அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

2-ந்தேதி பெரிய பூகம்பம்


சென்னை, டிச. 31-

சென்னை பல்கலைக்கழகத் தில் பூமி அமைப்பியல் ஆய்வுத்துறை என்று ஒரு தனித்துறை உள்ளது. இந்த துறை சார்பில் பூமியின் மண் மற்றும் பாறை அமைப்புத் தொடர்பாக அடிக்கடி ஆய்வுகள் நடத்தப்படும்.

பூமிக்கு அடியில் உள்ள பாறைகளில் உண்டாகி இருக்கும் மாற்றம் காரணமாக வரும் 2-ந்தேதி பெரிய பூகம்பம் ஏற்படும் என்று இந்த ஆய்வுத்துறை கண்டு பிடித்துள்ளது. இது தொடர்பாக சென்னை பல்கலைக்கழக ஜியாலஜி துறை பேராசிரியர் என்.வெங்கடநாதன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பூமிக்கு அடியில் உள்ள பிளேட்கள் வேகமாக நகர்ந்து வருகின்றன. இதனால் உலகம் முழுவதும் மீண்டும் ஒரு பெரிய பூகம்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வரும் 2-ந் தேதி (திங்கட்கிழமை) இந்த பூகம்பம் உண்டாக வாய்ப்பு இருக்கிறது.

இந்த பூகம்பத்தின் தாக்கம் ரிக்டர்ஸ்கேல் அளவுபடி 7.0 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அதிகப்படியான தாக்குதலாக இருக்கும் என்பதால் உலகின் பல பகுதிகளில் பூகம்பத்தின் விளைவு உணர முடியும்.

சுமத்ரா தீவின் தென் மேற்கு பகுதியில் மையமாக கொண்டு இந்த பூகம்பம் உருவாகலாம். இந்த பூகம்பம் நிகழ 80 சத வீதம் வாய்ப்பு உள்ளது. இதன் தாக்கம் இந்தியாவில் அருணா சலபிரதேசம், இமாச்சல பிர தேசம் மாநிலங்களில் அதிகமாக இருக்கும்.

பூடான், ஜப்பானில் உள்ள ரியூகியூ தீவுகள், நியூசியூனியாவில் உள்ள நியூபிரிட்டன், அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ ஆகிய பகுதிகள் பூகம்பத்தால் பாதிக் கப்பட வாய்ப்பு உள்ளது. இந்த பகுதிகளில் பூகம்பத்தின் தாக்கம் 5 முதல் 6 ரிக்டர் ஸ்கேல் வரை இருக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மாலை மலர் செய்தி
ஆகா இது வேறா

காரணம் இதுவோ பாருங்கள்

http://www.ennar.blogspot.com/2005/10/blog-post_16.html

பின்லேடனின் அண்ணன் மகள்


சர்வதேச தீவிரவாதி பின்லேடனை அமெரிக்காவும் அதன் கூட்டு படையும் வலை போட்டு தேடி வருகிறது. நியூயார்க் உலக வர்த்தக மைய கட்டிடத்தின் மீது விமானத்தை மோதி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய `அல் கொய்தா' இயக்கத்தின் தலைவனான ஒசாமா பின்லேடன் ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் எல்லையில் பதுங்கி வாழ்கிறான்.

பின்லேடனின் அண்ணன் மகள் வாபா டாபர். 26 வயதான வாபா டாபர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பிறந்தவர். மாடல் அழகியாகவும் இசை பாடகியாகவும் நடன கலைஞராகவும் இருக்கும் வாபா டாபர் அமெரிக்க பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தீவிரவாதி பின்லேடன் எனது சித்தப்பாதான். ஆனால் அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

முகமது பின்லேடன் எனது தாத்தா. சவூதி அரேபியாவை சேர்ந்த அவர் கோடீஸ்வரர். அவருக்கு 54 குழந்தைகள். அவர்களில் ஒருவர்தான் என் தந்தை. எனது அப்பாவும் சித்தப்பா ஒசாமா பின்லேடனும் பார்க்க ஒரே மாதிரியாக இருப்பார்கள்.

பின்லேடன் ஒரு பழமைவாதி. முற்போக்கான எண்ணங்கள் அவருக்கு இல்லை. பின்லேடன் ஆதரவு பழமைவாதிகளால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. பின்லேடன் அண்ணன் மகள் என்பதால் எல்லோரும் என்னை ஒதுக்கி தள்ளுகிறார்கள். அவர்களாலும் எனக்கு ஆபத்து ஏற்படலாம். பின்லேடனால் எனது வாழ்க்கையே பாதித்து விட்டது. நான் வேறு மதத்தை சேர்ந்த ஒரு வரைத்தான் திருமணம் செய்து கொள்வேன்.

இவ்வாறு வாபா டாபர் கூறினார்.

அமெரிக்காவில் தங்கி இருக்கும் இவர் பிரான்சு நாட்டுக்கு சென்ற போது அங்குள்ள ஒரு இரவு விடுதியில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ்புஷ் மகள் ஜென்னாவுடன் நடனம் ஆடியதாகவும் கூறப்படுகிறது.
நன்றி மாலைமலர்

மூவகை குணங்கள்

மனிதரின் உடல் கபம் வாதம் பித்தம் என்னும் மூன்று தாதுக்களால் நிறைந்திருக்கிறது. அதே போன்று சத்துவகுணம் ரஜோகுணம், தமோ குணம் என்னும் முக்குணங்களாலும் நிறைந்திருக்கிறது.
சத்வ குணம் ஒளியான உருவம் கொண்டது.
ரஜோ குணம் துக்க உருவம் கொண்டது
தமோ குணம் அறிவின்னையின் வடிவம்
இம் மூன்று குணங்களாலுமே உலகில் செயல்கள் நடைபெறுகின்றன.
சத்தியம், உயிர்களிடம் அன்பு, பரிசுத்தம்,நல்லதில் நாட்டம்,பொறுமை, அடக்கம் போன்றவையெல்லாம் சத்வ குணத்தால் ஏற்படுபவை.
வேலைதட்திறன், சுறு சுறுப்பு, பொருளீட்டும் ஆசை, விதியை நாம்பாமை, மனைவியிடம் பற்று, போன்றவையெல்லாம் ரஜோ குணத்தால் ஏற்படுபவை:
பொய், பிடிவாதம், பகைபாராட்டுதல், ஹிம்சித்தல், நாஸ்திகம்,தூக்கம், சோம்பல், பயம் போன்றவையெல்லாம் தமோ குணத்தால் ஏற்படுபவை.

ரோடுகளை தோண்டக்கூடாது



அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மாநாடு மற்றும் தேசிய செயற்குழுக் கூட்டம் அடுத்த மாதம் ஐதராபாத்தில் நடக்கிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.


இந்த ஏற்பாடுகளை கவனிக்க அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக் விஜய்சிங்கை சோனியா நியமித்து இருக்கிறார். இவர் தலைமையில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட் டம் ஐதராபாத்தில் நேற்று நடந்தது.

அப்போது மாநாடு ஏற்பாடுகளுக்காகவும், தலை வர்களை வரவேற்கவும் கட்அவுட் மற்றும் கொடிகளை கட்ட ரோடுகளை தோண்டக்கூடாது என்று சோனியா உத்தரவிட்டுள்ளதாக திக் விஜய்சிங் தெரிவித்தார்.

ஐதராபாத் மக்களுக்கு எந்தவித பிரச்சினையும் ஏற்படாத அளவுக்கு மாநாட்டு ஏற்பாடுகளை செய்யும்படி சோனியாகாந்தி அறிவுறுத்தி இருப்பதால் பொதுமக்களுடன் நட்புறவு வைத்து மாநாடு ஏற்பாடுகளை செய்ய திக்விஜய்சிங் கேட்டுக் கொண்டார்.

இவரல்லவோ தலைவர்; நாட்டின் நலனில் அக்கரைகொண்டவர்

வெள்ள நிவாரணம்

அடுத்து, சட்டமன்றத் தேர்தல் வருகிறது. எனவே, ஒவ்வொரு கட்சியும் நிவாரணம் பெறுவதில், தருவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன. உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலை அழைத்து வருவதில், காங்கிரஸ் கட்சியும் தி.மு.கழகமும் ஆர்வம் காட்டின. மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச் செயலாளர் வைகோவும் பிரதமரைச் சந்தித்தார். மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் சந்தித்தனர். இந்தக் கட்சிகள் தனித்தனியாகச் சந்தித்ததைவிட, ஐக்கிய முன்னணியாகவே இணைந்து சென்று சந்தித்திருக்கலாம். கூட்டணி தர்மம் கூனிக் குறுகிப் போனது.

தமிழக வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ஐயாயிரம் கோடி ரூபாய் தேவை என்று, நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் உறுப்பினர் மோகன் கோரினார். போதிய நிதி பெறுவதில் நிதி அமைச்சர் சிதம்பரமும், தகவல் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதிமாறனும் தனிக் கவனம் செலுத்துகிறார்கள்.

நிதி ஒரு பிரச்னை அல்ல; முறையான விநியோகம் தேவை என்ற சிதம்பரத்தின் கருத்தில், நிரம்ப நியாயம் இருக்கிறது.

மாநிலங்களவை அண்ணா தி.மு.க. உறுப்பினர்களும் பிரதமரைச் சந்தித்தனர். முதல்வரின் கோரிக்கையை, முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

வெள்ள நிவாரணப் பணிகளுக்கு, ஆரம்பத்தில் 1742 கோடி ரூபாய் தேவை என்று முதல்வர் கோரினார். அதன்பின்னர், மூவாயிரம் கோடி தேவை என்றார். இறுதியாக, 13 ஆயிரம் கோடி ரூபாயும், அரிசி, மண்ணெண்ணெயும் தேவை என்று பெரும் பட்டியலோடு கோரிக்கை வைத்திருக்கிறார்.

மூவாயிரம் கோடி ரூபாய் என்றபோது, அதனை கலைஞர் உள்பட அனைத்துக் கட்சியினரும் ஆதரித்தனர். பதின்மூன்றாயிரம் கோடி என்றபோது, அனைவரும் வாயடைத்துப் போயினர். அடுத்து வரும் தேர்தலை மனத்தில் கொண்டு முன்வைக்கப்படும் அரசியல் கோரிக்கை என்று விமர்சனங்கள் எழுகின்றன.

நிவாரணத்தொகை வழங்குவதில் சில குளறுபடிகள் உள்ளது ஒரு வீட்டிற்கு கிடைத்து பக்கத்து வீட்டிற்கு கிடைக்காமலும் உள்ளது. காரணம் அந்த வார்டு தண்ணீர் சூழ்ந்த வார்டு இல்லை ஆனால் அந்த விட்டைச்சுற்றி தண்ணீர் நின்றிருக்கும் அந்த வீட்டிற்கு கிடைக்க வில்லை .
இதில் மக்களை விட அரசு அலுவலர்கள் படும் பாடுதான் பொரும் பாடாக உள்ளது.
சண் டிவியோ புருஷன் மனைவி சண்டையானாலும் அது வெள்ள நிவாரண முற்றுகை என கதை கட்டி விடுகிறது.
உலகம் எங்கோ போகிறது

பேச காசு MP

கோடி கோடி யாக செலவு செய்து பாராளுமன்ற உறுப்பிணர் ஆகி உங்களுக்ககாக நாங்கள் கேள்வி கேட்க வேண்டு மென்றால் நீங்கள் பணம் கொடுக்கத்தான் வேண்டும்.
ஓட்டுப் போட டீ ,வடை ,போண்டா காரில் ஏறாதவர்களுக்கு வாக்களிக்க கார் இத்தியாதி !இத்தியாதி!! சும்மா கிடைக்கு வில்லை MP பதவி அய்யா.
ஓட்டுப்போட இந்த மக்கள் எங்களிடம் லஞ்சம் வாங்கினர்; கேள்வி கேட்க நாங்கள் வாங்கினோம்.
இது தவறா?
நீங்களே சொல்லுங்கள்
இது அவர்களது உள்ளக்கிடக்கை சொல்ல வெட்கம்