அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

வீரப்பனை சயனைடு கொடுத்து கொலை

சுட்டுக் கொல்லப்பட்ட சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி சென்னை ஐகோர்ட்டில் இன்று ஒரு மனுதாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் மலை வாழ் மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கத்தை நடத்தி வருகிறேன். சமீபத்தில் மேட்டூர் அருகே சத்திரப்பட்டியைச் சேர்ந்த ஜோசியர் என்னை சந்தித்தார்.

அப்போது அவர் எனது கணவர் (வீரப்பன்) சுட்டுக் கொல்லப்படவில்லை பழனி என்பவரும் மற்றவர்களும் சேர்ந்து விஷம் கொடுத்த கொன்றனர் என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக உண்மை அறியும் குழு, சிவில் உரிமை பாதுகாப்பு குழு, மனித உரிமைகள் அமைப்பு ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டேன். பழனி சொன்ன தகவலை மைக்ரோடேப் மூலம் எடுத் துள்ளேன்.

பழனி கூறுகையில், அதிரடிப்படை போலீசார் தன்னை அணுகி சயனைடு விஷம் கொடுத்தார்கள். அதை மோரில் கலந்து வீரப்பன், சேத்துக்குழி கோவிந்தன், சந்திரகவுடா, சேதுமணி, ஆகியோருக்கு கொடுத்தோம் என்று கூறியிருக்கிறார்.

இதை குடித்து வீரப்பன் மயங்கி விட்டதாகவும் அதன்பிறகே அதிரடிப்படையினர் அவரது மீசையை எடுத்து விட்டு மாறு வேடத்தில் இருந்ததை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி அப்புறப்படுத்தினார்கள் என்றும் பழனி தெரிவித்தார்.

சயனைடு கொடுத்ததற்காக தங்களுக்கு அதிரடிப்படை தலா ரூ. 7 லட்சம் வழங் கிய தாகவும் பழனி சொல்லியிருக்கிறார்.

எனவே வீரப்பனை அதிரடிப்படையினர் சயனைடு கொடுத்து கொன்று இருக்கிறார்கள்.இதை மறைத்து ஏதோ சாதனை படைத்தது போல் வெகுமதி பெற்று விட்டார்கள். பிரதே பரிசோதனை செய்த டாக்டர்கள் வீரப்பன் உடலில் விஷம் இல்லை என்று கூறி மறைத்து விட்டார்கள். இதற்காக சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடமுறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் வள்ளிநாயகம், சுப்பிரமணியம் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாதனை படைத்ததாக கூறி அதிரடிப்படையினருக்கு வழங்கப்பட்ட பரிசுகளையும், இதர சலுகைகளையும் திரும்ப பெற வேண்டும். அவற்றை அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.

ஏற்கனவே வீரப்பன் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தக்கோரி முத்துலட்சுமி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்து இருந்தார். நீதிபதி கற்பகவிநாயகம் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன் இந்த மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. அதனுடன் சேர்த்து இன்று புதிதாக முத்துலட்சுமி தாக்கல் செய்த மனுவும் சேர்த்து விசாரிக்கப்படும்.
இது செய்தி
ஏன் நூற்றுக்கு மேல் கொலைகள் செய்த குற்றவாலியை நாள் நேரம் இடம் சொல்லி ஆயுதங்கள் இல்லாமல் மல்யுத்தம் செய்து பிடிக்கனுமோ?. எப்படி செய்தாலும் அது காவல் துறையின் திறமைதானே எதிரியை பிடிக்க வேண்டும் அல்லது ஒழிக்க வேண்டும் நாட்டிலுள்ள தேசத்துரோகிகள் இன்னமும் அவனது துதி பாடுவது தான் வேதணை.
மைக்ரோடேப் இந்த அளவிற்கு முத்துலட்சுமி முன்னேறி விட்டார்.

சித்தர் இராமதேவர்

இராமதேவர் ஒரு துணிவு மிக்க சித்தர் என்றே கூறவேண்டும். தமது நூல்களைத் தொடங்கும்போது தாயே தன்னைப் பாடச் சொன்னதாகவே கூறுவார். அவருடைய பக்தி எத்தகையது என்பதை அதன்மூலம் அறியலாம். இராமதேவர் வைத்கிய காவியம் 1000 என்ற நூலில்,
வளங்கண்டு குருவினுட வண்மை கண்டு
மகத்தான சிவசத்தி பூசை செய்து
நலங் கொண்டு சஞ்சாரச் சமாதி கொண்டேன்
நன்மையுட னஷ்ட திசை சுற்றும்போது
தலங்கண்டேன் அத்தலத்தின் நாதம் கணடேன்
தாயான மனோமணியாள் தன்மை பெற்றேன்
உளம்கனிய மனோன்மணியாள் வாவாஎன்று
உண்மையென்ற பொருள் ஈந்தாள் உருப்பெற்றேனே.


உருவான பொருளறிந்து உண்மை பெற்றேன்
உண்மையுடன் வாராம தேவா என்றாள்
கருவான கருக்குருவு மெனக்கே ஈந்தாள்
கைபாகம் முறைபாகம் கண்கின் பாகம்
திருவான ஒருபாகம் குருவின் பாகம்
செம்மையுடன் நன்றாகச் செப்பினாள் பார்
குருவானகுருவருளால் ஆத்தாள் என்னைக்
கூப்பிட்டுக் காப்பிட்டுக்குறி சொன்னாளே.

இப்படி தாயே தன்னை அழைத்து எல்லாம் விளக்கமாகச் சொல்லிக் கொடுத்து "நீ பாடு" என்று கூறியதாகக் கூறும் துணிச்சல் எவருக்கு வரும்?

அதைத் துணிச்சல் என்று சொல்வதா? பக்திப் பெருக்கு என்று சொல்வதா? அல்லது எல்லாம் கடந்த நிலை என்று சொல்வதா?

இராமதேவர் விஷ்ணு குலத்தில் பிறந்தார். மாசி மாதம் பூர நட்சத்திரம் இரண்டாம் காலில் பிறந்தார் என்று போக முனிவர் கூறுகிறார்.

மிகுத்திடவே சாமதேவர் ஜாதிபேதம்
மிக்கான விஷ்ணுகுலம் என்னலாகும்

திருவான ராமரென்ற தேவரையா
தீர்க்கமுடன் வந்துதித்த நேர்மை கேளீர்
கருவான மாசியென்ற திங்களப்பா
கடியதோர் பூரமது ரெண்டாம் காலாம்
மெய் ராம தெவ ராதி வேதப் பிராமணராம் பின்பு
உய்யவே மறவர்தெவர் உயர்குலச் சாதியப்பா

பிரமணராகப் பிறந்த ராமதேவர் பிறகு வீரம் மிகுந்த தேவர் குலத் தோன்றலும் ஆனார், என்று கூறுகிறார் கருவூரார்.

எப்படி என்பதை அவர் விளக்காத தால், தேவர் என்ற பெயரை அடிபப்படையாகக் கொண்டெ அவ்வாறு கூறியிருக்கலாம் என்று எண்ண இடமேற்படுகிறது.

இராமதேவர் சஞ்சார சமாதியில் லயிக்கும் இயல்புடையவராக இருந்தார். அவர்நடந்து கொண்டே இருப்பார் எண்ணம் எங்கோ இருக்கும். கண்கள் பாரா. காது கேளா. மூச்சும் ஓடாது.

அது ஒரு அபூர்வ நிலை, வாசிப் பயிற்சியில் முதிர்ச்சியடைந்த சித்தர்களாலேயே முடியும்.

ஒரு சமயம் காசியிலிருந்து விசுவநாதரைக் கொண்டு வந்து தாம் வசிக்கும் காயரோகணம் என்னும் நாகப்பட்டினத்தில் நிறுவ வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உண்டாயிற்று அந்த எண்ணத்துடனேயே எழுந்து நடக்கத் தொடங்கி விட்டார்.

எத்தனை நாள்? எத்தமை மாதம்? அல்ல ஆண்டுகளா? அவருக்கே தெரியாது. ஒரு நாள் சுயநினை வடைந்து பார்கையில் அவர் காசியில் இருந்தார்.

கங்கையில் நீராடினார். காசி விஸ்வநாதரை தரிசித்தார். மறுபடியும் கங்கையில் வந்து முழுகி எழுந்த போது அவர் கையில் ஒரு லிங்கம் அகப்பட்டது.

இராமதேவருக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்த லிங்கத்தில் காசி விஸ்வநாரை எழுந்தருளச் செய்து அதை நாகப்பட்டினத்தில் கொண்டு வந்து பிரதிட்டை செய்தார். நாள்தோறும் அதைப் பூசித்து வந்தார். தியானத்தில் ஆழ்ந்தார்.

அக்காலத்தில் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு கப்பல்கள் வந்துபோகும். அரேபிய நாடுகளிலிருந்து வரும் கப்பல்களேஅதிகம். இராமதேவர் அந்தக் கப்பல்களில் வரும் அராபிய வியாபாரிகளைப் பார்த்து வியப்படைவார். தாமும் அவர்களோடு பேச வேண்டும், பழக வேணடும் என்ற எண்ணம் உண்டாகி யிருக்கலாம்.

ஒரு நாள் தியானத்திலிருந்து கண் விழித்துப் பார்த்த போது அவர் அரேபியாவில் இருந்தார்.
எப்படி இங்கு வந்து சேர்ந்தார்? அவருக்கே தெரியாது

தியானத்தில் அந்த எண்ணத்தடன் அமர்ந்தவர் சஞ்சார சமாதியில் ஆழ்ந்தபடி அப்படியே மெக்காவுக்கு வந்து சேர்ந்து விட்டார். கடல் வழியாக வந்தாரா? தரைவழியாக வந்தாரா? ஒன்டறுமே அவருக்குத் தெரியாது. விண்வழியாகத்தான் வந்திருக்க வேணடும். சித்தர்கள் விண்வழிப்பயணம் செய்யும் வித்தகர்கள் ஆயிற்றே.

வரண்ட பாலைவணம்! எங்கும் மணல். கண்ணுக்கு எட்டியதூரம் வரை மணல்!

வியர்வை ஆறாகப் பெருகியது. இராமதேவர் பார்த்துக்கொண்டே நின்றார்.

தூரத்தில் ஒரு ஒட்டகம் வருவது தெரிந்தது. அதன் பின் மற்றொன்று . அதன் பினனால் வேறொன்று ஒட்டகங்கள் வரிசையாக வந்து கொண்டிருந்தன.

தங்கள் நாட்டில் யாரோ ஒரு அன்னியன் புகுந்து விட்டதைக் கண்டதும் அராபியர்கள் வேகமாக வந்து அவரைச் சூழ்ந்து கொண்டார்கள்.

"யார் நீ..?”
"எப்படி வந்தாய்?”
"எங்கே வந்தாய்?”

இராமதேவர் பதில் சொல்ல முயன்றார், செவி கொடுத்துக் கேட்பார், யாருமில்லை, அவர்கள் அவரைக் கொண்றே போட்டிருப்பார்கள். ஆனால்அவர்களில் ஒரு புத்திசாலி இருந்தான். அவனால் இராமதேவர் உயிர் பிழைத்தார்.

நீ ஏன் தீன் தேசத்துக்கு வந்தாய் உன்னைத் தண்டிக்காமல் விடமாட்டோம் என்று அவர்கள் கத்தினார்கள்.

இராமர் அவர்களுடைய தாள் பணிந்து மிகவும் நயமான வார்த்தைகளால் வேண்டிக்கொள்ள; “அப்படியானால் எங்கள் மதத்தில் சேர்ந்துவிடு,” என்று கூறி "இன்று முதல் உன் பெயர் யாக்கோபு,” என்று பெயர் சூட்டி அந்நாட்டு பழக்கப்படி சுன்னத்து செய்து உண்பதற்கு ரொட்டியும் கொடுத்த உபதேசம் செய்தார்கள்.

இராமதேவர் அவர்கள் மனம் போல்நடந்து கோண்டார். பிறகு அவர்கள் மக்கா நகரக் கோட்டைக்குள் இருந்த அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்கள். குரானை ஓது வித்தார்கள். யாகோபு அனைத்தையும் விரைவிலேயே கற்றுக் கொண்டு அவர்களுடைய நம்பிக்கையைப் பெற்றார்.

பாழாகிறது... பாலாறு

`காவிரி, தென்பெண்ணை பாலாறு, தமிழ் கண்டதோர் வைகை பொருணை நதி' என்று தமிழக நதிகளின் சிறப்பை பற்றி பெருமைபடக்கூறுவார் பாரதி.

தமிழ் மண்ணில் வற்றாத ஜீவ நதிகளாக பாய்ந்தோடி வளம் செழிக்க வைத்த இந்த நதிகளின் குறுக்கே, பக்கத்து மாநிலங்களான கர்நாடகமும், ஆந்திரமும் தடுப்பணைகளை கட்டி சீறிப்பாய்ந்து வந்த நதிகளுக்கு வேகத்தடை அமைத்து விட்டன. விளைவு -தமிழகத்தின் நன்செய், புன்செய் நிலங்கள் வானம்பார்த்த பூமியாகி விட்டன.

பட்டதெல்லாம் போதாது என்று இப்போது ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே ரூ.140 கோடியில் அணை கட்ட முடிவு செய்து இருப்பது புதிய பூகம்பத்தை கிளப்பி உள்ளது. வேலூர் மாவட்ட மக்களுக்கு பாலாறு ஜீவநாடியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.

பாலாற்றின் வரலாறு

பாலாறு கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்தில் உள்ள `நந்தி துர்கம்' என்ற மலைப்பகுதியில் உற்பத்தி ஆகிறது.

அங்கிருந்து 82 கி.மீட்டர் தூரம் வரையில் பயணித்து ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள குழபள்ளி மண்டலத்தில் வந்தடைகிறது. பிறகு குடிபள்ளி, குப்பம், ராமகுப்பம் போன்ற பகுதிகளில் மொத்தம் 23 கி.மீட்டர் தூரம் அது தன் பயணத்தை தொடர்கிறது.

அதன்பிறகு வேலூர் மாவட்டம் புள்ளூர் என்ற இடத்தில் தமிழகத்திற்குள் நுழைந்து பாய்ந்தோடி வருகிறது. வேலூர் மாவட்டம், காஞ்சீபுரம் மாவட்டம் வழியாக சென்று சதுரங்கப்பட்டினம் அருகே கடலில் கலக்கிறது. தமிழகத்தில் மட்டும் பாலாற்றின் பயணபாதை 242 கி.மீட்டர் தூரமாகும்.

உப நதிகள்

கர்நாடக மாநிலத்தில் தொடங்கி, ஆந்திரா, தமிழ்நாடு போன்ற 3 மாநிலங்களை வந்தடையும் பாலாற்றுக்கு உப நதிகளாக மலட்டாறு, அகரம் ஆறு, கவுண்டியா நதி, பொன்னை சேயாறு ஆகிய 5 ஆறுகள் உள்ளன.

கர்நாடக மாநிலம் `நந்தி துர்கம்' மலைப்பகுதியில் உற்பத்தி ஆகும் பாலாறு அந்த மாநிலத்தில் 82 கி.மீட்டர் தூரம் பயணித்து ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை வந்தடைகிறது.

சித்தூர் மாவட்டத்தில், முன்னாள் ஆந்திர மாநில முதல்- மந்திரியும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் சொந்த தொகுதியான குப்பம் தொகுதிக்கு பாலாறு வந்தடைகிறது.

ஆந்திர மாநிலத்தின் பாலாறு அணை கட்டும் திட்டம்

ஆந்திர மாநில அரசு கு�பம் அருகே உள்ள கணேசபுரம் எனும் வன�பகுதியில் பாலாற்றின் மீது சுமார் 140 கோடி ரூபாய் செலவில் பாலாறு அணைக்கட்டு கட்டதிட்டமிட்டுள்ளது.

முதலில் கு�பம் பகுதியில் �ர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அந்த மாநில அரசு பாலாற்றின் மீது ரூ.40 கோடி செலவில் தடு�பணைகள் கட்ட முடிவு செய்திருந்தது. இதற்கான வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வந்தது.

ஆனால், இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்றது. இந்த தேர்தலில் தெலுங்கு தேச கட்சி தோல்வியடைந்தது. ராஜசேகரரெட்டி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது.

பின்னர் தடு�பணைகள் கட்டும் பணிகள் நிறுத்தி வைக்க�பட்டன. கு�பம் தொகுதிக்கு ஹங்கரி- �வா �ர் திட்டத்தின் கீழ் கிருஷ்ணா நதியில் இருந்து த�ணீர் கொ�டு வர முடிவு செய்ய�பட்டது. இந்த திட்டத்துக்கு பல கோடி ரூபாய்கள் செலவாகும் என்று அறிக்கை தாக்கல் செய்ய�பட்டது.

இந்த நிலையில் கடந்த மாதம் கு�பம் தொகுதி காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயராமரெட்டி, கிட�பில் போட�பட்ட பாலாறு அணைக்கட்டு திட்டம் குறித்து ஆந்திர மாநில வேளா�மைத்துறை மந்திரி ரகுவீராரெட்டி மற்றும் ஆந்திர மாநில தலைமை கொறடா கிர�குமார் ரெட்டி ஆகியோரிடம் ஆய்வறிக்கை வழங்கினார்.

ஏற்கனவே ஹங்கரி-�வா நதி �ர் திட்டம் பல கோடி ரூபாய் செலவாவதால் இந்த பாலாறு அணைக்கட்டு திட்டம் குறித்து மீ�டும் பரிசீலனை செய்ய சம்பந்த�பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்க�பட்டது.

ஆய்வு

இதனை தொடர்ந்து அதிகாரிகள் கு�பம் சென்று கணேசபுரத்தில் பாலாறு அணைக்கட்டுதல் குறித்து தீவிர ஆய்வு செய்தனர். அதன் பின்னர் இதுகுறித்து முழு அறிக்கை விவரம் தயார் செய்ய�பட்டு அதனை விவசாய துறை மந்திரி ரகுவீரா ரெட்டிக்கு அனு�பி வைக்க�பட்டது.

இதுகுறித்து தற்போது இறுதி முடிவு எடுக்க ஆந்திர மாநில முதல்வர் ராஜசேகர ரெட்டி சம்பந்த�பட்டவர்களுடன் கலந்தாலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகின்றன. இறுதியாக இம்மாதம் (ஜனவரி) இறுதிக்குள் பாலாறு அணைக்கட்டு திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் ராஜசேகர ரெட்டி கலந்து கொள்ள உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பாதி�பு

ஆந்திர அரசு கு�பம் பகுதியில் அணை கட்டுவதால் வேலூர், காஞ்சீபுரம் மாவட்ட மக்கள் மிகுந்த பாதி�புக்கு உள்ளாவார்கள். பொதுவாக பாலாறு த�ணீரின்றி வற�டு கிடக்கும். எ�போதாவது மழை பெய்தால் மட்டுமே பாலாற்றில் த�ணீர் வரும்.

சுமார் 13 ஆ�டுகளுக்கு பின்னர் பாலாற்றில் வெள்ளம் வந்து இர�டு கரையை�ம் தொட்டு வழிந்து ஓடியது. இதனால் வேலூர் மாவட்டத்தில் உள்ள �ற்றுக்கணக்கான ஏரிகள் நிரம்பி வழிந்தன.

பல ஆ�டுகளாக த�ணீர் பிரச்சினையில் சிக்கி தவித்த மக்களுக்கு பாலாற்று வெள்ளம் மகிழ்ச்சியை கொடுத்தது. குடி�ர் பிரச்சினை தீர்ந்தது. கிணறு, குளம், குட்டைகள் நிரம்பின. பல ஆ�டுகளாக த�ணீரையே பார்க்காத ஏரிகள் த�ணீரில் நிரம்பி வழிந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் பாலாற்றுக்கு சென்று வெள்ளம் வந்ததை வேடிக்கை பார்த்தனர். மலர் தூவி�ம், கற்பூரம் ஏற்றி�ம் மகிழ்ந்தனர்.

ஏற்கனவே வேலூரின் 7 அதிசயங்களில் ஒன்றாக த�ணீர் இல்லாத ஆறு (பாலாறு) இடம் பெற்றுள்ளது.

பாலாற்றில் தடு�பணை வந்து விட்டால் சொல்லவே தேவையில்லை. அங்கு த�ணீர் வருவதே அபூர்வமாகிவிடும். பின்னர் பாலாற்றில் த�ணீர் வந்தால் அது உலக அதிசயமாக கூட கருத�படலாம்.

ஏனென்றால் பாலாற்றில் வரும் கொஞ்சம் த�ணீரை�ம் ஆந்திர அரசு தேக்கி வைத்து கொள்ளும். அ�போது வேலூர் மாவட்ட விவசாயிகள் எல்லாம் விவசாயத்தை விட்டுவிட்டு வேறு வேலை பார்க்கும் நிலை ஏற்பட்டுவிடும்.

புயலை உருவாக்கும் பிரச்சினை

இருக்கின்ற பிரச்சினைகள் போதாது என்று ஆந்திர அரசு தமிழகத்தில் புதிய புயலை உருவாக்கிவிட்டுள்ளது. காவிரி பிரச்சினையில் தமிழகமும், கர்நாடகமும் ��டகால பிரச்சினையில் சிக்கி தி�டாடிக் கொ�டிருக்கின்றன. காவிரி பிரச்சினையில் தஞ்சை மாவட்ட விவசாயிகள் மிகுந்த பாதி�புக்கு உள்ளாகி உள்ளனர். நொந்து �லாகி உள்ள விவசாயிகளை `சம்மட்டியால்' அடி�பது போல ஆந்திர அரசின் தடு�பணை பிரச்சினை இ�போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

தடு�பணை கட்ட�பட்டால் காவிரி பிரச்சினை போல, கு�பம் தடு�பணை பிரச்சினை பெரியதாக இருக்கும். ஆந்திர மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் விரோதம் உ�டாகும்.

வேலூர் மாவட்ட விவசாயிகள் மிகுந்த பாதி�புக்கு உள்ளாவார்கள். விவசாயிகள் தங்கள் நிலத்தில் விவசாயம் செய்தாலே அது அதிசயமாக கருத�படும்.

பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதை நிறுத்த கோரி முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஆந்திர முதல்-அமைச்சர் ராஜசேகர ரெட்டிக்கு கடிதம் அனு�பி உள்ளார். இந்த திட்டத்திற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்பட பல தலைவர்கள் எதிர்�பு தெரிவித்துள்ளனர்.

அணை கட்டுவதை எதிர்�பதில் தமிழகத்தில் அனைத்து கட்சியினரும் ஒருங்கிணைந்து செயல்பட வே�டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

உறவுகள் பாதிக்க�படும்

1892-ம் ஆ�டில் ஏற்பட்ட ஒ�பந்தத்தின்படி பாலாற்றில் ஆந்திர அரசு அணை கட்டுவதாக இருந்தால் தமிழக அரசின் ஒ�புதல் பெற வே�டும். ஆனால் இ�போது அந்த ஒ�பந்தம் மதிக்க�படாமல் ஆந்திர அரசு தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளதாக கூற�படுகிறது.

இது உ�மையானால் ஆந்திர, தமிழக மக்களின் உறவுகளை பாதிக்கும். அ�டை மாநில மக்கள் சகோதர மன�பான்மை�டன் வாழ வே�டும். அதற்கு குந்தகம் விளைவிக்க கூடாது.

பாலாற்றால் பயன்படும் தமிழக நிலம்

பாலாற்றின் மொத்த வடி�ர் பர�பளவு 13,209 சதுர கிலோ மீட்டராகும். வேலூர் மாவட்டத்தில் வாலாஜா வட்டத்தில் கடந்த 1858-ம் ஆ�டு பாலாற்றில் அணை கட்ட�பட்டது.

இந்த அணைக்கட்டு 801 மீட்டர் �ளமும், 1.50 மீட்டர் உயரமும் கொ�டதாகும். இந்த அணைக்கட்டில் கடந்த 1952-ம் ஆ�டு தானியங்கி�பலகைகள் பொருத்த�பட்டன. அதன் பின்னர் 1964-ம் ஆ�டு ரூ.66 லட்சம் செலவில் கூடுதல் பணிகள் மற்றும் கால்வாய் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள�பட்டன.

இந்த அணைக்கட்டின் இருபுறமும் மகேந்திரவாடி, காவேரி�பாக்கம், சக்கரமல்லூர், தூசி கால்வாய்கள் அமைந்துள்ளன. இவை அ�பகுதிகளில் பாசன �ர் நிலைகளுக்கு பயன் தருவதாக அமைந்துள்ளது.

இக்கால்வாய்கள் மூலம் வேலூர், திருவ�ணா மலை மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள 317 ஏரிகள் பாசன வாய்�பு பெறுகின்றன.

பாலாற்றினால் தமிழகத்தில் மட்டும் 32 ஆயிரத்து 746 ஹெக்டேர் நில�பர�பளவு �ர் பாசன பயன் உள்ளது. இதில் வேலூர் மாவட்டத்தில் மட்டும் 150 ஏரிகள் �ர்வரத்து பெற்று அவற்றின்கீழ் 15 ஆயிரத்து 409 ஹெக்டேர் பாசன வசதி பெறுகின்றது என்பது குறி�பிடத்தக்கது.

ஆந்திர அரசியலால் ஏற்படும் விபரீதம்

ஆந்திர மாநிலம் கு�பம் பகுதியில் பாலாறு அணை கட்டும் திட்டம் குறித்து அந்த பகுதியை சேர்ந்த சில அரசியல்வாதிகள் "இந்த திட்டம் வெறும் அரசியல் காரணமாகவே செயல்படுத்த�பட உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

சித்தூர் மாவட்டம், திரு�பதி அருகே உள்ள நாராவாரிபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நா�டு. இவர் தொடர்ந்து கு�பம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார். இவரது ஆட்சியின் போது கு�பம் தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்றது. இதனால் இந்த தொகுதி மக்கள் தொடர்ந்து சந்திரபாபு நா�டுவை ஆதரித்து வருகின்றனர்.

ஆதலால் இந்த கு�பம் தொகுதியில் தற்போது ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசு தொடர்ந்து நிரந்தர வாக்குகளை பெறவும், அதேசமயம் சந்திரபாபுநா�டுவின் செல்வாக்கை குறைக்கவும் பாலாறு அணைக்கட்டும் திட்டத்தை ஏற்படுத்தி உள்ளதாக அ�பகுதியை சேர்ந்த மூத்த அரசியல்வாதிகள் தெரிவிக்கின்றனர்.

மோதல் தொடங்கிவிட்டது

தமிழ்நாட்டின் பலத்த எதிர்�பை�ம் பொருட்படுத்தாமல், பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கான ஆயத்த பணிகளை ஆந்திர அரசு தொடங்கிவிட்டது.

இந்த பிரச்சினை தமிழக சட்டசபையிலும் எழு�ப�பட்டது. அ�போது பேசிய முதல்-அமைச்சர் ஜெயலலிதா; பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்தியே தீருவோம் என்றும் இதுதொடர்பாக சு�ரீம் கோர்ட்டை தமிழக அரசு அணுகும் என்றும் கூறினார்.

மாலை மலர்

இன்று NSB ன் பிறந்தநாள்



இந்திய சுதந்திரப் போராட்டத்திலும், இந்திய வரலாற்றிலும் முக்கிய இடம் பெற்றவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். வங்காளத்தில் புகழ் பெற்ற வழக்கறிஞராகத் திகழ்ந்த ஜானகி நாத்போஸ் பிரபாவதி தேவி தம்பதிகளின் 9வது குழந்தையாக 23/1/1897 ல் பிறந்தவர் சுபாஷ் சந்திரபோஸ். (நேருவைவிட எட்டு வயது இளையவர்).

லண்டனுக்குச் சென்று ஐ.சி.எஸ் (தற்போதைய ஐ.ஏ.எஸ்) படிப்பு படித்தார். முதல் வகுப்பில் தேறினார். ஆனால் வெள்ளையர் ஆட்சியில் கலெக்டராக வேலை பார்க்கப்பிடிக்காமல், "ஐ.சி.எஸ்" பட்டத்தை வாங்காமலேயே இந்தியா திரும்பினார். காந்தியை சந்தித்தார். காங்கிரசில் சேர்ந்தார். சுபாஷ் சந்திரபோசும், நேருவும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.

சுத்திரப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட நேதாஜி, பர்மாவில் மாண்டலே என்ற இடத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலை அடைந்த பின், 1938-ம் ஆண்டு ஹரிபுராவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். "சட்டமன்றங்களைக் கைப்பற்றினால் மட்டும் போதாது. வெள்ளையர்களை வெளியேற்ற தீவிரமாகப் போராட வேண்டும்" என்று வீர உரை நிகழ்த்தினார். அவர் புகழ் நாடெங்கும் பரவியது. அவரை "நேதாஜி" (தலைவர்) என்று மக்கள் அழைத்தனர். நேதாஜியின் தீவிரவாதப்போக்கு காங்கிரஸ் தலைவர்களுக்கு _குறிப்பாக மகாத்மா காந்திக்குப் பிடிக்கவில்லை.

1939-ம் ஆண்டு நடந்த காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக நேதாஜி அறிவித்தார். அவரை எதிர்த்து, பட்டாபி சீத்தாராமையாவை காந்தி நிறுத்தினார். கடும் போட்டியில், நேதாஜி வெற்றி பெற்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த காந்தி, "பட்டாபியின் தோல்வி, என் தோல்வி" என்று கூறினார். இதனால் மனம் புண்பட்ட நேதாஜி, காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஆயினும், காங்கிரசுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட "பார்வர்டு பிளாக்" என்ற அமைப்பை உருவாக்கினார். இரண்டாவது உலகப்போர் மூண்டதும், இந்திய மக்களின் ஒத்துழைப்பைப் பிரிட்டிஷ் அரசு கோரியது. ஆனால், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுவதில் ஈடுபட்டார். இதன் காரணமாக 1940 ஜுலையில் நேதாஜியை பிரிட்டிஷ் அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தது.

உலகப்போரின் ஆரம்பத்தில், பிரிட்டிஷ் படைகளுக்கு தோல்வியே ஏற்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, பிரிட்டனின் எதிரி நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்தியாவை விடுவிக்கவேண்டும் என்று நேதாஜி எண்ணினார். அதற்கு சிறையில் இருந்து வெளியே வரவேண்டும் என்று கருதினார். 1940 நவம்பரில், சிறையில் உண்ணாவிரதம் தொடங்கினார். சுபாஷ் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், பெரிய பிரளயமே ஏற்படும் என்பதைப் பிரிட்டிஷ் அரசு அறிந்திருந்தது. எனவே, உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி அவரிடம் அதிகாரிகள் கெஞ்சினார்கள். ஆனால் சுபாஷ் இணங்கவில்லை. உண்ணாவிரதம் தொடங்கி ஒரு வாரம் ஆயிற்று. நேதாஜியின் உடல் நிலை மோசம் அடைந்தது. வேறு வழியின்றி நேதாஜியை அரசாங்கம் விடுதலை செய்தது.

ஆனால் அவர் வீட்டைச்சுற்றி ரகசிய போலீசார் சாதாரண உடையில் 24 மணி நேரமும் வட்டமிட்டபடி இருந்தனர். எப்படியும் இந்தியாவிலிருந்து வெளியேறிவிடவேண்டும் என்று நேதாஜி தீர்மானித்தார். வெளிநாடு செல்ல உதவுவதாக, அவருடைய நண்பர்கள் சிலர் வாக்களித்தனர்.

1941-ம் ஆண்டு ஜனவரி 15-ம் நாள் நேதாஜி ஒரு முஸ்லிம் போல் தாடி வைத்துக்கொண்டு, மாறு வேடத்தில் தப்பிச்சென்றார். ஒரு காரில், கல்கத்தாவிலிருந்து 40 மைல் தூரத்தில் உள்ள ஒரு சிறிய ரெயில் நிலையத்துக்குச் சென்றார். "சயாதீன்" என்ற பெயரில், ரெயிலில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்தார். 17-ந்தேதி பெஷாவர் நகரை (தற்போது இது பாகிஸ்தானில் உள்ளது) அடைந்தார். அங்கே அவருடைய நண்பர்கள் காத்திருந்தனர். அவர்கள் நேதாஜியை ஒரு காரில் அழைத்துச் சென்றார்கள். மூன்று நாள் கழித்து பட்டாணியர் போல் மாறுவேடம் அணிந்து, நேதாஜி ஒரு காரில் பயணமானார். ரகமத்கான் என்ற நண்பர் உடன் சென்றார். கார் நெடுந்தூரம் சென்றது. கார் செல்ல முடியாத பாதையில் இருவரும் நடந்து சென்றார்கள். மறுநாள் மாலை இந்தியாவின் எல்லையைக் கடந்து ஒரு கிராமத்தை அடைந்தார்கள். அன்று இரவு ஒரு மசூதியில் தங்கினார்கள். மறுநாள் காலை எழுந்ததும், மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள்.

காட்டிலும், கரடுமுரடான மலைப்பாதைகளிலும் நடந்து, ஒரு ரோட்டை அடைந்தார்கள். அங்கு ஒரு லாரியில் ஏறி, ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் போய்ச் சேர்ந்தார்கள். அங்கு இத்தாலி நாட்டு தூதரக அதிகாரிகளுடன் நேதாஜி தொடர்பு கொண்டார். தான் யார் என்பதையும், இத்தாலிக்கு செல்ல விரும்புவதையும் தெரிவித்தார். அவர்கள் இது பற்றி இத்தாலி அரசுக்கு தகவல் அனுப்பினார்கள். பதில் வர தாமதமாயிற்று. எனினும் நேதாஜி பொறுமையுடன் பல நாட்கள் காத்திருந்தார். இறுதியில் அவரை அழைத்துச்செல்ல ரோமில் இருந்து இரண்டு தூதர்களை இத்தாலி அரசு அனுப்பி வைத்தது. மார்ச் 18-ந்தேதி காலை, நேதாஜி, அந்த இருவருடன் காரில் புறப்பட்டார்.

காபூல் வரை துணைக்கு வந்த அவர் நண்பர் ரகமத்கான், இந்தியாவுக்குத் திரும்பிச் சென்றார். நேதாஜிக்கு, பிரயாண அனுமதிச்சீட்டை இத்தாலி அனுப்பியிருந்தது. அதன் உதவியால், ரஷிய எல்லைக்குள் நேதாஜியும், மற்ற இருவரும் நுழைந்தனர். ரஷியா வழியாக இத்தாலிக்குச் செல்ல வேண்டும் என்பது நேதாஜியின் திட்டம். ஆனால் எதிர்பாராதவிதமாக ஜெர்மனிக்கு வருமாறு ஹிட்லரிடமிருந்து அழைப்பு வந்தது. அதை ஏற்ற நேதாஜி, ரெயில் மூலம் மாஸ்கோ சென்று அங்கிருந்து ஜெர்மன் தலைநகரான பெர்லினுக்குப் போய்ச்சேர்ந்தார். அவர் ஜெர்மனி வந்து சேர்ந்த செய்தியை மார்ச் 28-ந்தேதி ஜெர்மனி பத்திரிகைகள் வெளியிட்டன. அப்போதுதான், அவர் இந்தியாவில் இருந்து மாறுவேடத்தில் தப்பிச் சென்ற விஷயமே பிரிட்டிஷ் அரசுக்குத் தெரிந்தது! ஜெர்மனியில் நேதாஜிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சர்வாதிகாரி ஹிட்லரை நேதாஜி சந்தித்துப்பேசினார். இந்தியாவின் விடுதலைக்கு முழு ஆதரவு தருவதாக ஹிட்லர் உறுதி அளித்தார்.
தொடரும்...
நன்றி மாலைமலர்

வா வா தையே வா!!

வா------ தை
சென்ற தை முத் தையும்
வறடசியை வைத் தை
அதில் ஒரு தை
வெள்ளம் மழை யான தை
அழிவை கொடுத்த தை
இத் தை வந்தும் தீராத துயரத் தை
கொடுத்த தை என்னத் தை
சொல்ல எங்கள் சோக கதை

தமிழ் தமிழ் என்போம்
தமிழர் திருநாளாம் பொங்கலை
சிறப்பாக கொண்டாட மாட்டோம்
ஆங்கில வருடபிறப்பும் தீபாவளியையும்
சிறப்பாக கொண்டாடுவோம்;

பாதிரியார் தற்கொலை

சிறுமியை கற்பழித்த வழக்கில் காரமடை போலீசாரால் தேடப்பட்டு வந்த பாதிரியார் சார்லஸ் (45) தற்கொலை செய்து கொண்டார்.

விவேகானந்தரின் பிறந்த நாள

"எழுமின்.....விழிமின்"

இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்த விவேகானந்தரின் பிறந்த நாள் இன்று
1863 ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி பிறந்தார்.

சிகாகோ சொற்பொழிவுகள்


1. வரவேற்புக்கு மறுமொழி
செப்டம்பர் 11, 1893
அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே!


இன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழிகூற இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை. உலகத்தின் மிகப்பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அனைத்து மதங்களின அன்னையின் பெயரால் நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான இந்துப் பெருமக்களின் பெயரால் நன்றி கூறுகிறேன்.

இந்த மேடையில் அமர்ந்துள்ள பேச்சாளர்களுள் சிலர் கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, 'வேற்று சமய நெறிகளை வெறுக்காத பண்பினைப் பல நாடுகளுக்கு எடுத்துச் சென்ற பெருமை, தொலைவிலுள்ள நாடுகளிலிருந்து வந்துள்ள இவர்களைத்தான் சாரும்' என்று உங்களுக்குக் கூறினார்கள். அவர்களுக்கும் என் நன்றி. பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பு இன்றி ஏற்றுக் கொள்ளுதல், ஆகிய இரு பண்புகளை உலகத்திற்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன். எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்கிறோம். (ஒரு பகுதி மட்டும்).
கம்பரைப் பற்றிச் சொல்லும் பொழுது சடையப்பவள்ளலைப் பற்றியும் சொல்லித்தானே ஆகனும் அது போல.

இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்தவர் சுவாமி விவேகானந்தர் என்றால் விவேகாந்தரை உலகறிய செய்தவர் பாஸ்கரசேதபதியே ஆவார். 1893 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அனைத்து சமயங்களின் மாநாட்டில் தான் கலந்து கொள்வதாக இருந்த முடிவை மாற்றி விவேகானந்தரை அங்கு அனுப்பி வைத்தது மட்டுமின்றி அவர் 4 ஆண்டுகள் அங்கு தங்கி இந்து மதத்தின் அருமை பெருமைகளை உலகளவில் பறை சாற்றி விட்டு வருவதற்கு உதவி புரிந்தவர் இவர்! விவேகானந்தர் தாயகம் திரும்பிய போது தாயகத்தில் பதிக்கும் முதல் காலடி, என் தலை மீது தான் இருக்க வேண்டும் என வேண்டி, அத்துறவியின் பாதத்ததை தன் தலையில் தாங்கியதோடு அவரை ரதத்தில் வைத்து ஊர்வலமாக அழைத்து சென்று அந்த ரதத்தை தானெ இழுத்து சென்ற அரச பெருமான் அவர். விவேகானந்தர் கால் பதித்த இடத்தில் கல்வெட்டு ஏற்படுத்தி அதில் அன்று அவர் பொறித்த "சத்திய மேவ ஜெயதே"(வாய்மையே வெல்லும்) இன்றும் இந்திய அரசின் தேசிய வாசகமாக உள்ளது!
ஒரு நாட்டின் மன்னர் ஒரு துறவிக்கு கொடுத்த மரியாதை அது.
நாம் கொடுக்கும் மரியாதை இன்று அவர் பிறந்த நாளில் அவரை நினைத்துப் பார்ப்பது.

ஆர்.எஸ்.மனோகர் வைகுந்த பதிவியடைந்தார்

இன்று காலை கர்ஜ்ஜணை குரலோன் ,சாணக்கியர் ,இராவணேஷ்வரன் என பல நாடக பாத்திரங்கள் எடுத்து தனது கணீர் குரலால் தமிழகத்தில் முழக்க மிட்ட அந்த மாவீரர் ஆர் எஸ் மனோகர் இன்று அதிகாலை பரமபதமடைந்தார்.

மலருமுன்னே கசக்கப் பட்ட மலர்

மேட்டுப்பாளையம், ஜன. 9-

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சென்னாமலை கரட்டு மேடு பகுதியைச் சேர்ந்தவர் மாராத்தாள் (வயது 35). இவரது கணவர் மாரியப்பன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

மாராத்தாள் தனது மகள் கள் லட்சுமி (13), சித்ரா (10), மகன் ஆறுச்சாமி (5) ஆகியோருடன் தனியாக வசித்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

கூலி வேலைக்கு சென்று குழந்தைகளை காப்பாற்றி வந்த மாராத்தாள் வறுமையில் சிக்கி வாடினாள்.

இதையடுத்து அதே கிரா மத்தில் ஆதரவற்றோர் இல்லம் தொடங்கப்பட்டுள்ளதை அறிந்த அவர் தனது குழந்தைகள் 3 பேரையும் தனது அக்காள் பேத்தி கவுசல்யா (7) என்ற சிறுமியையும் அங்கு சேர்த்தார்.

மாதாமாதம் குழந்தைகளை பார்த்து வந்தார். இதற்கிடையே சென்னாமலை கரட்டில் செயல்பட்டு வந்த ஆதரவற்றோர் விடுதி மொங்கம்பாளையம் கிராமத்துக்கு இடம் பெயர்ந்தது. அங்கும் மாதம் ஒருமுறை சென்று பார்த்து வந்தார்.

அதேபோல கடந்த நவம்பர் மாதம் குழந்தைகளை பார்க்க சென்ற மாராத்தாளிடம் "உனது மகள் லட்சுமி பெரியவளாகி விட்டாள். அவளை வீட்டுக்கு அழைத்துச் செல்'' என்று விடுதியில் கூறிவிட்டனர்.

இதையடுத்து லட்சுமியை வீட்டுக்கு அழைத்து வந்தார். ஆனால் வீட்டுக்கு வந்தது முதல் லட்சுமிக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது.

அடிவயிறு வலிப்பதாகவும், சிறுநீர் கழிக்க முடியவில்லை என்றும் லட்சுமி கூறவே மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தாள்.

அங்கு 45 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது லட்சுமிக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது.

மேலும் பாலியல் ரீதியாக சித்ரவதை நடந்திருக்கலாம் என்றும் இதையடுத்து கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து கருக்கலைப்பு செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி லட்சுமியை மாராத் தாள் வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். வீட்டுக்குச் சென்றதும் லட்சுமியின் இடுப்புக்கு கீழ் செயல்பட வில்லை. மேலும் புண் ஏற்பட்டு சீழ் வடியத்தொடங்கியது.

அப்போதுதான் லட்சுமி தனது தாயிடம் அனாதை விடுதியில் தங்கியிருந்தபோது தனக்கு மாத்திரை கொடுத்து மயங்கச் செய்து விடுதி நிர்வாகி சார்லஸ் தன்னை கற்பழித்து விட்டார் என்று கூறினார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாராத்தாள் அழுது புலம்பினாள்.

இந்த விஷயம் மெல்ல மெல்ல அக்கிராமம் முழுவதும் பரவியது. உடனே சேவாபாரதி மாவட்ட செயலாளர் பால சுப்பிரமணியம், வக்கீல் கணேசபாண்டியன், ஆண்கள் சுயஉதவிக் குழுவினர் மாராத்தாள் வீட்டுக்குச் சென்று நடந்த சம்பவம் பற்றி விசாரித்தனர்.

அதேபோல தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக செயலாளர் பசீர் மற்றும் நிர்வாகிகளும் மாராத்தாள் வீட்டுக்கு சென்று விசாரித் தனர். அவர்கள் மீண்டும் லட்சுமியை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இடுப்புக்கு கீழ் செயலிழந்து புண் ஏற்பட்ட நிலையில் லட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவளது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனை அறிந்த கோவை குற்ற பதிவேடு துணை போலீஸ் சூப்பிரண்டு தண் டாயுதபாணி, அவினாசி டி.எஸ்.பி. முருகேசன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கனகராஜ், வின்சென்ட் பால்ராஜ், கென்னடி, சப்- இன்ஸ்பெக்டர்கள் மாரசாமி, பெண் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர்கள் அனந்தலட்சுமி, சந்திரலேகா, தவ்லத்நிஷா மற்றும் போலீசார் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்றார்கள். பாதிக்கப்பட்ட லட்சுமியிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது லட்சுமி போலீ சில் வாக்குமூலம் கொடுத்தார்.

அதில், பாதிரியார் சார்லஸ் தனக்கு மாத்திரைகள் கொடுத்ததாகவும் அதனை சாப்பிட்டபின் தன்னை கற்பழித்ததாகவும் அதன்பிறகேதான் பெரியமனுஷி ஆனதாகவும் தொடர்ந்து பலமுறை மாத்திரைகள் கொடுத்ததாகவும் கூறி இருக்கிறாள்.

உடனே போலீஸ் அதிகாரிகள் முறைப்படி போலீசில் புகார் கொடுக்கும்படியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

அதன்பேரில் மாராத்தாள் காரமடை போலீசில் புகார் செய்தார். போலீசார் பாதிரியார் சார்லஸ் மீது வழக்குப்பதிவு செய்து சிறுமி கூறுவது உண்மையா? உண்மையிலேயே சிறுமி கற்பழிக்கப்பட்டாளா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் மேட்டுப் பாளையம், காரமடை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொடியவனுக்கு என்ன தண்டணை கொடுப்பது
மாலை மலர்

பாலாற்றின் குறுக்கே அணை

வட தமிழகத்தில் பாயும் பாலாற்றின் குறுக்கே ஆந்திர மாநிலத்தில் அணை கட்ட தமிழக அரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அதில், '' பாலாறு வடதமிழகத்தில் ஒரு லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதியை அளிக்கிறது. வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கும் சென்னை புறநகர்ப் பகுதிகளுக்கும் பிரதான குடிநீர் ஆதாரமாகத் திகழ்கிறது. அத்தகைய பாலாற்றில் ஆந்திர மாநிலம் குப்பத்தில் 2 டி.எம்.சி. அளவுக்கு கொள்ளளவு கொண்ட அணையைக் கட்ட ஆந்திர அரசு முடிவுசெய்துள்ளது வடமாவட்ட மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. 1892 ஒப்பந்தத்தின்படி, மாநிலங்களுக்கு இடையில் ஓடும் பாலாற்றில் வரும் நீரைத் தடுக்கும் வகையில் புதிய அணையையோ கட்டுமானகங்களையோ தமிழக அரசின் முன் அனுமதியின்றி கட்டக்கூடாது. பாலாற்றில் அணை கட்டுவது தொடர்பாக ஆந்திர அரசு இதுவரை எந்தத் தகவலும் அளிக்கவில்லை. இப்பிரச்சனையில் உடனே தலையிட்டு அணை கட்டுவதை தடுத்து நிறுத்தவேண்டும்'' யார் செய்வார்கள் இதை .


காவிரிக்கு காவிரியும் போய்

பாலாறும் பாலாய் போய்

தமிழ் நாடும் நாசமா போகப்போகிறது

நீரோடும் ஆற்று மணலில் காணல் நீரோடப் போகுதைய்யா!!!

மேட்டூர் அணை

திருப்பள்ளி எழுச்சி

கூவின பூங்குயில்; கூவின கோழி;
குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்;
ஓவின தாரகை ஒளி; ஒளி உயத்து
ஒருப்படு கின்றது; விருப்பொடு நமக்குத்
தேவ நற் செறிகழற் றாளிணை காட்டாய்;
திருப்பெருந் துறையறை சிவபெரு மானே!
யாவரும் அறிவரி யாய்; எமக் கெளியாய்;
எம்பெரு மான்; பள்ளி எழுந்தரு ளாயே!

பொருள்: அதிகாலைப் பொழுது விதவிதமான ஒலிகள் விண்ணில் ஒலிக்கின்றன. இதனை விவரிக்கிறது இந்தப் பாடல். மகாதேவனே! திருப் பெருந்துறையில் உறையும் சிவபெருமானே! யாராலும் அறிதற்கு அரிய பரம்பொருளே! பக்தர்களாகிய எங்களுக்குஅறிந்து அரிய பரம்பொருளே! பக்தர்களாகிய எங்களுக்கு அறிந்து அனுபவிப்பதற்கு எளிமையாக திகழ்பவனே! அருமையில் எளிய அழகனே! பொழுது புலர்ந்து விட்டது. அழகிய குயில்கள் கூவத் தொடங்கி விட்டன. கோழிகள் கொக்கரக்கோ என்று கூவுகின்றன. பறவைகளின் விதவிதமான ஒலிகள் பரவுகின்றன. அதிகாலை நேரத்தில் ஆலயங்களில் சங்குகள்முழங்குகின்றன. ஆதவனின் ஒளி தோன்றத் தொடங்கிவிட்டது. அதனால் விண்மீன்களின் ஒளி குன்றுகிறது. உதய நேரம் வந்து விட்டது. எம்பெருமானே! பள்ளிக்கட்டிலில் இருந்து எழுந்தருள்வாயாக! தாங்கள் திருவுள்ளத்தில் எங்கள் மீது விருப்பு கொண்டு வீரக்கழல் அணிந்த உன் திருவடிகள் இரண்னையும் எங்களுக்குக் காட்டிஆட்கொண்டு அருளுக என்பது இப்பாடலின் பொருள்.

திருப்பள்ளி எழுச்சி

அருணன் இந்திரன்திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம்நின்மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயனக்
கடிமலர் மலர மற் றண்ணல் அங் கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
அருள்நிதி தரவரும் ஆனற்த மலையே
அலைகடலே பள்ளி எழுந்தரு ளாயே!

பொருள்: திருப்பெருந்துறையில் கோவில் கொண்டிருக்கும் சிவனே! நீ உன் அன்பர்களுக்கு செல்வத்தை அள்ளித்தரக்கூடியவன் நீ தரும் செல்வம் பொருட் செல்வம் அல்ல திருவட்செல்வம்.
அச்செல்வத்தை அள்ளி வழங்க வரும் ஆனந்த மலையாக காட்சி தருபவன் நீ. கிழக்கில் சூரியன் உதயமாகும் முன் அருணன் அத்திசையை அணுகினான். அருணோதயம் நடந்தது இருள் அகன்று போனது. உன்னுடைய முகம் உதயகிரியை போன்றது. உன் கருணை சூரியனைப் பொன்றது. அந்தச் சூரியன் மேல் எழஎழ இறைமையாகிய தேனை குடிக்கத் துடிக்கும் அடியர்களாகிய வண்டுகள் ஒலிழக்கின்றன. வண்டின் ஒலி போல தோத்திர முழக்கம் இருக்கின்றது. சிவனே நீ இதை உணர்வாயாக! திருப்பெருந்துறையில் கோயில் கொண்ருளிய சிவபெருமானே! அருளாகிய செல்வத்தை விலையாகக் கொடுப்பதால் உயரிய ஆனந்த மலையாக இருப்பவனே! அலைகளை உடைய கருணைக்கடலே திருப்பள்ளி எழுந்தருள்வாயாக!!!

திருப்பள்ளி எழுச்சி

மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் அருளிய பத்து பாடல்கள் திருப்பள்ளியெழுச்சி என்படும். இந்த பத்துப்பாடல்களும் சிவபெருமானை துயில் எழுப்பும் நிலையில் அமையும் திருப்படல்களாகும். சுப்ரபாதம் பாடி பெருமாளைத் துயிலெழுப்புவது போல சிவபெருமானை துயில் எழுப்பம் நிலையில் அமைந்த மரபு வழிப்பட்ட பாடல்கள் இவை. தினந்தோறும் அதிகாலையில் நீராடியவுடன் பாராயணம் செய்ய வேண்டிய நூலே திருப்பள்ளியெழுச்சியாகும்.
போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளெ!
புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்டு
ஏற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்:
சேற்றிதழ்க் கமலங்கள் மலரும் தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
ஏற்றுயர் கொடியுடையாய்! எமை உடையாய்!
எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!
பொருள்:"என் வாழ்வுக்கும் வளத்துக்கும் காரணகர்த்தாவாக அடிப்படையாக அமையும் முதல்வன் நீ. சேற்றில் நி்ன்று தாமைரகள் தம் இதழை விரித்துக் கொண்டிருக்கும் குளிர்நந்த வயல்களால் சூழப்பட்ட திருப்பெருந்துறையில் கோயில் கொண்டுள்ள சிவபெருமானே! என்னை அடிமையாகக் கொண்டவனே! எம்பெருமானே! உம்மைப் போற்றுகிறேன். பொழுது விடிந்து விட்டது. உன் அழகிய பாதங்கள் இரண்டுக்கும் இணை யான மலர்களைக் கொண்டு பூசனை புரிந்தும் எங்களுக்கு அருள் செய்வதற்காக உன் முகத்தில் மலரும் அழகிய புன்னகையை எங்கள் உள்ளத்தில் தேக்கிக் கொண்டு உன் திருவடியை வணங்குகிறோம். பள்ளியில் இருந்து எழுந்து அருள் செயவாயாக" என்பது இப்பாடிலின் பொருள்.

பொய் சொல்லலாம்

"பெண்களிடத்திலும, விளையாட்டாகவும், விவாக சமயத்திலும், உயிருக்கு ஆபத்து நேரிட்ட சமயத்திலும், தன் பொருள்களெல்லாம் பறிக்கப்படும் சமயத்திலும் பொய் சொன்னால் தவறில்லை".
என பிதாமகர் பீஷ்மர் கூறினார்

மலையாக மாறிய யானை

மதுரை - மேலூர் ரோட்டில் பயணம் செய்பவர்கள் 'ஆனை மலை'யைக் காணலாம். ஐகோர்ட் கிளைக்கு எதிரே ஒரு கி.மீ.நீளத்தில் யானை ஒன்று படுத்துகிடக்கும் வடிவத்தில் அமைந்துள்ள மலைதான் அது. பார்ப்பவர்களை வியக்க வைக்கு இதற்கு யானைமலை என்று பெயர் யாணை மலையின் அடிவாரத்தில் புராணகாலத்தில் இடம் பெற்ற நரசிங்க பெருமாள் கோவில், மகாபிரத்தியங்கரா தேவிகோவில், வேத நாராயண பெருமாள் கோவில்உள்ளன. இது தவிர அழகிய நீர்ச்சுணைகளும் உண்டு. பிரமாண்ட புராணம் உத்தர காண்டத்தில் 88 வது அத்தியாயம் மற்றும் திருவிளையாடல் புராணம் ஆகியவற்றில் யானை மலை தோன்றிய வரலாறு கூறப்பட்டுள்ளது.மதுரையை ஆண்டு பாண்டிய மன்னன் மீது சோழமன்னன் பல முறைபடையெடுத்தும் தோழ்வியை தழுவினான் பாண்டிய மன்னனை வீரத்தால் வெள்ளமுடியாது என்று உணர்ந்த சோழமன்னன் சூழ்சியாலும் மந்திரத்தாலும் அழிக்க முடிவு செய்தான். அதற்காக தன்னுடைய நாட்டில் மதத்தைப் பரப்பிக்கொண்டிருந்தசமணர்களுக்கு ஓலை அனுப்பி வரவழைத்தான் அவர்களிடம் பாண்டிய மன்னனை அழிக்க வழி கேட்டான். அதன் போரில் அசோக மரநிழலில் அக்னி குண்டத்தை சமணகள் அமைத்து யாகத் தீயை வளர்த்து மந்திரங்கள் ஓதினர். அதில் இருந்து மூ உலகையும் நடுங்கச் செய்யும் வகையில் ராட்சத வடிவத்திலான யானையை உருவாக்கினர். பின்னர், மதுரையையும், பாண்டிய மன்னனையும்அழித்து வர அந்த யானைக்கு உத்திரவிட்டனர். அதன் படி, யானை அசுரத்தனமான பிளிறலுடன் மதுரையை நோக்கி ஓடியது. பயந்து போன குடிமக்கள் அரன்மனைக்கு ஓடி பாண்டியமன்னனிடம்முறையிட்டனர். பாண்டியமன்னன் அதிர்ச்சியடைந்தான். மதுரைக் கோவிலில் குடிகொண்டிருந்த சிவபெருமானிடம் சென்று யானையை அழிக்கும் படி வேண்டினான்.

அப்போது மதுரை எல்லைக்கு வெளியே கீழ் புறத்தில் ஒரு அட்டாலை மண்டபம
கட்டும்படி கோவிலில் அசரீரி ஒலித்தது. அதன் அட்டாலை மண்டபம் கட்டி முடித்தான் மன்னன். அந்த மண்டப சேவகனாக சிவபெருமான் தோன்றி சிங்கமுக வடிவம் கொண்ட நரசிங்காஸ்திரத்தால் அந்த யானையை அழித்தார். யானை சாபவிமோசனம் அடைந்து மண்டியிட்டு அமர்ந்த இடம் கரிக்குன்று என்று அழைக்கப்பட்டது கரி என்றால் யானை,
குன்று என்றால் மலை என்று பொருள்பட யானை மலை என்று பெயர் மாறியது. பின்னர் அதுவே பேச்சு வழக்கில் ஆனைமலையாகிவிட்டது.
சிலப்பதிகாரம் பத்துப்பாட்டு ஆகியவற்றில் யானை மலையின் சிறப்புப்பற்றி
கூறப்பட்டுள்ளது. பாண்டிய மன்னனின் அமைச்சராக இருந்த காரி என்பவர் கி.பி.770 ஆம் ஆண்டு யானை மலை அடிவாரத்தில் வால் பகுதியி்ல் நரசிங்க பொருமாளுக்கு குகைக் கோயில் கட்டியதாக மலையில் உள்ள கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மலை உச்சியல் 23 அடி நீளமுள்ள இயற்கையான குகை காணப்படுகிறது. இந்த குகைக்கு செல்வது மிகவும் கடிணம். குகை வாயிலில் பிராமி கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. 1906ம் ஆண்டு பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டது. குகைக்கு உள்ளேயும் வெளியேயும் சமண முனிவர்கள் ஓய்வு எடுப்பதற்காக இயற்கையில் உருவான கல் படுக்கைகள் காணப்படுகின்றன.
கிபி முதலாம் நூற்றண்டு முதல் நாயக்கர் காலம் வரை பல காலங்களில் சிற்பக்
கலைக்குசான்றாக உள்ள யானை சிற்பங்கள், குடைவரை கோயில்கள், கட்டிடக்கோவில்கள் பல யானை மலைகள் காணப்படுகின்றன.
யானைமலை அடிவாரத்தில் கிபி 9ம் நூற்றாண்டில் வாழ்ந்தசமணமுனிவர்களின்
குடை வரைசிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் யானை மலையில் சமண முனிவர்கள் வாழ்ந்தது உறுதி செய்யப்படுகிறது.

ஆதாரம் 02-01-06 தினமலர்