2-ந்தேதி பெரிய பூகம்பம்
சென்னை, டிச. 31-
சென்னை பல்கலைக்கழகத் தில் பூமி அமைப்பியல் ஆய்வுத்துறை என்று ஒரு தனித்துறை உள்ளது. இந்த துறை சார்பில் பூமியின் மண் மற்றும் பாறை அமைப்புத் தொடர்பாக அடிக்கடி ஆய்வுகள் நடத்தப்படும்.
பூமிக்கு அடியில் உள்ள பாறைகளில் உண்டாகி இருக்கும் மாற்றம் காரணமாக வரும் 2-ந்தேதி பெரிய பூகம்பம் ஏற்படும் என்று இந்த ஆய்வுத்துறை கண்டு பிடித்துள்ளது. இது தொடர்பாக சென்னை பல்கலைக்கழக ஜியாலஜி துறை பேராசிரியர் என்.வெங்கடநாதன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பூமிக்கு அடியில் உள்ள பிளேட்கள் வேகமாக நகர்ந்து வருகின்றன. இதனால் உலகம் முழுவதும் மீண்டும் ஒரு பெரிய பூகம்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வரும் 2-ந் தேதி (திங்கட்கிழமை) இந்த பூகம்பம் உண்டாக வாய்ப்பு இருக்கிறது.
இந்த பூகம்பத்தின் தாக்கம் ரிக்டர்ஸ்கேல் அளவுபடி 7.0 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அதிகப்படியான தாக்குதலாக இருக்கும் என்பதால் உலகின் பல பகுதிகளில் பூகம்பத்தின் விளைவு உணர முடியும்.
சுமத்ரா தீவின் தென் மேற்கு பகுதியில் மையமாக கொண்டு இந்த பூகம்பம் உருவாகலாம். இந்த பூகம்பம் நிகழ 80 சத வீதம் வாய்ப்பு உள்ளது. இதன் தாக்கம் இந்தியாவில் அருணா சலபிரதேசம், இமாச்சல பிர தேசம் மாநிலங்களில் அதிகமாக இருக்கும்.
பூடான், ஜப்பானில் உள்ள ரியூகியூ தீவுகள், நியூசியூனியாவில் உள்ள நியூபிரிட்டன், அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ ஆகிய பகுதிகள் பூகம்பத்தால் பாதிக் கப்பட வாய்ப்பு உள்ளது. இந்த பகுதிகளில் பூகம்பத்தின் தாக்கம் 5 முதல் 6 ரிக்டர் ஸ்கேல் வரை இருக்கலாம்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மாலை மலர் செய்தி
ஆகா இது வேறா
காரணம் இதுவோ பாருங்கள்
http://www.ennar.blogspot.com/2005/10/blog-post_16.html