டியும், மற்றவர்கள் 6 பணமும் கொடுக்க வேண்டும். அத்துடன் குறிப்பிட்ட சிலர் முருகப்பெருமானுக்கான திருமாலை கட்டளைக்காக ஆண்டு ஒன்றுக்கு 1 பொன்னும், 2 பணமும் கொடுக்க வேண்டும் என்று பட்டயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Labels:

பழநி செப்பு பட்டயம்


https://www.tagavalaatruppadai.in/copper-plate-details.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZh1 செப்பேட்டின் பெயர் - பழனிச் செப்பேடு செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் - நத்தம் கோயில் ஊர் - பழனி வட்டம் - பழனி மாவட்டம் - திண்டுக்கல் மொழியும் எழுத்தும் - தமிழ்-தமிழ் அரசு / ஆட்சியாளர் - நாயக்கர் / குமாரலிங்கைய நாயக்கர் வரலாற்று ஆண்டு - கி.பி.1781 விளக்கம் - குமாரலிங்கைய நாய்ககர் தனது தந்தை ஏறுதாது லிங்கய நாயக்கர் மற்றும் தாயார் தாதாம்மாள் அவர்கள் பெயரில் இரண்டு சத்திரங்கள் கட்டி அதன் நிர்வாகச் செலவுக்காக ஏற்க்கபட்டி கிராமம், காரைக்குண்டு, அம்மாபட்டி ஆகிய ஊர்களைக் கொடுத்துள்ளார். இவ்வூர்களில் உள்ள நிலங்களின் எல்லைகளின் திசைகள் ஈசானிய, அக்னி, நிருதி, வாயு என்று திக்பாலகர்களின் பெயரில் செல்லப்பட்டுள்ளது. நிலத்தின் ஒவ்வொரு திருப்பத்திலும் எல்லக் கல்லாகச் சூலக்கல் நடப்பட்டதால், “சூலக்கல் 11க்குள் சேர்ந்த“, “சூலக்கல் 14க்குள் சேர்ந்த“ என்று நிலங்கள் குறிக்கப்படுகின்றன. இச்செப்பேட்டில் உள்ள வாசகம் அப்படியே நத்தம் அருகில் உள்ள சத்திரம் ஊராளிப் பட்டியில் கல்வெட்டாகவும் பொறிக்கப்பட்டுள்ளது. கல்லிலும், செம்பிலும் வெட்டிக் கொள்க என்று வரும் கல்வெட்டுச் சொற்றொடர்க்கு இச்செப்பேடு நல்ல எடுத்துக்காட்டாகும். இதனில் சொல்லப்படும் சத்திரங்கள் இன்று பழனிக்குப் பாதயாத்திரை மேற்கொள்ளும் வழித்தடத்தில் உள்ளன. செப்பேடு மின்னுருவாக்கப்பட்ட / சேகரிக்கப்பட்ட நிறுவனத்தின் பெயர் / நபர் - தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை குறிப்புதவிகள் - தமிழகச் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2022

Labels:

How to change your Aadhaar Card Mobile number Online | Easiest way | lat...

Pan card இலவசம் apply செய்வது எப்படி | how to apply Pan card online|5Min...

மேட்டூ அணை


மேட்டூர் அணை;

காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டதாகும். அணையின் தாழ்ந்த மட்டம் 2730.00, அணையின் முழுநீர் மடம் 2850.00 (FRL) , அணையின் உபயோகமாகும் அளவு 8.073(TMC) மொத்த கொள்ளவு 8.500 (TMC) ,  இடது கரை வாய்க்காலின் அளவு 456(LBC), வடதுகரை வாய்க்காலின் அளவு 1500 (RBC)  மொத்தம் 1956, பாசனப்பரப்பு 1348390 ஏக்கர், பயிரிடப்படும் மொத்த பரப்பு 170020 ஏக்கர், பாசனத்திற்கு ஒரு கன அடி நீர் ஓட்டத்திற்கு பாசனப்பரப்பு 89 (Acre/Cusec)
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYaw-ObJk290_I3qkCScjwjtBBg-drlmcUc1Fw9myBINTD_T7oAsBpB_CojQN6_bDU3mf4LG437RHZRRexI7RHFnMFMkWSyzU8-xXG5wPe1c61HhQ2Rqi5AzHFmP_3VhyefC8t/s320/Mettur_dam.jpg
மேட்டூர் அணை வரலாறு:

சுண்ணாம்பு மற்றும் காரையில் கட்டப்பட்டுள்ள மேட்டூர் அணையின் மொத்த நீளம் 5300 அடியாகும். அணையின் அதிகபட்ச உயரம் 214 அடியாகும். அதிகபட்ச அகலம் 171 அடியாகும். அணையின் சேமிப்பு உயரம் 120 அடியாகும். மேட்டூர் அணையில் 59.25 சதுர மைல் பரப்பளவில் நீர்தேக்கி வைக்கப்படுகிறது. முன்பு இந்த அணையினால், தமிழ்நாட்டில் 20 இலட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெற்றன. அதாவது, திருச்சி மாவட்டத்தில் 2.74 இலட்சம் ஏக்கரும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 12.05 இலட்சம் ஏக்கரும், சேலம் மாவட்டத்தில் 4.66 ஏக்கரும் புதுக்கோட்டை, தென்னார்க்காடு மாவட்டத்தில் 2.70 இலட்சம் ஏக்கரும் சாகுபடி செய்யப்பட்டது. ஆனால், இப்போது தமிழ்நாட்டில் மொத்த சாகுபடியே 16 இலட்சம் ஏக்கரில்தான் செய்யப்படுகின்றன. அதில் குறுவை 4 இலட்சம் ஏக்கரிலும், சம்பா 12 இலட்சம் ஏக்கரிலும் செய்யப்படுகின்றன.
திட்ட வரலாறு


1923-ல் திருவாங்கூர் சமஸ்த்தானத்தில் உள்ள திவான் பகதூர் சர் சி.பி.ராமசாமி அய்யரிடம் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட விவசாயிகள் எடுத்து விளக்கினர் , அவர் மைசூர் சமஸ்தானத்தாரை அணுகி திவான்பகதூர் விஸ்வேஸ்வரய்யா என்பவரிடம் இது குறித்து எடுத்துரைத்தார். அம் முயற்சிக்குக் காரணமும் உண்டு சர்.சி.பி.ராமசாமி அய்யரின் முன்னோர்கள் தஞ்சையைச் சேர்ந்தவர்களே. மைசூர் சமஸ்தானத்தார் மீண்டும் ஆட்சேபணைத் தெரிவிக்கவே, தஞ்சை மாவட்ட விவசாயிகள் ஒன்று சேர்ந்து புயல் மற்றும் வெள்ள சேதத்தினால் ஏற்படும் இழப்புகளுக்கு ஆண்டு தோறும் ரூ.30,00,000/- நஷ்டஈடாக மைசூர் சமஸ்தானத்தார் கொடுக்கவேண்டும் என தஞ்சை மாவட்ட ஆட்சிதலைவர் மூலம் மைசூர் சமஸ்தானத்திற்கு நோட்டீஸ் கொடுத்தனர். (அன்றைய தேதிக்கு ஒரு பவுன் விலை ரூ.30/-மட்டுமே, அதன் படி கணக்கிட்டால் ரூ.30,00,000/-க்கு 1 லட்சம் பவுனாகிறது ) வருடாவருடம் ரூ.30,00,000/-கொடுப்பதைக் காட்டிலும் , மேட்டூரில் அணைகட்டுவதற்கு சம்மதம் கொடுப்பதே சிறந்தது என திருவாங்கூர் சமஸ்தான திவான் பகதூர் சர்.சி.பி.ராமசாமி அய்யர் எடுத்துக்கூறி மைசூர் சமஸ்தானத்தை சம்மதிக்க வைத்து சம்மதக்கடிதம் பெற்று தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அனுப்பிவைக்க வைத்தார்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUtYjdiTAay_wB6Z3wk_IvFUbcwmZbU6e0aRMe2bgPqJoG9v5bNS7fUgsomTYywsHb_2OVboSFPn58VwBr11rqJPLVoSM6Fb-z6ISINTi2JHQgBavGtBcODVNc-bapoqhXlyhb/s1600/Mettur_dam.jpg

சர் ஆர்தர் காட்டன்

சர் ஆர்தர் காட்டன் 1834-இல் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின் 20 ஆண்ருகள் கழித்து 1856-இல் மேஜர் லாஃபோர்ட் (major Lawford) தற்போது அணை அமைந்துள்ள இடத்திற்கு 11 மைல் கீழே நெரிஞ்சிப்பேட்டை  எனுமிடத்தில் கட்ட திட்டம் தயாரித்தார். ஆனால் W.பிரேசர்(W.Frazer) ஏற்கனவே தகுதியில்லை என தீர்மானிக்க திட்டத்தை திரும்பப் பெற்றுக் கொண்டார். 1869-இல் Cap.C.J.ஸ்மித்  (Cap.C.J.Smith) அப்பணியை எடுத்துக் கொண்டார். அதன்பின் 1880இல் மேஜர் மாண்டகோமெரி (Major Montegomerie) அதன் பின் கேப்டன் ரோமில்லி (Cap.Romilly) 1892-இல் கோயமுத்தூர் செயற்பொறியாளர் J.C.லார்மினி(J.C.Larminie) மேற்கொண்டார்.

1901-இல் ஹியூக்ஸ் (Hughes)பவானி திட்டத்தை நீர்ப்பாசன ஆய்வாளர் ஜெனெரல் ஹிகாம்(Higham) அவருக்குப் பின் வந்த தாமஸ்(Thomas) முன்பும் சமர்ப்பித்தார். காவிரி நீர்த்தேக்கத் திட்டம் H.A.மோஸ்( H.A.Moss) அவர்களால் G.O.No.971-I  நாள் 2, செப்டம்பர்,1904 முழு வடிவம் பெற்றது. இத்திட்டத்தின் மதிப்பு ரூ.292.3 இலட்சங்களாகும். மூலும் இது இந்திய அரசின் ஒப்புதலுக்கு கடித எண்.597-I   நாள் 13,ஜூன், 1906 இல் அனுப்பப் பட்டது.

இதனுடன் இணைந்து கட்டணை வாய்க்கால் திட்டத்தையும் நீர்ப்பாசன ஆய்வாளர் ஜெனெரல் சர் ஜான் பெண்டனுக்கு (Sir John Benton)தலைமைப் பொறியாளர் H.E.கிளார்க்(H.E.Clerk) அனுப்பி வைத்தார். அதன் அரசாணை அவர்களால் G.O.No.72-I  நாள் 11, மார்ச்,1910 ஆகும்.

1910-க்கு முன்னர் தேர்வு செய்யப்பட்ட இடங்கள்
1.      ஊரட்சி
2.      நெரிஞ்சிப்பேட்டை/செக்கானூர்
3.      நவப்பேட்டை
4.      சாம்பள்ளி

கோல். W.M.எல்லீஸ் (Col.W.M.Ellis) காவிரி-மேட்டூஎர் திட்டத்தின் கண்காணிப்பு பொறியாளராக நியமிக்கப்பட்டார். அதன்படி 1910-இல் அவர் அறிக்கை சமர்ப்பித்தார்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEieCJfC1cvJ-ypkvGGhi5w1xLUi6cW43KIwGmIGrhgK-6jjhwzZ0_SakHFBan13F9z7wTyyKUaSJe9Y151gCwQZkf0b7G4HurLj1rzS72o2S_NHWqGPp_ZGzlq_MDlypCoijkU1/s200/Ellis.jpg
W.M.எல்லீஸ்

1910-ஆம் ஆண்டு ரூபார்.385 இலட்சம் திட்ட செலவாக சமர்ப்பிக்கப்பட்டது. இதன் அரசாணை அவர்களால் G.O.No.386-I  நாள் 3, டிசம்பர்,1910.இத்திட்டத்தை K.சீனிவாச ஐய்யங்கார் மற்றும் சர் C.P.ராமசாமி அய்யங்கார் முன்னெடுத்துச் சென்றனர்.  வடக்குத் தெற்காக, சீதாமலை - பாலமலை என்னும் இரண்டு மலைகட்கிடையில்  மேட்டூர் அணை கட்டப்பட்டுள்ளது


1911 ஆம் ஆண்டு கிருஷ்ணராஜ சாகர் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மதிப்பு 2 ½ கோடி ஆகும். மின் திட்டத்துடன் சேர்த்து 6 ¾ கோடி ஆகிறது. சர் ஹக் கீலிங் (Sir Hugh keeling) பெருங்கற்கலைக் (Cylopean masonry)கொண்டு அணை கட்டலாம் என்று முடி செய்யப்பட்டது. இதே முறைப்படி ஆலிவ் பிரிட்ஜ் பாரேன் ஜேக் அணைகள் அமெரிக்காவில் கட்டப்பட்டன.

ஜார்ஜ் விஸ்கௌண்ட் காஸ்சேன் 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwrebX4p4OVed8Hf6NUh_4Z5ukXCTTP-C3zfeas1VlKflvgJAtNZa9RxEmLiuKlkyUn8CJ72hzADTfEdA6iWoBd6G_UBWPXs0I9hwF4AdHqCZipXl7rYuBkraLT3AB6eN-8Asf/s1600/Mettur_dam.jpg

அப்போதைய மெட்ராஸ் கவர்னர் ஜார்ஜ் விஸ்கௌண்ட் காஸ்சேன்(George Viscount Goschen) 20, ஜூன்,1924 அன்று நினைவுத் தூணை(Obelisk) திறந்து வைத்து திட்டப் பணிகளை துவக்கி வைத்தார். மேட்டூர் அணைக்கு 20, ஜூலை,1925 –இல் முதல் வெடி வைத்து பணிகள் துவங்கப்பட்டது.


திட்டப் பணிகளுக்கு சாலைகள் மிக மோசமாக இருந்ததால்செயற்பொறியாளர் T.I.S.மெக்கே (T.I.S.Mackay) ஈரோட்டிலிருந்து அணை வரை 36 மைல்களுக்கு ரயில்பாதை அமைத்துக் கொடுத்தார். 

நில ஆர்ஜிதம்

அரசு நிலம் 95,983 ஏக்கர் ரூ.8/ஏக்கர்                             ரூ.7,65,464
ஜமீந்தாரி மற்றும் இனாம் நிலங்கள் ரூ8/ஏக்கர்                  ரூ.9,56,392
விவசாய நிலங்கள் மற்றும் இனாம் நிலங்கள் ரூ.5/ஏக்கர்         ரூ.3,13,850
அரசு சுவாதீனத்திலிருந்த நிலங்கள்16,230 ஏக்கர் நிலம்
ரூ.1.2.0/ஏக்கர்                                                  ரூ 18,259
அரசு சுவாதீனமில்லாத நிலங்கள்1,768 ஏக்கர் நிலம் ரூ.6/ஏக்கர்    ரூ.13,608
மொத்தம்                                                     ரூ.20,80,383


காவேரிபுரம் முதல் நாகமரை வரை நில ஆர்ஜிதம் செய்யப்பட்டது. சேலம் மாவட்டத்தில் 7,409 ஏக்கர்களும், கோயமுத்தூரில் 11,462 ஏக்கர்களூம் எடுக்கப்பட்டது. அதன் அரசாணை G.O.No.196-I  நாள் 2, மே,1925. இதற்கென துணை ஆட்சியர் நியமிக்கப்பட்டார் அரசாணை G.O.No.365-I  நாள் 30, ஜூலை,1925 ஆகும். அணையின் கடைக்கோடி நீங்கலாக மொத்தம் 18,435.84 ஏக்கர்களும், 4146 வீடுகளும் ஆர்ஜிதம் செய்யப்பட்டன. இப்பணிகள் பிப்ரவரி,1930 இல் முடிக்கப்பட்டது.

நிலத்திற்கு வழங்கப்பட்ட இழப்பீடு                          ரூ.27,67,886
நில ஆர்ஜித மறுசீரமைப்பு மற்றும் ஓய்வூதியம்              ரூ.1,98,418
மொத்தம்                                                  ரூ.29,66,284

அதன்பின் வலப்புறம் (Right Flank) ஸ்மித் மலை(Smith knoll), ஸ்டோனி மலை (Stoney’s ridge) கேம்பல் மலை(Campbells hill) பகுதிகளில் குழி தோண்டும் பணி துவங்கப்பட்டது. இதே வேளையில் மைசூர் புவியியலாளர் டாக்டர் ஸ்மித் மற்றும் இந்திய புவியியலாளர் விநாயக் ராவும் ஆய்வு செய்தனர்.

கொலோனல் எல்லீஸ் அதிகப்படியான வெள்ள நீரை வெளியேற்ற அளந்த பொழுது 1910-க்கு முன்னர் 28 ஆண்டுகள் வரை 200,000 cusecs வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதிகப்படியாக 30,ஜூலை,1896-இல் 207,000 cusecs வெள்ளம் வந்துள்ளது. 26, ஜூலை,1924-இல் 4,56,000 cusecs பதிவானது. இதை கணக்கில் கொண்டு நீர்வெளியேற வட புறம் (North Flank) புலிமலைக்கு மேற்கே இயற்கையான முறையில் அமைந்துள்ளது. அதே போல் இடப்புறம் எல்லீல் சேட்டல் 20 அடி உயரத்திற்கு கட்டப்பட்டது. என்னீஸ் சேட்டல் வழியாக வெளியேறும் நீர் தொட்டில்பட்டை என்ற இடத்தில் காவிரியுடன் கலக்கிறது.  வேலையாட்கள், அலுவலர்கள் குடியிருப்பு அமைக்க மார்ச்,1926 இல் மேட்டூர் டவுன்சிப் ஆரம்பிக்கப்பட்டு அதே ஆண்டு முடிக்கப்பட்டது.

மேலும் மேட்டூருக்கு இடபுறமுள்ள ஊர்களுக்குச் செல்ல மிகுந்த சிரமம் இருந்தது. அதற்காக காவிரி பாலம் கட்ட திட்டமிடப்பட்டு ஆய்வு மேற்கொள்லப்பட்டது. அதன் படி செயற்பொறியாளர் குறிப்பாணை எண்  2832/B.E.P   நாள் 23, மார்ச், 1926 அனுமதிக்கப்படது. அதன்படி ஆகஸ்டு 1927-இல் பாலம் கட்டி முடிக்கப்பட்டது.

கூலித் தொழிலாளர்களுக்கு கூடாரம் அமைக்கப்பட்டு சுமார் 18,000 தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். 1926 அக்டோபர்,1926-இல் இந்திய அரசின் கன்சல்டிங் பொறியாளர் D.G.ஹாரிஸ்(D.G.Harris) கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFEwVa1L0JSxfvA-dP8p6ADC7Z8yKvOHz5irchbTXPcplHw2RDgomaHKafEAljwoILAUyUUt0ftME6gi9uPrkdCyMBMeewxi7Aw4ITygDFnt0aUMf2-o5S0v2gP09-lh0PfakJ/s200/Mullings.jpg
Sir Clement Tudway Mullings
கட்டுமானத்திற்கு தேவையான சுர்கி (Surki mortar) சுண்ணாம்பு சங்ககிரி, பவானி, சேலம் பகுதிகளிலிருந்துகொண்டுவரப்பட்டது. அப்பொழுது க்ளமண்ட் முல்லிங்ஸ் (Sir Clement Tudway Mullings) போர்ட்லேண்ட் சிமெண்ட் பயன்படுத்த சிபாரிசு செய்தார். அதன் படி அரசாணை G.O.No.1815-I  நாள் 22, ஆகஸ்டு,1927 க்கு பிறகு சிமெண்ட் பயன்படுத்தப்பட்டது.

ஆரம்பத்தில் கிடைத்த மணல் திருப்தியில்லாததால் பாறைகள் உடைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன. பின்னர் பரிசல்கள் மூலமாக சோழப்பாடியிலிருந்து சுமார் 2,239,000 கன அடி மணல் கொண்டுவரப்பட்டது.

அணைக்கு பயன்படுத்தப்பட்ட மணல்         26,651,286 கன அடி
இதர பணிகளுக்கு                           1,608,628 கன அடி
மீதமானது                                  457,520 கன அடி
கிரஷர் தூள்                                903,837 கன அடி

கல் சேத்தமலைக்கு கிழக்கே புலிமலையிலிருந்து எடுக்கப்பட்டது. ஒரு நாளைக்கு 37,800 கன அடி கற்கள் வீதம் 5 ஆண்டுகளுக்கு தேவைப்பட்டது. இதன் பயன் பாட்டில், pneumatic tripod drills, drifters, jack hammers போன்றவை கல்லெடுக்கப் (Quarrying) பயன்படுத்தப்பட்டன. மேலும் கம்பெனியிடமிருந்து பேட்டரிகள் வாங்கப்பட்டன.

முதல் வெடியானது 3, மே, 1927-இல் வைக்கப்பட்டது. அப்பொழுது வடி மருந்துகளின் தலைமை ஆய்வாளர் டாக்டர் ஷெல்டன்(Dr.Sheldon) இருந்தார்.வெடிமருந்துகளுக்கு திரவ ஆக்சிஜன் பயன்படுத்தப்பட்டது. அதற்கான உரிமையை லைஃபூட் ரெப்ரிஜிரேசன் கம்பெனி (Lightfoot Refrigeration company) எடுத்திருந்தது. கம்பெனியின் உரிமையாளர் T.B.லைஃபூட் மற்றும் பேராசிரியர் லிண்டே அணைக்கருகில் இரண்டு யூனிட்டுகள் ஆரம்பித்து ஆக்சிஜன் தயாரிப்பில் ஈடுபட்டனர்.

போக்குவரத்துக்கு வசதியாக டிராம்(tramway)வசதி இருந்தால் நன்றாக இருக்கும் என்ற தலைமைபொறியாளரின் கருத்தை ஏற்றுக் கொண்டு மார்டின் கம்பெனி ஜூன்,1926-இல் தின்னப்பட்டியிலிருந்து மேட்டூர் வரை ட்ராம் வசதியை செய்து கொடுத்தது.

பணிமனை மற்றும் இயந்திரங்கள் பொறுப்பு அதிகாரியாயிருந்த W.P.ராபர்ட்ஸ் இரும்பு ரோப்புகள், கேபிள்கள் பணியினை கவனித்துக் கொண்டார். பணிக்கு தேவையான இரண்டு கோபுரங்களை(Tower) ஸ்டோதெர்ட் & பிட் கம்பெனி (M/s Stothert & Pitt)கவனித்துக் கொண்டது. அதன்படி இரண்டு கோபுரங்களை 1, ஆகஸ்ட், 1929 இல் சுமார் 180 அடி உயர கோபுரத்தைஅமைத்துக் கொடுத்தது.கட்டுமானத்திற்கு தேவையான மின்சாரம் 3400KW, இரண்டு 125 KVA டீசல் ஜெனரேட்டர்கள் மூலமும், சிவசமுத்திரம் மின் உற்பத்தியிலிருந்தும் பெறப்பட்டது.

மோட்டார் மூலம் இயங்கும் மதகுகளை க்ளென்பீல்ட் & கென்னெடி(M/s Glenfiled &Kennedy) நிறுவனம் தயாரித்துக் கொடுத்தது. அதிகப்படியான வெள்ளநீர் வெளியேற முல்லிங்ஸ் ஒரு குணகத்தை (Co-efficient)அறிவுறுத்தினார், Q=c.l.h.3/2  அது சரியாக இருக்குமென்று முடிவெடுக்கப்பட்டது.

அணைகட்டுமானத்தில் நீரின் அழுத்தம் (Stress)பௌவியர்(Bouvier) மற்றும் அன்வின்(Unwin) முறைகளில் உயரத்திற்கேற்ப கணகிடப்பட்டது.

Bouvier Method

Maximim Stree-Reservoir empty=2w/L (2-3u/L)

Reservoir full= 2w/L (2-3u/L) sec.2α

L= Base width
u=upstream third reservoir empty
u-downstream third reservoir full
w=weight of themasonry (includes water load in the case of reservoir full)
tan α = water thrust/ weight of the masonry reservoir full

Unwin method

Maximim Stree-Reservoir empty=2w/L (2-3u/L) Sec.2Ø1

Reservoir full= 2w/L (2-3u/L) Sec.2Ø2

அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்ட பின் அணையின் மொத்த கொள்ளளவு 54,620,050 கன அடி ஆகும். 14, ஜூலை,1934 கடை கல்லை அணையில் மேற்பரப்பில்(parapet) பார்பரின் மனைவியால் நடப்பட்டது. முல்லிங்ஸ் இருக்கை(Mullings Seat) டான் (Dann)என்ற கட்டவியலாளரால் வடிவமைக்கப்பட்டது.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJHUexml9d6z3R0jTUlBE0PvmnFMalIARyclccWU54br1Hi1d30IwCMEXnN0tw5jeNepgL7EjBgspos7SsNdK3d5-zFB3aA62CuAH9Xxdk6KBgnUe-KZATEWIaebyG9_NklyOF/s1600/stanley.jpg
George frederick stanley
அணையானது 21, ஆகஸ்ட்,1934 அன்று மெட்ராஸ் கவர்னர் சர் ஜார்ஜ்(Sir George  பிரடெரிக் ஸ்டான்லியால் திறந்து வைக்கப்பட்டது. நீர்த்தேக்கம், ஸ்டான்லி நீர்த்தேக்கம் என் பெயரிடப்பட்டது. அதே போல் 1938-இல் ராயபுரம் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் 5-வருட டிப்ளமாவை அறிமுகப்படுத்தினார். அதன் பின்னர்
ராயபுரம் மருத்துவக் கல்லூரி 2,ஜூலை,1938 முதல் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி என அழைக்கப்பட்டது.

34 ஏக்கர் நிலப்பரப்பி அமைக்கப்பட்ட ஸ்டான்லி பூங்காவை கவர்னரின் மனைவி பீட்ரிக்ஸ் ஸ்டான்லி (Lady Beatrix Stanley) ஸ்டான்லி திறந்து வைத்தார்.

இன்றளவும் அணை கட்டுவோருக்குமுன்மாதிரியாகவும் உலகத்திலேயே முக்கியமான கல் அணையாகவும் இருப்பது மேட்டூர் அணை. அது கட்டப்பட்ட போது 1934-இல் மேட்டூர் அணையே உலகில் நீளமான(5300அடி) அணையாக இருந்தது. இந்த ஏரியில் பரப்பு 60 சதுரமைல்: சென்னை மாநகாpன் பரப்பைவிடச் சற்று பெரிது! இதன் கொள் அளவு 93500 மிலியன் கன அடி அதாவது ஏறத்தாழ 10000 கோடி கன அடி தண்ணீர் தேங்கினல்தான் மேட்டூர் ஏரி நிரம்பும்! 1961-இல் ஏற்பட்ட பெரு வௌளத்தின்போது இந்த எல்லையையும் மீறி 10450 கோடி கன அடி வரை  (ஏறத்தாழ 124 அடிஉயரம்) தண்ணீர் கட்டப்பட்டது. இதனல் மேட்டூர் அணையை 126 அடிக்குமேல் மேலும் 10 அடி உயாத்திக்கட்ட வேட்டுமென்று கருத்தும்இ மேட்டூருக்கு மேலேயே ஒகனேக்கல்லில் அணைகட்ட வேண்டுமென்ற கருத்தும் வலுப்பெற்றிருக்கின்றன.

மேட்டூர் ஏரி ஏற்பட்டதால்  ஏரியின் பரப்புக்கு உட்பட்ட பகுதி அனைத்தையும் ஓரே வட்டத்தில் ஓமலூரில் அமைக்க நேரிட்டது. அதனல் புதிதாக ஏர்க்காடு வட்டம் ஏற்பட்டது. மேட்டூரின் மிக உயராமன இடத்தில் மலைகளுக்கு நடுவே புதிய சாலை போடப்பட்டுச் சென்னைக்கும் கோயம்புத்தூருக்கும் குறுக்குவழி (சேலத்துக்கோ ஈரோடுக்கோ செல்லாமல்) அமைந்தது. இவ்வாறு பலமாறுதல்களைச் செய்து வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறது  மேட்டூர் அணை.

மேட்டூரை விடப்  பெரிய அணைகள் இப்போது கட்டப்பட்டிருக்கின்றன. மேட்டூரில் செலவானதைப்போல நூறு பங்கு பணச் செலவில் அணைகள் அமையும் காலத்தில் நாம் வாழ்கிறோம். மேட்டூர் அணை கட்டப்பட்ட பிறகுதான். அணை முழுவதையும் கல்லால் கட்ட வேண்டுவதில்லை தேக்கப்பட்ட நீரை மதகுகள் வழி ஆற்றுக்கும் கால்வாய்களுக்கும் விடுவதற்கான பகுதி மட்டும் கல்லால் அமைத்தால் போதும் அப்பகுதிக்கு இருபுறமும் மண்இ அணைகளை நெடுந்தொலைவுக்குக் கட்டி மண்ணைக்கெட்டிப்படுத்தலாம் என்ற முறையில் அமொpக்கா சில அணைகள் கட்டி உலகினாக்கு உணாத்தினா. இக்காலத்தில் கட்டப்பட்ட கீழ்பவானி போன்ற அணைகள் இம்மாதிரி அமைந்தவையே.

முழுவதும் கல்லால் கட்டப்பட்ட அணையையும் அணைகளில் மேட்டூருக்கு இணையாக எந்த அணையையும் சொல்லுவதற்கில்லை. கட்டு வேலையிலும். உறுதியிலும் மேட்டூர் அணையைக் குறை கூறும் வாய்ப்பு ஒன்றும் இத்தனை ஆண்டுகளாக ஏற்படவில்லை இனி ஏற்படுவதற்கும் இல்லை.

பொறியியல் கலையின் பொலிவு முழு உருவம் பெற்ற இடம் மேட்டூர் பார்த்து மகிழவும் படகோட்டி இன்புறவும்  மீன் பிடித்து உண்ணவும் பூந்தோட்டத்தில் பொழுது போக்கவும் மேட்டூர் மேலான இடம் மின்சாரப் பெருக்கத்தாலும் புத்தம் புதிய தொழிற்சாலைகள் மேன்மேலும் தோன்றி வருவதாலும் மேட்டூர் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் தனிச்சிறப்பைப் பெற்றிருக்கிறது.

மேட்டூர் திட்டத்தில் பணியாற்றிய அலுவலர்கள்
தலைமை பொறியாளர்கள்
சர் C.T.முல்லிங்ஸ்
V.ஹர்ட்
F.M.டொவ்லி
R.F.ஸ்டோனி
M.R.Ry.S.பாஸ்கர அய்யங்கார்
M.R.Ry.N.சாமிநாத அய்யங்கார்
M.R.Ry. R.நரசிம்ம அய்யங்கார்
M.R.Ry.G.ராமசாமி அய்யர்
W.P.ராபர்ட்ஸ்

பணி கண்காணிப்பாளர்
C.G.பார்பெர்

செயற்பொறியாளர்கள்
M.R.Ry .R.நரசிம்ம அய்யங்கார்
W.P.ராபர்ட்ஸ்
F.M.விபன்
M.R.Ry.N.பரமேஸ்வரம் பிள்ளை
D.W.கொல்லன்
T.I.S.மெக்கே
M.R.Ry.L.வெங்கடகிரிஷ்ண அய்யர்
M.R.Ry.N.கெசவ ராவ்
M.R.Ry.N.கோவிந்தராஜ அய்யங்கார்
H.G.ஜேக்சன்
J.மாதை
M.R.Ry.A.R.வெங்கட ஆச்சார்யா
W.H.டர்னர்
M.R.Ry.R. மஹாதேவ அய்யர்
M.R.Ry.M.S.திருமலை அய்யங்கார்
M.R.Ry.T.S.வெங்கடராம அய்யர்
M.R.Ry.R.S. பத்மநாப அய்யர்
M.R.Ry.S.V.ரஜங்கம் அய்யர்
M.R.Ry S.V.கனகசபை பிள்ளை
L.ஹென்சா
H.A.இர்வின்
A.H.S.கேம்பேல்
F.T.லெர்ன்மோத்

உதவி பொறியாளர்கள்
M.R.Ry U.S.ராமசுந்தரம்
M.R.Ry.T.R.நரசிம்ம ஆச்சார்யா
M.R.Ry.R. ராஜகோபால ஆச்சார்யா
M.R.Ry.M.B. கிரிஷ்ணசாமி அய்யங்கார்
M.R.Ry.G.G.கிருஷ்ண அய்யர்
M.R.Ry.P.S. விஸ்வநாத அய்யர்
M.R.Ry.S. ராமானுஜ ஆச்சார்யா
M.R.Ry. ஹரிநாராயணா
M.R.Ry.MV. ராமசாமி அய்யர்
M.R.Ry.R. வைத்தியநாத அய்யர்
M.R.Ry.N. சுந்தரசிவ ராவ்
M.R.Ry M.S.பாஸ்கர அய்யர்
M.R.Ry. ஸ்ரீனிவாச அய்யர்
M.R.Ry.K.வெங்கட ஆசார்லு
M.R.Ry.S.கிருஷ்ண அய்யர்
M.R.Ry.S.பஞ்சாபகேச அய்யர்
M.R.Ry.P. ஸ்ரீனிவாச அய்யர்
M.R.Ry.M.முகம்மது சிகந்தார் சாகிப்
M.R.Ry.T.V. சுந்தரேச அய்யர்
M.R.Ry.V. சேகர மேனன்
M.R.Ry.K.S.நல்லபெருமாள் பிள்ளை
M.R.Ry.T.V.செஷ அய்யர்
M.R.Ry.G.V.லஷ்மிநாராயணா
M.R.Ry.S.வைத்யநாத அய்யர்
M.R.Ry.S.V.பாலசுப்ரமண்ய அய்யர்
M.R.Ry.M.சத்யநாரயணமூர்த்தி
M.R.Ry.a. சிதம்பரம் பிள்ளை
M.R.Ry.P.அய்யாசாமி அய்யர்
M.R.Ry.P.ரகுநாத ராவ்
M.R.Ry.N.S.சுப்ரமண்ய அய்யர்
M.R.Ry.G.கிருஷ்ணசாமி அய்யர்
M.R.Ry.S.R.பூர்ணய்யா
M.R.Ry.S.R.கோபாலன்
M.R.Ry.M.N.வெங்கடேஷ்வரன்
M.R.Ry.P..சுப்ரமண்யன்
M.R.Ry.S..R.நரசிம்மன்
M.R.Ry.V.நரசிம்ம காமத்
M.R.Ry. டி சில்வா
M.R.Ry.V.ராதாகிருஷ்ண அய்யர்
M.R.Ry.K.S. விஸ்வநாத அய்யர்
M.R.Ry.V.சேது சர்மா
M.R.Ry.L.M.சுந்ரேச அய்யர்
M.R.Ry.N.தணிகாசல முதலியார்
M.R.Ry.N.காமத்
M.R.Ry.N.ராமசாமி அய்யர்
M.R.Ry.N.அச்சுத மேனன்
M.R.Ry.B.R.சோமயாஜுலு

மேட்டூர் நீர்த்தேக்க வளாகத்திலேயே 240 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் மின் நிலையமும்உள்ளது.
CP.சரவணன், வழக்கறிஞர்.


References
General Sir Arthur Cotton, His Life and Work by Lady Elizabeth Hope, William Digby 1900
History of the Cauvery-Mettur Project_ C.G.Barber 1954
நன்றி