அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

வேங்கையின் வேந்தன்-1-

கவிஞர் த.. சுந்தரராசன் அவர்கள் எழுதிய வேங்கையின் வேந்தன் கவி நாடகத்தை தங்களுக்கு இணையத்தில் வழங்குவதில் நான் பெருமை கொள்கிறேன் இது முழுக்க முழுக்க

சுந்தரராசன் எழுதியது தான்


அங்கம் 1

சோழமன்னன் விஜயாலயனும் அவன் அமைச்சர் கொடும்பாளூர் வேளிரும் அரசியல் நிலைப்பற்றிப் பேசுகின்றனர்.

பல்லவரைத் துணையாகக் கொண்ட பாண்டியரை எதிர்க்கும் போதெல்லாம் வென்றால் பலன் பல்லவர்க்கு; தோற்றால் இழப்பு சோழர்க்கு என்றால் அவர் துணை நம்கு எதற்கு? ' என்றான் சோழன். அதற்கு வேளிர் 'மறுமுறை பாண்டியர் படை எடுத்தால் பல்லவரை நாம் கேடயமாகப் பயன் படுத்த வேண்டும். அதனோடு நீர் வாள்மேல் கொண்டுள்ள நம்பிக்கையை உம் வழித்தோன்றல் ஆதித்தனிடம் தந்து விட்டு மூளையை நம்பும்; நமக்கு வெற்றி கிட்டும், என்றார். சரி என்ற சோழன் ஆதித்தனையும் முத்தரையனையும் ஒற்றாடப்பாண்டி நாட்டுக்குச் செல்லப் பணிக்கிறான்.


விஜயாலயன்:

கூறும், கொடும்பாளூர் வேளிரே! எம்வேலில்

கூருண்டு பாய்ச்சக் குறிதான் தெரியவில்லை...!

வேம்பெடுத்துப் பூச்சூடும் வேந்தனவன் அம்பெடுத்து

வீம்பெடுத்த சோழர் குடமூக்கில் வீசினான்முன்!

வாள் கொடுத்தோம், வாளுக்கு யாமும் எமக்காகத்

தோள்கொடுத்தார் பல்லவர்கள், தோற்றோம்;

அவர்வென்றார்

தோற்றதனால் யாமிழந்தோம் சோணாட்டின தென்பகுதி;

தோற்றதனால் யாதிழந்தார் சொல்லும் அப் பல்லவர்கள்?

மீண்டும் அரிசிலாற் றங்கரையில் வேலெடுத்த

பாண்டியர்கள் ஓர்பக்கம், பல்லவர்கள் எம்பக்கம்!

தென்பாண்டி வேந்தன்தன் சித்தத்திலும் சோழ

மண்தீண்டா வாறுநாம் வாட்டி விரட்டிவிட்டோம்.

யாம்பெற்ற தென்னஅவ் வெற்றியினால்? பல்லவர்கள்

தாம்பெற்றார் யாம்வென்ற சோழத் தரையெல்லாம்!

'வென்றால் பலன்அவர்க்கு' தேர்றறால் இழப்பெமக்கு'

என்றால் துணைஎதற்கு? சொல்லும் நீர்


வேளிர்:

இட்டஓர் நெல்

கட்டுக் கதிராகும் காவிரிபாய் சோழமன்னா!

மட்டுப் படாச்சினத்தை மாற்றித்தாம் கேட்டருள்க.

போரெடுத்துச் சோணாட்டு மண்ணின் புதுப்பகைவர்

யாரடுத்தார் என்றாலும் தாமே எழுந்திடுவார்

பல்லவர்கள் காக்கநமை...


விஜ:

பாம்பிடமிருந்து

வல்லூறு காத்த மணிப்புறாதான் நாமங்கு!


வேளிர்:

வல்லூறாய்ப் பல்லவரை எண்ணல் வலிவின்மை

கொல்லென்று கூறி எதிர்த்தல் அறிவின்மை.

புல்லுருவி போலே நாம் பல்லவஆல் பொந்தினிலே

மெல்ல வளர்ந்ததையே வீழ்த்தல் மதியடைமை!
வளரும்..2


தினமலர் செய்தி


இந்தி கற்றிருந்தால் 30 சதவீதம் பேருக்கு வடநாட்டில் வேலை கிடைத்திருக்கும் : கம்பன் விழாவில் அறிவொளி பேச்சு

புதுச்சேரி: நாம் இந்தி கற்றுக் கொண்டிருந்தால் 30 சதவீதம் பேருக்கு வடநாட்டில் வேலை கிடைத்திருக்கும் என்று பேச் சாளர் அறிவொளி கூறினார்.

புதுச்சேரி கம்பன் கழக இரண்டாம் ஆண்டு விழாவின் சுவை நுகர்மேடை நிகழ்ச்சியில் "இவர்கள் பார்வையில் கம்பநாடன்' என்ற தலைப்பில் அறிவொளி பேசியதாவது:

இங்கே கம்பனில் குறையிருப்பதாக கூறியிருந்தால் பொறுத்திருப்பேன். ஆனால், திருவாசகத்தில் சொன்னால் ஏற்கமாட்டேன். காரணம் நாத்திகரான அண்ணாதுரை, பாரதிதாசன் ஆகியோர் விரும்பி படித்தது திருவாசகம். ம.பொ.சி., உணர்ச்சி ததும்ப பேசக்கூடியவர். அவர் சிஷ்யர் கீரன் அதைவிட பேசுவார்.

தமிழகத்திற்கு திருத்தணி கிடைக்க போராடியவர் ம.பொ.சி., நேரு செய்த பெரிய தவறு மொழிவாரி மாநிலங்களைப் பிரித்தது தான். அதனால் தான் இப்போது தண்ணீரும் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை சட்டசபை எதிர்க்கிறது. நீதிமன்ற தீர்ப்பை துõக்கி எறிகின்றனர்.

ம.பொ.சி., ஆங்கிலத்தை எதிர்த்து இந்தியை ஆதரித்தவர். நான் கூட ஆரம்பத்தில் இந்தியை எதிர்த்தேன். அதைவிட முட்டாள்தனம் இல்லை என்பதை இப்போது உணர்கிறேன். நாம் இந்தி கற்றுக் கொண்டிருந்தால் 30 சதவீதம் பேருக்கு வடநாட்டில் வேலை கிடைத்திருக்கும். அரசியலில் வழுக்கி விழுந் தவர்கள் செய்த வேலை. தமிழகத்தை உயர்த்தும் தரம் அவர்களிடம் இல்லை. ஓட்டு போடுபவர் களின் கால்களில் சரணாகதி அடைந்தவர்களால் வாழ்வை தர முடியாது.

அரசியல் அதிகாரம் எங்கே தோன்றுகிறதோ அங்கே கூலிகள் தோன்றுவார்கள். அடுத்தவனை அரசியலில் மதிப்பதும் ஒரு அறம் தான். வெளியே இருந்து ஆதரிக்கிறேன் என்று சொல்லி கவிழ்த்து விடுவார்கள். புதுச்சேரியிலும், தமிழகத்திலும் அரசியலில் எப்போதும் மாற்றம் இருக்கும். இப்போது என்னவோ ஒத்து போகிறது. தற்போது 13ம் தேதி பதவியேற்கிறார்கள். மேலை நாடுகளில் தான் 13 ஆகாது. ஆனால், இங்கே ஆகும் என்று நினைக்கிறேன்.

இவ்வாறு அறிவொளி பேசினார்.
தினமலர் செய்தி

வேங்கையின் வேந்தன்

சுராதிராசன் என்பவன் முற்காலத்தில் முதல் சோழனாகப் பிறந்தான். அவனது மரபிலுதித்த இராசகேசரி ,பரகேசரி என்னும் இருவரும் தங்களுடைய கட்டளைகளால் ஏழு வகை தீவுகளையுடைய இந்த உலகம் முழுவதையும் காப்பாற்றி புலிக்கொடியினால் ஆணைசெலுத்தி ஒருவர் பின் ஒருவாராக ஆட்சிபுறிந்தனர்.

'இதுவே நீதியாகும் ' என்று கூற்றுவனுக்கு எடுத்துரைத்தவன் கிள்ளிவளவன் என்னும் சோழனாவான். குடகு மலையைக் குடைந்து காவிரியாற்று நீரை சோழ நாட்டிற்கு கொண்டு வந்து ஓடச்செய்தவன் கவேரன் என்பவன் ஆவான். மிருத்யுசித் என்னம் அரசன் தன் நாட்டில் திடீர் சாவு ஏற்படாமல் எமனிடத்தில் வெற்றி கொண்டான். இம் மூவரும் பெரு வெற்றியுடன் வாழ்ந்த சோழமன்னர்கள் ஆவார்கள்.

சித்திரன் என்னும் சோழன், தன் துகில் கொடியில் இந்திரனை புலிக்கொடியாகக் கொண்டவன்; அதனால் ' வியாக்கிரகேது' என்னம் சிறப்புப் பெயரையும் பெற்றான். சமுத்திரசித் என்னும் சோழன் கப்பல் போக்கு வரவுக்காக பூசந்தியை வெட்டி மேல் கடலையும் கீழ் கடலையும் ஒன்று சேர்த்து சலசந்தியாக்கினான். நீர் வேட்க்கையால் வருந்திய ஐந்து இயக்கர்களுக்கு தன்னுடைய ஐந்து ரத்த குழாய்களையும் அறுத்துக் கொடுத்து உதவிய வலிமையுடைவன் பஞ்சபன் என்னும் சோழ மன்னன் ஆவான் . நீர் நிரைந்த பெரிய கடலிடத்தே செலுத்திய கப்பல் போர்புரிதற்கு காற்றில்லாமையால் ஓட வில்லை. அப்பொழுது ஒரு சோழன் வளிச்செல்வனை வரவழைத்து ஏவல் கொண்டான் . அவ்வளவு வல்லமையுடைய சோழனை' வாதராசனை பணிக்கொண்டவன்' என்று கூறுவர்


அசுரர்கள் வானில் உலாவும் மூன்ற அச்சமுண்டாக்கும் மதில்களைக் கொண்டு பலருக்கும் தீங்கிழைத்தனர். அவற்றை அழித்து பெருமைக் கொண்டவன் தூங்கெயில் எறிந்த சோழ மன்னன் ஆவான். இரத்தின கற்கள் பதித்த ஒளிவீசும் தனது விமானத்தை வானில் உயர்ந்து பறக்கும் படி செய்தவன் உபரிசரன் என்னும் சோழன் ஆவான். பாண்டவர்கள் பாரதப் போரை முடிக்கும் வரையிலும் தளராமல் நின்று தருமனது கடல் போன்ற பெரிய படைக்கு உதவிபுரிந்தான் ஒரு சோழ மன்னன்.


கிள்ளி வளவன் குகைஒன்றின் வழியாக தனிமையில் நடந்து சென்றான்; அங்கு ஒரு நாக கன்னியைக் கண்டான். அவள் முல்லை மொக்குப் போன்ற பற்களையம், வேல் போன்ற விழிகளையும் உடையவளாக விளங்கினாள். நாகர்களின் கண்மணி அனைய அந்நாகர் கன்னிகையைக் கிள்ளிவளவன் மணம் புரிந்து கொண்டான். சோழன் செங்கணானுக்ம் சேரன் கணைக்கால் இரும்பொறைக்கும் போர் ஏற்பட்டது. அப் போரில் சோழன் வெற்றி பெற்றான்; வென்றவன், சேரனைச் சிறைப் பிடித்துக் காலில் விலங்கு பூட்டி வைத்திருந்தான். சேரனின் ஆசிரியப் பெருந்தகையாகிய பொய்கையார் 'களவழி நாற்பது' என்னும் நூலைப் பாடிச் சோழனைச் சிறப்பித்தார். அதனால் சேரன் காலில் பூட்டிய விலங்கைச் சோழன் வெட்டி எறிந்து அவனுக்குத் திரும்பவும் ஆட்சியை அளித்தான்.
கலிங்கத்து பரணியிலிருந்து

தொடரும்.........


வேங்கையின் வேந்தன

சரி விசயாழய சோழனைப் பற்றிப் பேசுகிறோமே! அவனது முன்னோர்கள் யார்? சூரிய குலத்தவன் என சொல்லுகிறோமே எப்படி இப்பொது அதைப் பார்ப்போமா?

எல்லா வரலாற்றுக்கும் முதன்மையானவர் திருமால். அவரது உந்தியினின்றும் தோன்றியது செந்தாமரை மலர் , அதிலிருந்து நான்முகன் தோன்றினார், அவனிடமிருந்து பெருமைக் குரிய மரீசி என்னும் அரசன் தோன்றினார். உயிர்களிடத்தில் அன்பு மிகுந்த மரீசி காசிபனை மகனாகப் பெற்றான். அவன் ஒளிக் கதிர்களையுடைய சூரியனைப் பெற்றான்.


மனு என்பவன் சூரயனுக்கு மகனாகப் பிறந்து உலகினைக் காப்பாற்றினான். அவன் தன்னுடைய சிறந்த மகனை ஒரு பசுவின் கன்றுக்குச் சமம் என்று கருதினான். எல்லாரும் வியப்புறும் படி அவனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்று நீதி வழங்கினான். இத்தகைய மனு நீதிச் சோழனுக்கு மகன் என்று சொல்லும்படியாக இக்குவாகு என்பவன் பிறந்தான்.


இக்குவாகுவுக்கு மகனாக விகுட்சி என்பவன்பிறந்தான், இவனது மகன் ககுத்தன், ககுத்தன் மிகவும் வலிமையுடையவன்; பகைவரை வெல்லுமளவுக்குப் போர் புரியக் கூடியவன். இவன் மிகுந்த ஆற்றலையுடைய செயல் பல புரிந்து, ஆயிரங் கண்களை யுடைய யானையை வாகனமாக் கொண்டான். இந்திரன் ஐராவதம் என்னும் யானையில் ஊர்ந்து வெற்றி கொண்டது போல, இவனும் ஒரு களிற்றில் ஊர்ந்து, தன்னை எதிர்த்துப் போர் புரிந்த அசுரர்களை எல்லாம் வென்று வெற்றிக் கொடி நாட்டினான்.


இயல்பிலேயே கோபத்தைக் கொண்டது புலி, சாதுவான தன்மையுடையது மான். புலிக்கு விருப்பமான உணவு மானிறைச்சி. அவ்வாறு இருந்தும் அவ்விரண்டும் ஒரே துறையில் ஒன்றா இருந்து நீர் பருகும்படி பசி, பகை முதலியவற்றைப் போக்கிய வலிமையுடையவன் மாந்தாதா என்னும் சோழ மன்னன். அவன் உலகத்துள்ள உயிர்களிடத்தில் செலுத்திய அருளின் தன்மையால் ஆட்சி புரிந்தான். முசுகுந்தன் என்ற மன்னன் போர்க்களத்தில் புகுந்து இமையவர் உலகம் முழுவதையும் எவ்விதத் தீங்குமின்றிக் காவல் புரிந்து அரசோச்சிக் காப்பற்றிய புகழ்த் தன்மையை உடையவன் ஆவன்.


பிருதுலாட்சன் என்னும் சோழ மன்னன் திருப்பாற்கடலை மந்தர மலையை இட்டுக் கலக்கினான். அதிலிருந்து இனிய சாவாமருந்தாகிய அமுதம் உண்டாயிற்று. அதனைத் தேவர்கள் உண்ணுமாறு கொடுத்தான். சிபி என்ற சோழ மன்னன் ஒரு புறா அடைந்த துன்பத்தை நீக்குவதற்காக ஒப்பற்ற தராசுத் தட்டில் தன் உடல் சதையை அறுத்து வைத்தான். அது புறாவின் எடைக்குச் சமமாக ஆகவில்லை. அதனால், அவனாகவே அந்தத் தட்டில் ஏறி அமர்ந்தான், அப்பொழுதுதான் எடை சரியாயிற்று தராசில் சிபிச் சக்கரவர்த்தியின் உடல் நிறுக்கப்பட்டது போல உலக மக்களின் உள்ளமாகிய தராசில் சிபியின் புகழ்உடம்பும் அளந்து அறியப்பட்டது.


கலிங்கத்து பரணியிலிருந்து

தொடரும்.........