அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

வேங்கையின் வேந்தன்

முதுமையினால் தளர்ந்தவனும், உடம்பில் தொண்ணூற்றாறு காயவடுக்கள் உள்ளவனும், கால்களில் பட்ட கொடிய காயத்தினால் எழுந்து நிற்கும் சக்தியை இழந்தவனுமான அக்கிழவன் எப்படியோ யுத்த அரங்கத்துக்கு வந்து விட்டான். பல்லவ சைன்யம் பின்வாங்கிக் கொள்ளிடத்துக்கு வடக்கே போய்விட்டால், சோழநாடு மறுபடியும் நெடுங்காலம் தலையெடுக்க முடியாது என்பதை உணர்ந்திருந்த அந்தக் கிழச் சிங்கத்தின் கர்ஜனை, பல்லவர் கட்சியில் எஞ்சியிருந்த வீரர்களுக்குப் புத்துயிர் அளித்தது.

"
ஒரு யானை! எனக்கு ஒரு யானை கொடுங்கள்!" என்றான்.

"
நமது யானைப்படை முழுதும் அதமாகிவிட்டது; ஒன்றுகூடத் தப்பவில்லை" என்றார்கள்.

"
ஒரு குதிரை! ஒரு குதிரையாவது கொண்டு வாருங்கள்!" என்று சொன்னான்.

"
உயிருள்ள குதிரை ஒன்று கூட மிஞ்சவில்லை" என்று சொன்னார்கள்.

"
சோழநாட்டுச் சுத்தவீரர்கள் இருவரேனும் மிஞ்சி உயிரோடு இருக்கிறார்களா? இருந்தால் வாருங்கள்!" என்று கிழவன் அலறினான்.

இருவருக்குப் பதிலாக இருநூறுபேர் முன்னால் வந்தார்கள்.

"
இரண்டு பேர் - தோளில் வலிவும் நெஞ்சில் உரமும் உள்ள இரண்டு பேர் - என்னைத் தோள் கொடுத்துத் தூக்கிக் கொள்ளுங்கள். மற்றவர்கள் இரண்டு இரண்டு பேராகப் பின்னால் வந்து கொண்டிருங்கள். என்னைச் சுமக்கும் இருவர் விழுந்தால், பின்னால் வரும் இருவர் என்னைத் தூக்கிக் கொள்ளுங்கள்!" என்றான் அந்த வீராதி வீரன்.

அப்படியே இரண்டு பீமசேனர்கள் முன்னால் வந்து அந்தக் கிழவனைத் தோளில் தூக்கிக்கொண்டார்கள்.

"
போங்கள்! போர் முனைக்குப் போங்கள்!" என்று கர்ஜித்தான்.

போர்க்களத்தில் ஓரிடத்தில் இன்னமும் சண்டை நடந்து கொண்டிருந்தது. தெற்கத்தி மறவர்கள் எஞ்சி நின்ற பல்லவ வீரர்களைத் தாக்கிப் பின்வாங்கச் செய்து கொண்டே வந்தார்கள்.

இருவருடைய தோள்களில் அமர்ந்த கிழவன் அந்தப் போர் முனைக்குப் போனான். இரண்டு கைகளிலும் இரண்டு நீண்ட வாள்களை வைத்துக் கொண்டு திருமாலின் சக்ராயுதத்தைப் போல் சுழற்றிக்கொண்டு, எதிரிகளிடையே புகுந்தான். அவனைத் தடுக்க யாராலும் முடியவில்லை. அவன் புகுந்து சென்ற வழியெல்லாம் இருபுறமும் பகைவர்களின் உடல்கள் குவிந்து கொண்டேயிருந்தன.

ஆம்; இந்த அதிசயத்தைப் பார்ப்பதற்காகப் பின்வாங்கிய வீரர்கள் பலரும் முன்னால் வந்தார்கள். கிழவனுடைய அமானுஷ்ய வீரத்தைக் கண்டு முதலில் சிறிது திகைத்து நின்றார்கள். பிறகு ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக்கொண்டு தாங்களும் போர் முனையில் புகுந்தார்கள்.

அவ்வளவுதான்; தேவி ஜயலஷ்மியின் கருணாகடாட்சம் இந்தப் பக்கம் திரும்பிவிட்டது.

பல்லவர் படைத் தலைவர்கள் பின்வாங்கிக் கொள்ளிடத்துக்கு வடகரை போகும் யோசனையைக் கைவிட்டார்கள்.

மூன்று வேந்தர்களும் தமக்குரிய மூலபல வீரர்கள் புடைசூழப் போர் முனையில் புகுந்தார்கள். சிறிது நேரத்துக்கெல்லாம் பாண்டிய வீரர்கள் பின்வாங்கத் தொடங்கினார்கள். பிறகு அவர்கள் பாண்டிய நாட்டின் எல்லைக்குச் சென்றுதான் நின்றார்கள்.

கங்க மன்னன் பிரிதிவீபதி அன்றையப் போரில் செயற்கரும் செயல்கள் பல புரிந்த பிறகு தன் புகழுடம்பை அப்போர்க் களத்தில் நிலைநாட்டி விட்டு வீர சொர்க்கம் சென்றான்.

இக் கிழவன் தான் விசயாழய சோழன்

(பொன்னியின் செல்வனில் இருந்து)

வேங்கையின் வேந்தன்

இது கட்டியமல்ல வரயிருப்பதை முன்பகர்வது காண்க:

வாணன்: (தனிமையில்)
முன்புள சிறந்த மதுரை மூதூர்
கன்னல் தமிழின் பிறப்பிடம்!
கலைகளின் இருப்பிடம்
ஆனால் இன்றோ,
தேமா புளிமா தேடிய கவிஞர்
பாய்மா கைம்மா தேடுகின் றார்கள்!
இரததினம் இரகதம் விலைபேசி னோர்கள்
இரத்தத்தை இன்று விலைபேசு கின்றார்;
பாலவி ஆடை பதமுணர்ந் தோர்கள்
வேலாவி குடிக்கும். விதம்கற் கின்றானர்!
வெட்கச் சிவக்கும் குமாரிகள் இன்று
விழித்துப் பார்த்தால்
கறந்தபால் காய்ச்சிய பாலாய்ச் சுண்டும்!
ஈயமர்ந் திட்டால் இதயம் துடிக்கும்
தாயும்இன்றுதான் பெற்ற
சேயின் மார்பிலே
விழுப்புண் மாலையைக் காண விழைகிறாள்!
எல்லாரிடத்திலும் எதனி டத்திலும்
எல்லா இடத்திலும் போர்வெளி; வெறிப்போர்!

வேங்கையின் வேந்தன்

வருகிறான் விசயாலய சோழன் சங்க காலத்திற்கு பிறகு தமிழகத்தில் தஞ்சையில் மறுபடியும் சோழர் ஆட்சியை அமைத்தவன் இவனே


1.விசயாலய சோழன் (850 – 880 , 836 – 870 )

2. 2. ஆதித்த சோழன்/பெ. விசயாலய சோழன் 871-907

3.1ம் பராந்தக சோழன் த/பெ. ஆதித்த சோழன்907-955

4.கண்டராதித்த சோழன்/பெ. 1ம் பராந்தக சோழன் இரண்டாவது மகன் 950-957

5.அரிஞ்சயன்/பெ. 1ம் பராந்தகனின் 3வத மகன் 956-957

6.2ம் பராந்தகன்/பெ. அரிஞ்சயன் 957-970

7.உத்தமசோழன்/பெ. கண்டராதித்த சோழன் 973-985

8.1ம் ராஜராஜன்/பெ. 2ம் பராந்தகன் 985-1014

9.1ம் ராஜேந்திரன்/பெ. 1ம் ராஜராஜ ன் 1012-1044

10.1ம் ராஜாதிராஜன்/பெ. 1ம் ராஜேந்திரன் மூத்தமகன் 1018-1054

11.ராஜேந்திர சோழதேவன் /பெ. 1ம் ராஜேந்திரனின் 2வது மகன் 1051-1063

12.வீரராஜேந்திர சோழன்/பெ. ராஜேந்திர சோழதேவன் 1063-1070

13.ஆதிராஜேந்திர சோழன்/பெ. வீரராஜேந்திர சோழன் 1067-1070

14.1ம் குலோத்துங்க சோழன் Җ ராஜேந்திர சோழன் மகளின் மகன் 1070-1120

15.விக்ரமசோழன்/பெ. 1ம் குலோத்துங்க சோழன் 1118-1135

16.2ம் குலோத்துங்க சோழன்/பெ. விக்ரமசோழன்1133-1150

17.2ம் ராஜராஜ சோழன்/பெ. 2ம் குலோத்துங்க சோழன் 1146-1163

18.2ம் ராஜேந்திர சோழன் Җ 2ம் ராஜராஜனின் மைத்துனன் 1163-1178

19.3ம் குலோத்துங்கள் /பெ. 2ம் ராஜராஜ சோழன் 1178-1218

20.3ம் ராஜராஜசோழன்/பெ. 3ம் குலோத்துங்கள் 1216-1256

21.4ம் ராஜேந்திரசோழன் /பெ.3ம் ராஜராஜசோழன் 1246-1279


இவனைப் பற்றிய ஒரு கற்பனை நாடக்தை லலோய கல்லூரியின் தமிழ் பேராசியர் கவிஞர்.. . சுந்தரராசன் அவர்களிடம் தோன்றிய நாடகம்.


வான் பெற்று வட்டநிலா இழந்தால் ஏது பயன்?


சீறும் பாபம்பு ஆடி அடங்கல் அதட்டலுக்கா? பாட்டுக்கா?


இழுத்த வாட் கெதிரிகள் எழுத்தா ணிகள?


வண்டறியாமல் இருக்க முல்லை மணத்திறகு முக்காடு இடுகிறாய்


எரித்திடும் தீயை இள நிலா வாழ்த்துமா?


வேடம் அம்பைப் புறாவும் விரும்புமா?


பட்டடைக்கல் நீர் , அவரோ சம்பமட்டி; நான்...நடுவில் சுட்டெடுத்த ஓர் இரும்புத் துண்டு


தீக்கு இலவம் பஞ்சு நிபந்தனைகள் செப்ப வந்தால் வாங்க்கழகு என்றதனைக் கேட்கும் வழக்கமுண்டோ?


வீர வழுதுமரம் புல்லுருவி வீழ்த்திடுமா?


(டைப்பிங்கில் உள்ளது)

கள்ளர் சரித்திரம் - 28 -

இனி, இவர்களோடு ஓரினமாக எண்ணப்படுகினற மற்றை வகுப்பினரைக் குறித்தும் இங்கே சிறிது கூறுதல் பொருத்தமாகும்என நினைக்கின்றேம்


கள்ளர்களைப் போன்றே மறவர் என்போரும் தமிழ் நாட்டில் ஓர் பெருங் குழுவினராவர். இராமநாதபுரம் சேதுபதி மன்னர் இவ்வகுப்பினரென்பதை யறிவோர் இவ்வகுப்பானது தொன்றுதொட்டு எவ்வளவு மேன்மை வாய்ந்துள தென்பதை உணரக்கூடும். சேதுபதிகளைப் போன்று தமிழை வளர்த்தோரும், புலவர்களை ஆதரித்தோரும், வள்ளன்மை சிறந்து விளங்கினோரும், எண்ணிறந்த அளங்க ளியற்றினோரும் உலகத்தில் யாவருளா? அன்றியும் இராமேச்சுரம் சென்று இறைவனை வழிபட்டு வருவோர் யாவரே யெனினும் அவர்கள் சேதுபதிகளையும் தரிசித்து வருவது தொன்றுதொட்ட வழக்கமாயிருப்பது அன்னோரது ஒப்பற்ற மாட்சியைப் புலப்படுத்துவதாகும். இராமநாதபுரத்தரசர் போன்றே செல்வத்திலும் பெருமைமயிலும் சிறந்த சிவகங்கை மன்னரும் இவ்வகுப்பினராவர். இவர்களேயன்றி, பாலவனத்தம், பாலையம்பட்டி, சிங்கம்பட்டி, கடம்பூர், ஊற்றுமலை, சேற்றூர், சொக்கம்பட்டி, ஊர்க்காடு, கொல்லங்கொண்டான் முதலிய பல சமீன்றார்கள் இவ்வகுப்பினராக வுள்ளனர்.


அகம்படியரென்போரும் ஓர்பெருங் குழுவினரான தமிழ் மக்களாவர். இவர்களும் தொன்றுதொட்டு உயர்நத நிலையில் இருந்து வந்தருக்கின்றனர். இவ்வகுப்பினரில் பெருநிலமும், பெருஞ்செல்வமும் வாய்ந்தோர் அளவற்றவர்கள் இப்பொழுதும் இருக்கின்றனர்.


இம்மூன்று வகுப்பினரும் அஞ்சாமை, வீரம், ஈகை முதலிய குணங்களில் ஒரு பெற்றியே சிறந்து விளங்குவோராவர். மற்றும் பல தன்மைகளில் அவர்கள் ஒப்புமையுடையராவர். மற்றும் பல தன்மைகளில் அவர்கள் ஒப்புமையுடையரா யிருக்கினறனர். இம்மூன்று வகுப்பும் ஒவ்வொருகாலத்தில் கல்யாணம் முதலிய வற்றாலும் ஒன்றுக்கொன்று மசம்பந்தப் பட்டிருக்கின்றன. இராமநாத புரத்தரசரக்குச் செம்பிநாடன் என்ற பட்டமும், சேற்றூர் ஜமீன்றார்க்கு சோழகர் என்ற பட்டமும், கொல்லங் கொண்டான் ஜமீன்றார்க்கு வாண்டையார் என்ற பட்டமும் இருத்தலாலும், சேற்றூர் ஜமீன்றார் தஞ்சைப் பக்கத்திலிருந்து வநதவர் என்றும் கூறப்படுதல் முதலியவற்றாலும் இவர்களும் ஆதியில் கள்ளர் வகுப்பினரே யாவர் என்று சிலர் கருதுகின்றனர். இவர்கள் எல்லோரும் ஒரே வகுப்பனர் என்ற உணர்ச்சி இப்பொழுதும் இருந்து வருகறது. இவ்வுணர்ச்சிக்கு அறிகுறியாகச் சிற்சில இடங்களில் சங்கங்களும் ஏற்படுத்தியிருக்கின்றனர். இவர்கள் மேன்மேலும் ஒருமையுற்றுப் பெருமை யெய்துவார்களாக. இவர்கள் பெருமை மயுறுவதென்பதும், தமிழ் நாடு பெருமையுறுவதென்பதும் ஒன்றே; தனித்தமிழ்நாட்டிலுள்ள தனித்தமிழ்ப் பெருமக்கள் இவர்களாதலின் இவ்வுரிமையினாலே இவர்கள் தமிழ்மொழியைப் போற்றிப் புரந்துவந்திருக்கின்றனர். மதுரையிலும் கரந்தையிலும் உள்ள தமிழ்ச் சங்கங்கள் இவர்களால் நிருவப் பெற்றும் புரக்கப் பெற்றும் வருவதிலிருந்து இப்பொழுதும் இவர்கள் தமிழ் மொழிக்கு ஆதரவாகவிருப்பது புலனாம். எனினும் இவர்கள் தம் தாய்மொழியைப் புரப்பதில் இன்னம் மிகுதியான ஊக்கமெடுத்துக் கொள்ளக் கடமைப்பாடுடையர் என்பதனைக் குறிப்பிட விரும்புகின்றோம். இனி, தமிழ் நாட்டிலுள்ள பல்வேறு வகுப்பினரும் தாம் இப்பொழுது பல பிரிவினராக இருப்பினும் தாமெல்ல்ாம் தமிழ்த்தாயின் மக்களாகிய ஒரே யினத்தவரென்னும் உண்மையுணரந்து யாவரும் அன்பும் ஒற்றுமை யுணர்ச்சியும் உடையவராக. எவரையும் சிறியரென்று இகழாதிருப்பாராக. தம் பண்டைப் பெருமையை நினைவு கூர்ந்து, மீட்டும் அப்பெருமையை நிலை நிறுத்துதற் பொருட்டு ஒற்றுமையுடனும் ஊக்கத்துடனம் உழைப்பாராக. கருணையங் கடலாகிய இறைவன் இவர்கட்கு எல்லா அறிவாற்றலையும் தந்து இந் நாட்டினைப் பாதுகாப்பானாக. எங்கும் அவன் புகழே மிகுதல் வேண்டும். மன்னுயிரெல்லாம் இன்புற்று வாழ்தல் வேண்டும்


கள்ளர்சரித்திரம் முற்று

கள்ளர் சரித்திரம் - 27 -

1921-ம் வருடம் எடுத்தகணக்குப்படி கள்ளர்களின் ஜனத்தொகை

ஜில்லா

ஆண்

பெண்

தஞ்சாவூர்

99671

108013

திருச்சிராப்பள்ளி

13081

14345

புதுக்கோட்டை

24432

26679

மதுரை

94205

92527

இராமநாதபுரம்

20543

24864

திருநெல்வேலி

6115

6468

இனம்

மொத்தம்

படித்த

வர்கள்

ஆங்கிலம்

படித்தவர்கள்

ஆண்

259428

42223

988

பெண்

274544

1442

23

மொத்தம்

533972

43665

1011

இங்கே குறிப்பிட்ட இடங்களிலன்றி, தென் திருவாங்கூர், கொழும்பு, இரங்கூன், சிங்கப்பூர் முதலிய இடங்களில் இவர்கள் மிகுதியாக இருக்கின்றனரெனத் தெரிகிறது. இரங்கூனிலும், சிங்கப்பூரிலும் இவர்கள் முறையே 'இந்திரகுல மகாஜன சங்கம்' 'கள்ளர் மாக சங்கம்' எனச் சங்கங்கள் ஏற்படுத்தியும் நடத்தி வருகின்றனர். மொத்தத்தில் இவர்கள் தொகை பத்து லட்சத்துக்கு மேலகக் கூடும். நிற்க.

இங்கே குறிப்பிட்ட கணிதப்படி இவர்கள் கல்வியில் எவ்வளவு கீழ் நிலையில் இருக்கின்றனரென்று பாருங்கள். மனிதராய்ப் பிறந்திருப்பினும் கல்வியில்லாதவர் விலங்குகளுக்கு ஒப்பாவாரென்றும், கற்றவரே கண்ணுடையர் கல்லாதவர் முகத்திலே புண்ணுடையரென்றும் ஆன்றோர் கூறியிருப் பவற்றிலிருந்து கல்வியின் உயர்வும், கல்லாமையின் இழிவும் நன்கு விளங்குமன்றோ? இம்மை மறுமை வீடு என்னும் மும்மையும் பயப்பதாய், தளர்ந்துழியுதவுவதாய், நல்லிசை பயப்பதாய், எழுமையம் தொடர்ந்து இன்பமளிப்பதாய் உள்ள கல்வியினும் மக்கள் பெற்ற பாலதாகிய பேறு யாதுளது? இத்தகைய கல்வியில் இவர்கள் மிகவும் பின்னடைந்திருக்கிறார்கள் என்றால் இவர்களுக்கு வேறு என்ன பெருமையுண்டென்று சொல்லக்கூடும்? இவ்வாற்றால் இவர்கள் முதலிற் செய்யற்பாலது தம்மில் கல்வியை வளர்ப்பதேயாகும், தஞ்சையிலுள்ள கள்ளர் மாகசங்சத்தினர் பற்பல இடங்கட்கும் புலவர்களை யனுப்பிப் பிரசங்கங்கள் செய்வித்தும், துண்டுப்பத்திரங்கள் வெளியிட்டும் யாவர்க்கும் கல்வியில் ஆர்வத்தை யுண்டாக்கி, நல்லொழுக்கத்திற்றிருப்புதல் வேண்டும். பள்ளிக் கூடங்களும், உணவுவிடுதி(ஹாஸ்டல்) களும் ஏற்படுத்துதல் வேண்டும். கல்லூரி (ஹைஸ்கூல், காலேஜ்)களில் படிக்கும் எளிய மாணவர்களுக்கும், திறமையுடையோருக்கும் உதவிச்சம்பளமும், பரிசுகளும் கொடுத்து ஊக்குதல் வேண்டும்.


மற்றும் இவ்வகுப்பினர் யாவரும் கல்வியில் விருப்பமுடையவர்களாய்த் தம் பிள்ளைகட்கு எவ்விதத்திலு:ம் கல்வி கற்பித்தல் வேண்டும்.

'தந்தை மகற்காற்று நன்றி யவையத்து

முந்தி யிருப்பச் செயல்'


என்று, கல்வி யொன்றைத்தானே மக்களுக்குத் தேடித்தர வேண்டு மெனத் திருவள்ளுவர் கூறிவைத்தார். கல்வியின் பிற பயன்களை யெல்லாம் அறியாவிட்டாலும், ஒரு மனிதனாவது ஒருகூட்டமாவது கல்வியினாற்றான் உலகத்தில் நாகரிகமாய் வாழுமுடியும் என்பதையும் கல்வியில்லாத மனிதன் அல்லது கூட்டம் ஒருகாலத்தில் மற்றை யோர்க்கு அடிமையாய்ப் போக நேரிடும் என்பதையும் சிந்தித்தாவது தம் மக்களுக்கு அழியாப் பொருளாகிய கல்வியைத் தேடி வைப்பார்களாக . இனிக் கள்ளர் நாடுகளில் ஓர் ஊரிலாவது பள்ளிக்கூடம் இல்லாதிருத்தல் கூடாது ஒருபிள்ளையாவது படிக்காமல் இருத்தல் கூடாது என்று பெற்றோர்களும், பெரியோர்களும்உறுதி செய்து கொள்வார்களாயின் சில ஆண்டுகளில் இவ்வகுப்பு வியக்கத்தக்க விதமாக மேன்மையடைந்து விடும். இவ்வகுப்பினர்க்கு இயல்பிலே கூரிய அறிவும், மெற்கொண்டதைச் சாதிக்கும் உறுதியும் உண்டு இத்தையோர் கல்வியை மேற்கொண்டால் உலகிற்கே பெரிய நன்மை யுண்டு.


இனி இவ்வகுப்பினரில் மதுவுண்டல் என்னும் தீய வழக்கமுடையோர் இருப்பின் அஃது எவ்வளவு இழிவானது என்பதை யுணர்ந்து இனியேனும் அவர்கள்அதைக் கைவிடுவார்களாக. மதுவுண்போரை மிக இழிந்தவரென மதித்து, மற்றையோர் அவர்களோடு எவ்வித சம்பந்தமும் வைத்துக்கொள்ளா திருப்பின் அவர்கள் விரைவில் திருந்துதற்கு இடனண்டு. களவுத் தொழில் செய்வார் யாவரே யாயினம் அவர்களை அரசாங்கத்தினரிடம் பிடித்துத் தருவார்களாயின் இவர்கள் தம் வகுப்பிற்கு எவ்வளவோ நன்மை செய்தவர்களாவர்.


இவர்கள் பெரும்பாலும் நிலக்காரர்களாதலின் உழவுத் தொழிலில் மிக்க கருத்தும் ஊக்கமும் உடையராதல் வேண்டும். 'மேழிச் செல்வம் கோழை படாது' என்பது அமுதவாக்கன்றோ? இந்நாட்டில் இவர்கள் வேறு எவ்வித கைத்தொழிலும் இல்லாதவர் களாகவே யிருக்கின்றனர். ஒரு பெரிய சமூகம் இவ்வாறிருப்பது சிறிதும் சரியன்று. இது நாட்டின் நலத்தையே தடைப்படுத்தக் கூடியதாகும். ஆதலின் இவர்கள் தத்தமக்கியைந்த யாதேனும்ஒரு கைத்தொழிலை மேற்கொள்ள வேண்டும் . இவர்கள் ஒற்றுமையுடன் கூட்டுறுவுச் சங்கங்களும், பண்டசாலைகளும் ஏற்படுத்திக் கொள்வார்களாயின் எவ்வளவோ நலமாக விருக்கும். கல்யாணம் முதலியவற்றில் அளவின்றிச் செய்யப்படும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்தல் வேண்டும். அவற்றில் ஒரு சிறு பகுதியைக் கல்விக் கென்று சேர்த்துவைப்பின் மிகுந்த நன்மை பயக்கும். பொதுவில் யாவரும் ஒற்றுமையைப் பலப்படுத்தல் வேண்டும். ஒற்றுமைக் குறைவாலன்றோ இவர்கள் பொருளெல்லாம் அழிந்தொழிந்தன. எவ்வகை வழக்குகளையும் முன்போல் இவர்கள் தாமே தீர்த்துக் கொள்வார்களாயின் அளவுகடந்த நன்மையுண்டாகும். இனி, பல நாடுகளிலுமுள்ள இவ்வகுப்பினர் தம்மிற் கலந்து பழக்க வழக்கங்களை நாகரிகமுறையில் திருத்திக்கொண்டு ஒற்றுமை பெறதல் வேண்டும்.


நாம் இங்கே சொல்லியனவெல்லாம் உலகத்தில் பல வகுப்பினர் இப்பொழுது மேற்கொண்டு செய்வனவே; ஒன்றும் புதிதன்று; செய்தற்கு அருமையானது மன்று. ஒவ்வொரு வகுப்பினர் தங்கள் முன்னேற்றத்திற்கு எவ்வளவு பாடுபட்டு வருகின்றனர்? ஆந்திர நாட்டில் ரெட்டி வகுப்பினரும், மைசூர் நாட்டில் வொக்காலிகர் என்ற வகுப்பினரும் மிக உழைத்துவருகினறனர். தமிழ் நாட்டில் நாடார் என்னும் சான்றார் வகுப்பினரைக் குறிப்பிடலாகும். இவர்கள் செய்துவரும் காரியங்கள் மிக வியக்கற்பாலன வாகும். இனி கள்ளர்கள் ஏனையெல்லா வகுப்பினரோடும் அன்பும், ஒற்றுமையும் உடையவராய்க் கலந்து வாழ்தல் வேண்டும். சில வகுப்பினர் சில பழக்கங்களினாலே தம்முடன் உணவு முதலிய வற்றில் கலந்துகொள்ள முடியாதவராயிருப்பர். அத்தகைய இடங்களில் தாமும் தம் வகுப்பின் பெருமைக்கு குறைவுண்டாகாத வாறு நடந்துகொள்ளல் வேண்டும். பொதுவில் உலகிலுள்ள மக்களெல்லாம் தமக்குச் சமமானவரென்றும் நண்பரென்றும் போற்றி யொழுகுதல் வேண்டும்.

தொடரும் 28

கள்ளர் சரித்திரம் - 26 -

இனி, இவர்களது தற்கால நிலைமையை நோக்குவோம். இவ்வகுப்பினரில் ஓர் அரசர் இருக்கின்றனர். பல சமீன்றார்கள் இருக்கின்றனர்; ஆயிரவேலி நிலக்காரர்கள் உள்ளனர் ; உத்தியோகத்தர் (போலீசு டிப்டி கமிஷனர், போஸ்டல் சூப்பரின்டெண்ட், ஜில்லா முனிசீப், தாசில்தார், சப்மாஜிஸ்ட்ரேட்) சிலர் உளர்; வக்கீல் சிலர் உண்டு ; கல்வியிலாகாவில் உயர் தகுதி வாய்ந்து சென்னை இராஜதானிக் கல்லூரி உள்ளிட்ட காலேஜ் ஹைஸ்கூல்களில் புரொபஸராயும், தமிழாசிரியர் முதலானோராயும் சிலர் இருக்கின்றனர். மற்றும் இவர்களில் சட்டசபை அங்கத்தினர் இருக்கின்றனர்; தாலூகா போர்டு, ஜில்லாபோர்டு முனிசிபாலிட்டிகளில் தலைவர் உதவித்தலைவர் ,உறுப்பினராகச் சிலர் இருக்கின்றனர்; ராவ்பகதூர், திவான்பகதூர் முதலிய பட்டங்களும் பெற்றிருக்கின்றனர். இருப்பினும் என்? இதுகொண்டு இவ்வகுப்பே நல்ல நிலைமையில் இருப்பதர்கக் கூறிவிடலாகுமோ? இவ்வகுப்பின் இப்பொழுதைய நிலைமை பெரிதும் இரங்கத்தக்க தொன்றாம். இவர்களில் ஏறக்குறைய நூற்றுக்கு எழுபத்தைந்து போர் வரையில் தங்கள் சொத்தில் முக்காற் பாகத்திற்கு அதிகமாகவே யிழந்து விட்டனர். சிலர் முற்றிலுமே பொருளையிழந்து வாழ்க்கையை நடத்த முடியாது தத்தளிக்கின்றனர். உலகத்திலே தாங்களும் மக்கட் பிறப்பினரென்று வெளித்தோற்ற மாத்திரத்திலாவது காட்டிக்கொள்ள முடியாத இழிந்த நிலைமைக்குப் பலர் வந்து விட்டனர். வம்பு வழக்குகளினாலே பலர் பொருளிழந்தனர்; வீண் ஆடம்பரங்களினாலே பலருடைய பொருள் போயிற்று; மதுபான முதலிய தீய பழக்கங்களினாலும் பலர் தொலைந்தனர், அந்தொ! இழிந்த மாக்களும் மறைந்து குடிக்கும் இயல்புடைத்தாயிருந்த மதுவை இப்பொழுது பெரிய மனிதரென்று சொல்லிக் கொள்வோரெல்லாம் வெளிப்படையாகக் குடித்து விட்டுப் புரள ஆரம்பித்து விட்டனர். இது கலியின் கொடுமையே போலும்.!


இங்ஙனம் பொருள் இழந்தனர்; பொலிவழிந்தனர்; மதியிழந்தனர்; வலியிழந்தனர்; வறுமையுற்றனர்; பொருமையற்றனர்; இவர்கள் படும் துன்பத்திற்கும் பரிபவத்திற்கம் ஓர் எல்லையில்லை. இவற்றுக்கொல்லாம் பொறுப்பாளர் யாவர்? பொதுவாக இந்நாட்டு மக்கள் அரசாங்கத்திலோ வெளியிலோ சில பதவிகளும் பெருமைகளும் அடைந்து விடுவார்களானால் எளியமக்களின் நிலைமை அவர்கள் கண்ணுக்குப் புலப்படுவதில்லை. கடவுள் ஒருவர் உண்டு என்ற எண்ணமேயில்லாமல் எளியவர்களுக்கு எவ்வளவு துன்பமுஞ் செய்யப் பின்வாங்க மாட்டார்கள். ஒரு தனி மனிதனையெடுத்துப் பார்க்கினும் ஒரு கூட்டததை யெடுத்துப் பார்க்கினும் எங்கும் பிறரை அமிழ்த்திவிட வேண்டுமென்ற எண்ணமே மேலிட்டிருப்பதைக் காணலாகும். பல ஆண்டுகளாகப் பல பெரியோர்கள் தேச முன்னேற்றமே கருதி உழைத்துவந்தார்களாயினும் தேசம் அடிப்படையில் எவ்வளவு சீர்கேடாயிருக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள முடியாமற் போய்விட்டது. இந்தியா என்கிற கட்டிடத்தின் அடிப்படையைப் பழுது பார்ப்பதற்கு இன்னும் பலர் பலகாலம் உழைக்க வேண்டுமெனத் தோன்றகிறது. பொதுவில் தேசத்தையே குறிப்பாகக்கொண்டு உழைக்க முடியாதவர்கள் தாழ்நிலை யடைந்துள்ள ஒரு சமூகத்தின் பொருட்டாவது உழைக்க வேண்டும். அதுவும தேச உழைப்பே யாகும். இனி கள்ளர் வகுப்பினர்ககுப் பிறர் புரிந்த அல்லதுபுரிகின்ற நன்மை தீமைகளை விடுத்து, இவ்வகுப்பிலே பெரிய மனிதர்களாயுள்ளோர் என்ன நன்மை செய்திருக்கிறார்க ளென்று கேட்போம். அவர்களில் ஒரு அரசர் இருந்தால் என்? பல ஜமீன்றார்கள் இருப்பின் என்? பெரும் பணக்காரரும் நிலக்காரரும் இருந்து என்? தம்எளிய வகுப்பினரது முன்னேற்றத்திற்கு அவர்கள் யாது உதவி புரிந்திருக்கின்றனர்? இதுகாறும் ஒருதவியும் செய்யவே யில்லை. தம்வகுபினர் இவ்வித இழிந்த நிலைமையடைந்திருப்பது அவர்கள் மனத்தில் சற்றேனும் உறுத்தவெயில்லை. அதனாலன்றோ இவ்வளவு பரிபவத்திற்கு அவர்கள் ஆளாகவேண்டியிருந்தது? மதுரைப் பக்கத்திலிருந்த இழிவு பெரிய மனிதர்கள் இருக்கும் தஞ்சைப் பக்கத்திலும் எட்டிப் பார்க்கத்தொடங்கிவிட்டது. இனியேனும் அவர்கள் உறக்கத்தினின்றெழுந்து வேலை செய்தல் வேண்டும்.


ஒரு தீமையினின்றும் நன்மையுண்டாகும் எனனும் விதிப்படி மதுரைப் பக்கத்துக் கள்ளர் வகுப்பினர் முன் பல துனபங்களுக்கு ஆளாயினும் இப்பொழுது சில திருத்தமும் நன்மையும் அடைந்து வருகின்றனரென்பது ஒருவாறு ஆறுதலளிக்கக் கூடியதாகும். அங்கே பல பள்ளிக்கூடங்கள் ஏற்படுத் தப்பட்டுள்ளன. அவர் கட்குக் கைத்தொழிலும் கைத்தொழில்களும் கற்பிக் கப்படுகின்றன. விவசாயமும் , கைத்தொழிலும் நல்ல பயனளித்துவருகின்றன. கடவுள் திருவருளால் கூடிய விரைவில் அவர்கள் நன்னிலையடைவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தஞ்சைப் பக்கத்திலும் இரண்டு மூன்று ஆண்டுகளாக இவர்கட்கென அரசாங்கத்தார் பள்ளிக் கூடங்கள் ஏற்படுத்தி வருவது பாராட்டத்தகுந்தது. இச்சமயத்தில் தஞ்சைக் கள்ளர் மகா சங்கமானது பலருடைய ஒற்றுமையும் பெற்று ஊக்கத்துடன் முறைப்படி உழைத்துவருமாயின் இதனால் பல நன்மை யுண்டாகக் கூடும்.


இனி, இவ்வகுப்பினர் மேற்கொள்ள வேண்டிய முயற்சி வகைகளையும், சீர்திருத்தங்களையும் கூறுமுன், இவர்கள் கல்வியில் எவ்வளவு பிற்போக்கடைந் துள்ளார்கள் என்பதனைக் காட்டுதும்.

தொடரும்...27

கள்ளர் சரித்திரம் - 25 -

சில காலத்தின் முன்பு இவர்களிலே சிலர் சிவஞானிகளாய் விளங்கினரெனத் தெரிகிறது.


இனி, சோணாட்டிலே இன்னோர் அடைந்திருந்து பொது வாழ்க்கை நிலையைக் கவனிப்போம். இவர்களிலே பல சமீன்றார்களும் சில ஆயிர வேலியாளர்களும் இருத்தலை முன்பு குறிப்பிட்டோம். மற்றும் முப்பது நாற்பது குடும்பங்கள் நூறு வேலி, இருநூறு வேலி நிலமுளளனவாக விளங்கின. இக்குலத்தவரில் ஏறக்குறைய எல்லோருமே நிலக்காரர்களாக யிருந்திருக்கின்றனர். இந்திய தேசத்திற்கே நெற்களஞ்சிம் என்று சொல்லப்படும் தஞ்சை ஜில்லாவின் பெரும்பாகம் இவர்கட்கு உரியதாயிருந்தது. இவர்களிற் சிற்சிலர் அரசர்கள் பால் பல்லக்கு முதலிய விருதுகள் பெற்றிருக்கின்றனர். பல குடும்பங்களில் ஆடவர்களும், பெண்டிர்களும் பல்லக்குளிற் செல்லும் வழக்கமுடையரா யிருந்திருக்கின்றனர், இவர்கள் மிக்குள்ள ஊர்களிலெல்லாம் வேறு எவ்வகுப்பினரும் இவர்களில் தலைவரா யுள்ளார்பால் தங்கள் வழக்குகளைச் சொல்லித் தீர்த்துக் கொள்ளுதல் வழக்கமாகவுள்ளது. இவர்கள் தொகை மிகுந்துள்ள ஊர்களில் தலைவர்களாயிருப்போரும் இவர்களே, தாழ்ந்த அல்லது தாழ்த்தப்பட்ட வகுப்பினரென்போர் இவர்களிடம் ஊழியஞ் செய்தலைத் தமக்கு மேன்மையாகக் கொண்டு பாராட்டுவர். இவர்களும் அவர்கட்குக் குடியிருக்க நிலங்கொடுத்தும், கல்யாணத்திற்குத் தாலி செய்து கொடுத்தும், மற்றும் நன்மை தின்மைகட்கு வேண்டுவன புரிந்தும் அவர்களை அன்புடன் ஆதரிப்பார்கள், கல்யாண முதலிய பழக்க வழக்கங்களில் இவர்கட்கும் வெள்ளாளர் முதலிய பிற வகப்பினர்க்கும் இந்நாட்டில் யாதும் வேற்றுமை காணப்படுவதில்லை.


மதுரைப் பக்கத்திலுள்ள கள்ளவர்கட்கும் தஞ்சைப் பக்கத்திலுள்ளோர்க்கம் பழக்க வழக்கங்களில் இருக்கிற வேற்றுமையைத் தஞ்சை ஜில்லாக் கெசட்டியர் முதலியன அறிவிக்கின்றன. இவர்கட்கும் அவர்கட்கும் இதுவரை எவ்வகையான சம்பந்தமும் இருந்ததாகத் தெரியவில்லை. எனினும் அவர்களை வேறு யாரோ என இவர்கள் ஒதுக்கிவிடப் பார்ப்பது அவ்வளவு சரியன்று; அவர்களும் இன்னோர் துணைவரே. அவர்களிடம் தகாத பழக்க வழக்கங்கள் காணப்படின் இவர்கள் அவர்களோடு கலந்து அவற்றைத் திருத்துதலே கடனாம். இனி இவ்வகுப்பினர் போர் புரிவதில் மிக்க விருப்பமுடையவர். வீரம், அஞ்சாமை, தாராளம், அடைக்கலம் புகுந்தாரைப் பாதுகாத்தல் என்பன இவர்கட்குச் சிறப்பாக உரிய குணங்களாகும். எங்கோ பெரிய இடங்களில் இரண்டொரு தவறு நேர்ந்திருப்பின் அதனை இங்கே எடுத்துக்கொள்ளலாகாது. '1656-ல் இவர்களை மேற்பார்த்து வந்த திருச்சிராப்பள்ளி நாய்க்கர் (வைசிராய்) ஆன குப்பாண்டி யென்பவர் காந்தலூருக்குச் சென்று அங்குள்ள பாதிரியைப் பயமுறுத்திப் பணங்கேட்டபொழுது, அப்பாதிரி கள்ளர்களின் பாதுகாவலில் இருந்ததனால் அவர்களுக்கும் குப்பாண்டி நாய்க்கருக்கும் பெரிய சண்டை யுண்டாயிற்று' என்று ரெவரெண்டு காஸ்டெட்ஸ் கூறியிருக்கின்றார். 1745-ல் முராரி ராவுக்குக்கீழ் மகாராட்டிரர் படையெடுத்தபொழுது ஆவூரிலுள்ள பாதிரிகளும், மற்றைய கிறிஸ்துவர்களும் கூனம்பட்டியில் அடைக்கலம் புகுந்தனர் என்று தெரிகிறது, இங்ஙனம் பலவுள. அடைக்கலம் புக்காரைப் பாதுகாப்பதில் தம்முயிரையும் பொருட்படுத்தாப் பெருந்தன்மை வாய்ந்தவர் இக்கலத்தினரென்பது துணிபு.


இவர்களில் பலர் சைவமத்தையும், சிலர் வைணவ மதத்தையும் தழுவினோராவர் பாண்டிநாட்டுக் கள்ளர்களைப் பற்றி எழுதிய ஒருவர் ' இவர்கள் சைவமதத்தினரேயாயினும், இவர்கள் முக்கியமாய்க் கொண்டாடும் தெய்வம் அழகர்என்றனர். அஃது உண்மையென்பதைக் கள்ளழகர் என்னம் பெயரே வலியுறுத்தும் முருகக்கடவுள் பால் இவர்கள் மிக்க அன்புடையவர்கள். சைவர்களும் வைணவர்களும் ஒருவர் வீட்டில் ஒருவர் கல்யாணஞ் செய்து கொள்வதுண்டு.

தொடரும் 26

கள்ளர் சரித்திரம் - 24 -

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தார் எழுதி வெளியிட்ட இராசாளியாரவர்களது வாழ்க்கை வரலாறு:


" கல்வியறிவொழுக்கங்களிலும் வண்மையிலும் மேம்பட்டு விளங்கிய இப்பெருந்தகையார் பிரமோதூத ஆண்டு கார்த்திகைத் திங்கள் 17-ம் நாள் அரித்துவாரமங்கலத்தில் பெருநிலக்கிழமையுடைய ஓர் பிரபலக் குடும்பத்தில் பிறந்தவர். இவர் இளம்பருவத்தில் கும்பகோணத்திலுள்ள ஆங்கிலப் பாடசாலையில் மெற்றிக்குலேஷன் வகுப்பிற் படித்துக் கொண்டிருந்தவர். அவ்பொழுதே குடும்பாரம் பொறுக்க நேர்ந்தமையின் படிப்பைவிடுத்து ஊருக்கு வந்து விட்டார். எனினும் கல்வியில் இவருக்கிருந்த விருப்பம் மேன்மேலும் வளர்ந்தே வந்தது. தமது பன்னிரண்டாம் வயதிலிருந்தே யோகநூல்கள் படிக்க வெண்டுமென்னும் அவாவுடையவராய் அவற்றைத் தேடிப் படித்தும். பெரியோர்கள் பலரை உசாவியும் யோக நுட்பங்களைத் தெரிந்து வந்ததோடு, யோகப்பயிறசியும் ஓரளவு செய்து வந்தாரெனத் தெரியவருகிறது. திருமந்திரம் முதலிய யோக நூல்களிலிருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடல்கள் இவருக்குப் பாடமுண்டு மருத்துவ நூல் சோதி நூல்களிலும். இருக்கு பயிற்சியுண்டு. வடமொழிப் பயிற்சியும் பெற்றிருந்தார். சிறு பருவந்தொடங்கியே சிறந்த வொழுக்கமும், தெய்வபத்தியும், உபாகாரத்தன்மையும் உடையராயிருந் தாராகலின், இவரதுவாழ்க்கை தூய்மையும், பெருமையும் வாய்ந்த தென்பது திருவாளர் பொன். பாண்டித்துரைத்தேவரவர்கள், அரசஞ்சண்முகனார் முதலிய பலருடைய நண்பு அவற்றைப் பெரிதும் வளர்த்துவருவதாயிற்று. அக்காலந் தொடங்கியே மதுரை முதலான இடங்களில் சங்கங்கள் கூடும் பொழுதெல்லாம் தவறாது செல்வதும், புலவர்களோடு அளவளாவியின்புறவதும், தமிழ் நூலாராய்ச்சி செய்வதும், பெருஞ் சொற்களிலுள்ள பல சங்கங்களில் இவர் தலைமை வகித்தும் சொற்பொழிவுகள் புரிந்துமிருக்கின்றனர். பிரணவம், யோகம் என்ற பொருள்களை குறித்து மூன்று நான்கு மணிநேரங்கள் அருமையாகப் போசியிருக்கிறார்.தேற்றம்.மதுரையில் தமிழ்ச் சங்கம் நிறுவப்பெற்றது இவருக்குத் தமிழில் மிக்க ஆர்வமும், பயிற்சியும் உண்டாவதற்கு ஏது நிகழ்ச்சியாயிருக்க,

ஓராண்டு, மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் ஆண்டு விழாவைத் தஞ்சையில் மிகவும் சிறப்பாக நடத்திவைத்தார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் நிறைவேற்றற் கழக உறுப்பினராகவும், எம் சங்சத்தின் புரவலராகவும், மற்றும் பல சங்கங்களின் தொடர்படையராகவும் இருந்திருக்கினறனர். தம் மரபினராகிய கள்ளர் குலமக்கள் கல்வி முதலியவற்றில் மேம்பட்டுத் தம் பழம்பெருமையின் நழுவாதிருக்க வேண்டுமெனக்கருதி இந்திரகுலாதிபர் சங்கம் என ஓர் சங்கம் நிறுவி நடத்திவந்தார். தஞ்சை ஜில்லா போர்டிலும் தாலுக்கா போட்டிலும் பல ஆண்டுகள் உறுப்பினராய் இருந்துளார். தம்முடைய ஊரில் நூல் நிலையம், மருத்துவ நிலையம் முதலியன ஏற்படுத்தி வைத்தார். அறத்திற்கு மிகுதியான நிலிம் எழுதி வைத்தார். நமது பெருமாட்சி பொருந்திய ஐந்தாம் ஜார்ஜ் அரசர் பெருமான் டில்லிமா நகரில் முடிசூட்டிக்கொள்ளும் அமையத்துச் சென்று தரிசித்து வந்தார். திருவாவடுதுறை ஆதீனத் தலைவர்களைத் தம்மூருக்கு எழுந்தருள் வித்துப் பூசித்து அவர்கள் உவந்தளித்த பொற்கடகங்களும் பெற்றார். தமிழ்ப்புலவர்களிடத்தில் இவருக்கிருந்த அன்பு அளவிட்டுரைக்கற்பாலதன்று. இவர்போன்று புலவர்களை உபசரிப்பவர் உலகில் மிக அரியரென்றே சொல்ல வேண்டும். அரசஞ்சண்முகனார், பினனத்தூர் நாராயனசாமி ஐயர் முதலிய புலவர் பலர் இவர் பால் மிக்க உதவி பெற்றுள்ளார்கள். இவர் மீது எத்தனையோ புலவர்கள் பாடிய பாடல்களும் உள்ள. பிற வனிதையரைப் பெற்ற தாயெனவும், பிறர் பொருள் எட்டியே யெனவும், பிறர்வசையுரைத்தல் பெருமையென்றெனவும் கருதியவர். 'ஈதல் இடைபடவாழ்தலதுவல்லுதூதியமில்லையுயிர்க்கு' என உணர்ந்தவர். சுருங்க உரைக்கின் இவர் தம்பால் ஒன்று வேண்டினர்க்கு மறுத்தறியாத வன்மையும். இன்னல் கருதிக் கண்ணீர் ஒரு துளியும் விடாத திண்மையும் திருமாலின் திருவடிகளிடத்தில் வைத்த பத்தியின் உண்மையும் உடையராவர். இப் பெற்றியமைந்த இவ்வாண்டகை தம் சுற்றத்தார்களும், நண்பர்களும், புலவர்களும் மற்றும் தம் ஆதரவு பெற்றிருந்தோர்களும் ஆகிய எண்ணிறந்தோர் அளவற்ற வருத்தமுறத் தமது ஐம்பதாம் வயதில் சித்தார்த்தி யாண்டு பங்குனித்திங்கள் 25-ம் நாளில் இராம நாமம் சொல்லிக் கொண்ருந்தபடியே தம் பொன்போலும் அழிகிய உடம்பை விடுத்துப் பரந்தாமனலகெய்தினர்" என்பது.


மற்றும், மதுரைத் தமிழ்ச்சங்கப் பரீட்சைகளில் முதன்மையுறத்தேறிப் பொற் பதக்கம் பொற்றோடா முதலிய பரிசில்கள் பெற்றோராயும், நூலாராய்ச்சியும், பிரசங்க ஆற்றலும். செய்யுளியற்றும் திறமையும் வாயந்தோராயும், பத்திரிகை நடாத்து வோராயும், பழைய நூல்களை ஆராய்ந்தும், நூல் உரைகள் எழுதியும் வெளிப்படுத்து வோராயும் இப்பொழுதும் சிற் சிலர் இருக்கின்றனர். தமிழ்ப் புலமை வாய்ந்த பெண்மணிகளும் சிலர் இருக்கின்றனர்.


இங்ஙனம், தமிழ்ப்பற்று மிக்குடைய இக்குலத்தினர் பண்டு தொட்டுத் தமிழ்ப்புலவர்களை யாதரித்து அவர்களால் புகழ்ந்து பாடப்பெற்று வந்திருக்கின்றனர். புதுக்கோட்டை மன்னர் முதலாயினோர் பரிசு பெற்றுளோரை இங்கெடுத்துக் கூறுதல் மிகை. அஷ்டாவதானம் வேலாயுதக் கவிராயர் காங்கயன்பட்டி, ஆச்சான் பேட்டை, பிரம்பூர், சீராளூர் முதலிய இடங்களிலிருந்த கள்ளர்குலப் பிரபுக்களிடம் பெரும்பரிசில்கள் பெற்று, அவர்கள் மீது பல பிரபந்தங்களும், தனி நிலைக் கவிகளும் பாடி யிருக்கின்றனர். இங்ஙனம் பாடியோர் மற்றும் பலர்.


இனி, இக்குலத்தவர் பண்டு தொட்டுச் செய்துவந்திருக்கும் அறங்கள் மிகப்பலவாம் . தமிழ் நாட்டிலுள்ள எத்தனையோ கோயில்களுக்குத் திருப்பணி செய்தும், மானியம் விடுத்துமிருக்கின்றனர்; மடங்கள் கட்டியுள்ளனர்; அன்ன சத்திரங்களும், தண்ணீர்ப் பந்தல்களும் ஏற்படுத்தி யிருக்கின்றனர்; குளங்கள் வெட்டி யிருக்கின்றனர். இவர்களில் தொண்டைமான் குடும்பத்தினர் மாத்திரமே செய்திருக்கும் அறங்களுக்கு ஓர் எல்லை இல்லை, திருவாரூர் வைத்தீசுவரன் கோயில், திருச்செங்காட்டங்குடி, ஆளுடையார் கோயில் , திருக்கோகரணம், பேரையூர், பழனி, மதுரை, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சங்கரநயினார் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி, திருக்குற்றாலம், பாவநாசம் என்னும் இத்தலங்களிலும், மற்றும் பல விடங்களிலும் இவ்வகுப்பினருடை மடங்கள் இருக்கின்றன, இவ்வகுப்பினர் தஞ்சையில் தரும வைத்தியசாலை (ஆஸ்பிடல்) ஏற்படுத்துதற்குப் பெரும் பொருள் உதவியிருக்கினற்னர்; ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான ஆட்களையுதவித் திருவிடைமருதூர் முதலிய தலங்களில் உள்ள திருத்தேரை எழுந்தருளச் செய்கின்றனர்.

தொடர்....25