அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

சொக்கம்பட்டி ஜமீன்

பழைய காலத்தில் தமிழ்நாட்டில் சிறந்த நிலையில் இருந்த ஜமீன்களுள் சொக்கம்பட்டி யென்பது ஒன்று. வடகரையாதிக்கமென்றும் அந்த ஜமீன் வழங்கப் படும். அங்கே இருந்த ஜமீன்தார்களுள் சின்னணைஞ்சாத் தேவர் என்பவர் புலவர் பாடும் புகழுடையவராக வாழ்ந்து வந்தார். அவரால் திருக்குற்றாலம், பாபநாச, திருமலை முதலிய தலங்களில் பலவகையான நிவந்தங்கள் அமைக்கப்பெற்றன. அவர் தண்டமிழ் வாணர்பால் அன்பு பூண்டு ஆதரித்துப் பெரும்புகழ் பெற்றார். மேலகரம் திரிகூட ராசப்பக் கவிராயர், செங்கோட்டைக் கவிராச பட்னாரம், கிருஷ்ணாபுரம் கவிராயர் முதலியோர் அவருடைய ஆதரவு பெற்றவர்கள். அக்காலத்தில் அவருடைய ஆட்சி சிறப்படைந்திருந்தது.
ஒரு பெரிய அரசாங்கத்துக்கு உதாரணமாகச் சொல்லக் கூடிய நிலையில் அவருடைய சமஸ்தானம் விளங்கியது. அவ்வளவுக்கும் காரணம் அந்த ஜமீன்தாருடைய ஸ்தானாபதியாக இருந்த பொன்னம்பலம் பிள்ளை யென்பவருடைய அறிவாற்றலேயாகும்.

பொன்னம்பலம் பிள்ளை சிறந்த தமிழ்ப் புலமை வாய்ந்தவர். வாசவனூர்ப் புராணத்தையும் வேறு பல தனிப்பாடல்களையும் இயற்றியிருக்கின்றார். அவர் வாசுதேவநல்லூரிற் பிறந்த வேளாள குலதிலகர். பேராற்றலும் அரசியலை ஒழுங்குபெற நடத்தும் மதியூகமும் அவர்பாற் பொருந்தியிருந்தன. அவருடைய நல்லறிவும் ஆட்சி முறையும் குடிகளுக்கும் சம்ஸ்தானாதிபதிக்கும் ஒருங்கே இன்பத்தை உண்டாக்கின.
பொன்னம்பலம் பிள்ளையின் அறிவின் திறத்தில் ஈடுபட்ட சம்ஸ்தானாதிபதியாகிய சின்னணைஞ்சாத் தேவர் தம் அமைச்சராகிய அவர் யாது கூறினும் அதன்படியே ஒழுகி வந்தார். அமைச்சருடைய சாதுர்யமான மொழிகளும் தமிழ்ப்புலமையும் அரசியல் யோசனைகளும் யாவரையும் வணங்கச் செய்தன. பிற சமஸ்தானத் தலைவர்களெல்லாம், “இத்தகைய அமைச்சர் ஒருவரைப் பெற்றிலமே!” என ஏங்கினர்.
அக்காலத்தில் இருந்த சேதுபதி மன்னர் பொன்னம்பலம் பிள்ளையை வருவித்து அவருடைய பெருமையை உணர்ந்து போற்றினார். அவரோடு ஸல்லாபஞ் செய்வதில் அரசருக்கு உயர்ந்த மகிழ்ச்சி உண்டாயிற்று. அடிக்கடி அவருடைய பழக்கம் இருக்க வேண்டு மென்பது சேதுபதி அரசர் விருப்பம். ஆயினும் தம்முடைய ஜமீந்தாரிடத்தில் அன்பும் அந்தச் சமஸ்தான நிர்வாகத்திற் கருத்தும் உடைய பொன்னம்பலம் பிள்ளை அங்ஙனம் இருப்பது சாத்தியமாகுமா? பலமுறை சேதுபதி விரும்பினால் ஒருமுறை சென்று சிலநாள் இருந்து வருவார். அப்பொழுது சேதுபதி மன்னர் அவரைத் தம்பாலே இருத்தி விடுதற்குரிய தந்திரங்கள் பல செய்தும் அவர் இணங்கவில்லை.
ஒருமுறை சேதுபதி அரசரிடம் பொன்னம்பலம் பிள்ளை வந்திருந்தபோது அவர் தம் ஜமீன்தாருடைய சிறந்த குணங்களைப் பற்றியும் தம் பாலுள்ள அன்பைப் பற்றியும் எடுத்துக் கூறினார்.
“உங்களுடைய ஸம்மதம் இல்லாமல் சமஸ்தானத்தில் ஒரு காரியமும் நடைபெறாதாமே?” என்று கேட்டார் சேதுபதி.
“ஆம். ஆனால் அப்படி இருப்பது அதிகாரத்தினால் அன்று; அன்பினாலே தான். எங்கள் மகாராஜாவுக்கு நான் செய்வதிற்குறையிராது என்ற நம்பிக்கையுண்டு. நாடும் குடிகளும் நன்மை அடையவேண்டுமென்பதே அவர்களுடைய நோக்கம்; தாமே நேரில் அதிகாரம் செலுத்தவேண்டுமென்ற விருப்பம் அவர்களுக்கு இல்லை. யாருடைய அதிகாரமாக இருந்தால் என்ன? எல்லாம் அவர்களுடைய பெயராலேயே நடைபெறுகின்றன.”
“அப்படியானால் உங்கள் ஜமீன்தார் உங்கள் யோசனையைக் கேட்டுத் தான் எல்லாக் காரியங்களையும் செய்வாரோ?”
“கூடியவரையில் அப்படித்தான் செய்வது வழக்கம். அவர்களிடம் நான் வெறும் சம்பளம் வாங்கும் மந்திரியாக மட்டும் நடந்து கொள்ளவில்லை. அவர்கள் என்னை ஆருயிர் நண்பனாகவே கருதியிருக்கிறார்கள். ஒரு சம்ஸ்தானாதிபதி, வியாஜம் ஒன்றும் இல்லாமல் ஒன்றுக்கும் பற்றாத என்னிடத்தில் இவ்வளவு அன்பு வைக்கும்போது என்னுடைய நன்மையைக் காட்டிலும் அவர்களுடைய நன்மையையே சிறந்ததாகக் கருதுவது என் கடமையல்லவா?”
“உங்களுடைய சமஸ்தானாதிபதியை ஒருமுறை பார்க்கவேண்டுமென்பது என் விருப்பம்.”
“நன்றாகப் பார்க்கலாம். பரிவாரங்களுடன் சொக்கம் பட்டிக்கு விஜயம் செய்தால் மகாராஜாவை வரவேற்பதைக் காட்டிலும் சந்தோஷந்தரும் செயல் வேறொன்று இல்லை.”
“நான் அங்கே வருவதைக் காட்டிலும், உங்கள் சம்ஸ்தானாதிபதி இங்கே வந்தால் நலம் அல்லவா?”
“அப்படியும் செய்யலாம். ஆனால் அதற்கு இது தக்க சமயமல்ல. மகாராஜா முறையாக அவர்களுக்குத் திருமுகம் அனுப்பி மரியாதையோடு வருவிக்க வேண்டும். அப்படிச் செய்தாலும் நான் அங்கே சென்று அவர்களை வரச்சொன்னால்தான் விஜயம் செய்வார்கள். என்னுடைய விருப்பம் இல்லாமல் வரமாட்டார்கள்.”
“நீங்கள் அவரை வரும்படி எழுதியனுப்பலாமே?”
“அவ்வளவு உரிமையை நான் மேற்கொள்ளுதல் பிழை. எங்கள் அரசரவர்கள் கருணை மிகுதியினால் எனக்குச் சில அதிகாரங்களைக் கொடுத்திருக்கிறார்கள். அதை நான் தவறாகச் செலுத்தலாமா? எனக்கு இணங்கி அவர்கள் நடந்தாலும் அவர்களோ அரசர்பிரான்; நான் ஊழியன். நான் என்னுடைய வரம்பு கடந்து நடக்கக் கூடாது. இங்கே வரும்படி நான் எழுதுவது உசிதமன்று.”
“அப்படியானால், நானே திருமுகம் அனுப்பி வருவிக்கின்றேன்.”
“மகாராஜாவின் திருமுகத்தைக் கண்டவுடன் அவர்கள் புறப்படமாட்டார்கள். என் விருப்பம் என்னவென்பது தெரிந்துதான் வருவார்கள்.”
“உங்களுக்குத் தெரியாமலே நான் அவரை இங்கே வருவித்துவிடுகிறேன்.” என்றார் சேதுபதி மன்னர்.
இருவருக்கும் வாக்குவாதம் நடைபெற்றது. சேதுபதி, சொக்கம்பட்டி ஜமீன்தாரை வருவித்துவிடுவதாக வீரம் பேசினார். அது முடியாதென்று பொன்னம்பலம் பிள்ளை கூறினார்.
மறுநாள் சேதுபதி வேந்தர் பொன்னம்பலம் பிள்ளை அறியாதபடி அவர் எழுதியதைப் போல் ஒரு திருமுகம் எழுதி ஆள்மூலம் சொக்கம்பட்டி ஜமீன்தாருக்கு அனுப்பினார். ‘உடனே புறப்பட்டு இவ்விடத்திற்கு விஜயம்செய்யவேண்டும்’ என்று பொன்னம்பலம் பிள்ளை எழுதினதாக அத்திருமுகம் அமைந்திருந்தது.
அதுகண்ட சின்னணைஞ்சாத் தேவர் அதுகாறும் சேதுபதியிடம் சென்றவரல்லராதலின் சிறிது மயங்கினார். அக்காலத்தில் சேதுபதியைப் போன்ற கெளரவம் சின்னணைஞ்சாத்தேவருக்கும் இருந்தது. ‘இங்ஙனம் நம் அமைச்சர் எழுதுவதற்குக் காரணம் தெரியவில்லை. ஆயினும் அவர் நம் நன்மையைக் கருதியே ஒவ்வொரு காரியத்தையும் செய்வார். இப்படி அவர் முன்பு செய்தது இல்லை. எதற்கும் நாம் அங்கே அதிக ஆடம்பரமின்றிச் செல்வோம்’ என்றெண்ணிச் சில வேலைக்காரர்களை மட்டும் அழைத்துக்கொண்டு புறப்பட்டார்.
சொக்கம்பட்டியிலிருந்து ஜமீன்தாருடைய பல்லக்கு வருமென்றும், உடனே தமக்குத் தெரிவிக்க வேண்டுமென்றும், வந்தவருக்கு இடம் கொடுத்து உபசரிக்கவேண்டுமென்றும் சேதுபதி தம் அதிகாரி களுக்கு உத்தரவிட்டிருந்தார். அதிகாரிகளும் சின்னணைஞ்சாத் தேவரை எதிர்பார்த்திருந்தனர். தேவர் வந்து தமக்கென அமைத்திருந்த விடுதியில் தங்கினார். சேதுபதி வேந்தரைத் தாமே சென்று பார்ப்பது தம் கெளரவத்துக்குக் குறைவாதலாலும், தாம் தம் அமைச்சருடைய விருப்பத்தின்படி வந்திருப்பதாலும் அவர் அங்கேயே தங்கித் தம் அமைச்சரது வரவை எதிர்பார்த்திருந்தார்.
அவர் வந்திருப்பது பொன்னம்பலம் பிள்ளைக்குத் தெரியாது. பிள்ளையை வியப்படையுமாறு செய்யவேண்டுமென்று கருதிய சேதுபதி அவரையும் அழைத்துக்கொண்டு சின்னணைஞ்சாத்தேவர் தங்கியிருந்த விடுதிக்கு வந்தார். நெடுந்தூரத்தில் வரும்போதே தம்முடைய தலைவரைக் கண்டு கொண்ட பொன்னம்பலம் பிள்ளை, ஏதோ சூது நடந்திருக்குமென்று தெரிந்துகொண்டார். உட்புகுந்து சின்னணைஞ்சாத்தேவரருகிற் செல்லும்போது அவர் திடுக்கிட்டுப் போவாரென்று சேதுபதி நினைத்தார். அவரோ அங்கே சென்றவுடன், “ஏனடா சின்ன ணைஞ்சாத்தேவா! ஸமூகத்தில் செளக்கியமா?” என்று கேட்டார். ஸமூகம் என்பது சம்ஸ்தானாதிபதியைக் குறிப்பது. தாமே “ஸமூகமாக” இருக்கத் தம்மை இப்படி ஒருமையில் அழைத்துக் கேட்பதுபற்றி ஜமீன்தார் கோபம் அடையவில்லை.
தாம் முன்னரே ஐயுற்றபடி ஏதோ சூழ்ச்சியினால் சேதுபதி தம்மை வரவழைத் திருக்கிறாரென்றும், தம் அமைச்சர் தக்க காரணங் கொண்டே அப்படிப் பேசுகிறாரென்றும் அவர் ஒரு கணத்தில் ஊகித்துக்கொண்டார்.
“எஜமான்! ஸமூகத்தில் செளக்கியமே. உங்களைப் பிரிந்திருப்பதுதான் கஷ்டமாக இருக்கிறதாம்.” என்று பணிவுடன் அவர் விடையளித்தார்.
“அப்படியா! விரைவிலே புறப்படவேண்டியதுதான்” என்று சொல்லிவிட்டுப் பொன்னம்பலம் பிள்ளை மேலே நடந்தார்.
சேதுபதி மன்னருக்கு ஒன்றும் விளங்கவில்லை; அவர் அதற்கு முன் சின்னணைஞ்சாத் தேவரைப் பார்த்தவரல்லர்; ஆதலின் அங்கே வந்தவரே ஜமீன்தார் என்று அறிந்துகொள்ளமுடியவில்லை. ‘இவர் ஜமீன்தாராக இருந்தால், நமது முன்னிலையில் இந்த அமைச்சர் இப்படிப் பேசுவாரா? இவர் சம்ஸ்தானத்தைச் சேர்ந்த அதிகாரியாக இருக்கலாம். அமைச்சரை ஏமாற்ற எண்ணிய நாமே ஏமாந்து போனோம். அரசர் இவரைக் காட்டிலும் அறிவாளியென்று தெரிகிறது. தாம் வராமல் தம் பெயருள்ள ஓர் அதிகாரியை அனுப்பி விட்டார். இல்லாவிட்டால் இவ்வளவு சிறந்தவராகிய பொன்னம்பலம் பிள்ளைக்கு அவரிடத்தில் பற்று இருப்பதற்கு நியாயம் இல்லையே’ என்று எண்ணினார். இருவரும் அரண்மனைக்கு மீண்டார்கள்.
பொன்னமபலம் பிள்ளை தனியே வந்து தம் சம்ஸ்தானாதிபதியைக் கண்டு பொய்த்திருமுகம் வந்ததும் பிறவும் தெரிந்து கொண்டார்; “நான் செய்த அபசாரத்தை மன்னிக்கவேண்டும். சமூகத்தின் கெளரவத்திற்கு இங்கெல்லாம் இவ்வளவு சுலபமாக வருதல் ஏற்றதன்று. அதனால், நான் இந்தத் தந்திரம் செய்தேன். சமூகத்திற்கு அகெளரவம் ஏற்பட்டாலும் அது நம் இருவருக்குந்தானே தெரியும்?? உரிமை பற்றியும், வேறு வழியில்லாமையாலும் இவ்வாறு செய்தேன். க்ஷமித்தருள வேண்டும்” என்று வேண்டினார்; தம்முடைய அருமைத் தலைவரை அவ்வாறு பேச நேர்ந்ததேயென்பதை நினைந்து நினைந்து உருகினார்.
சின்னணைஞ்சாத்தேவரோ சிறிதும் மனம் வருந்தாமல்,” நீர் நம்முடைய மானத்தைக் காப்பாற்றினீர். நாம் தெரியாமல் செய்த பிழையை உம்முடைய சாதுர்யத்தால் மாற்றிவிட்டீர். நீர் உள்ளவரையில் நமக்கு என்ன குறை?” எனக்கூறித் தம் அமைச்சரைத் தேற்றினார்.
அப்பால் பொன்னம்பலம் பிள்ளை சேதுபதியிடம் தம் அரசர் தம்மை வரும்படியாகச் சொல்லி யனுப்பி யிருக்கிறாரென்று கூறி விடை பெற்றுக் கொண்டு, சம்ஸ்தான அதிகாரியாக நடித்த சின்னணைஞ்சாத் தேவருடன் சொக்கம்பட்டி போய்ச் சேர்ந்தார்.
(குறிப்பு: இவ்வரலாற்றை, திருவாவடுதுறையாதீன வித்துவானும் இப்பொழுது அவ்வாதீனத்தைச் சார்ந்த மதுரைக் கட்டளை விசாரணைத் தலைவராக இருப்பவர்களுமாகிய ஸ்ரீமத் சங்கரலிங்கத் தம்பிரானவர்கள் தெரிவித்தார்கள்.)
உ.வே.சாமிநாதய்யர்

ஊற்றுமலை ஜமீன்

ஊற்றுமலையென்பது திருநெல்வேலி ஜில்லாவில் இருந்து வரும் ஒரு பழைய ஜமீன். அதில் ஜமீன்தார்களாக இருந்தவர்கள் வீரத்திலும் கல்வியிலும் சிறந்தவர்கள். வடகரையென்னும் சொக்கம்பட்டியில் பெரியசாமிச் சின்னணைஞ்சாத் தேவர் தலைமை வகித்து வந்த காலத்தில் ஊற்றுமலையில் இருந்த ஜமீன்தார் தென்மலையென்னும் சிவகிரியிலிருந்து ஜமீன்தாருக்கு உதவி புரிந்து வந்தனர்.
வடகரையாருக்கு நண்பராகிய சேற்றூர் ஜமீன்தாருக்குப் பல இடையூறுகளை விளைவித்தனர் தென்மலையார். வடகரை ஸ்தானாதிபதியாக இருந்த பொன்னம்பலம் பிள்ளை பல படையுடன் சேற்றூராருக்கு உதவியாக நின்று தென்மலையாரை வென்றனர். அதன்பின் தென்மலையும் அதற்கு உதவியாக நின்ற ஊற்றுமலை ஜமீனும் தம்முடைய நிலையிற் குலைந்தன. ஊற்றுமலை ஜமீன்தார் அப்பகைவர் கையில் அகப்பட்டார்: அவர் தம்முடைய மனைவியாரையும் இரண்டு சிறு பிள்ளைகளையும் விட்டு இறந்தனர்.

அவர் மனைவியாரின் பெயர் பூசைத்தாயாரென்பது. அவர் தம் குழந்தைகளுக்காகவே உயிர் வைத்திருந்தனர். குழந்தைகளில் மூத்தவர் மருதப்பத் தேவர்; இளையவர் சீவலவ தேவர் என்பார். பூசைத்தாயார் தெய்வ பக்தியும் தைரியமும் தமிழிற் சிறந்த பயிற்சியும் உடையவர்.
ஊற்றுமலை ஜமீன் அரண்மனையில் அடிக்கடி வித்துவான்களுடைய பேச்சுக்கள் நடந்து வருகையில் அவ்வம்மையார் ஜமீன்தார் அருகிலிருந்து அவற்றைக் கவனிப்பது வழக்கம்; ஆதலின் செய்யுட்களின் சுவை தெரிந்து அனுபவிக்கவும் புதிய செய்யுட்களை இயற்றவும் ஆற்றலுடையவராக ஆனார்.
தம்முடைய கணவர் இறந்தபோது,”மிகவும் இளைஞர்களாக இருக்கும் குழந்தைகளை எப்படிக் காப்பாற்றுவது!” என்று அவர் மனம் ஏங்கினார். ஊற்றுமலையில் தனியே இருப்பின் தம் குலக்கொழுந்துகளாகிய அவ்விருவருக்கும் ஆபத்து வருமென்று பயந்து தென்காசிக்குச் சென்று அங்கே அடக்கமான வாழ்க்கையை நடத்தி வருவாராயினர்.
புலமை நிரம்பிய பெண்மணியாராதலின் கல்வியினால் உண்டாகும் பெருமையே பெருமை என்றுணர்ந்து எவ்வாறேனும் தம் மக்களுக்குக் கல்வியறிவூட்டவேண்டு மென்னும் ஊக்கமுடையவராக இருந்தார். தென்காசியில் இருந்த பள்ளிக்கூடமொன்றில் தம் குமாரர் இருவரையும் சேர்ப்பித்துப் படிக்கச் செய்தார்.
அவ்விருவருள் இளையவராகிய சீவலவ தேவர் நல்ல லக்ஷணமும், வசீகரமான தோற்றமும் உடையவர். தைரியமும், சோம்பலின்றி உழைக்கும் ஊக்கமும் அவருக்குப் பிறவியிலே அமைந்திருந்தன. பிறர் உள்ளக் கருத்தைக் குறிப்பாக அறியும் நுண்ணறிவும் அவர் பால் இருந்தது. அவருடைய முகத்தைப் பார்த்துப் பூசைத்தாயார், “இவனால் நாம் ஈடேறலாம்” என்று எண்ணி மகிழ்ந்து வந்தார்.
ஒரு நாள் சகோதரர் இருவரும் பள்ளிக்கூடம் செல்லும்போது அத்தலத்தில் உள்ள தேரடியில் சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களைக் கண்டபோது இளங்குழந்தையாகிய சீவலவதேவருக்குத் தாமும் விளையாடவேண்டுமென்னும் ஆசை உண்டாயிற்று. சிறிது நேரம் அவர்களோடு சேர்ந்து விளையாடத் தொடங்கினார்.
அவருடைய தமையனாராகிய மருதப்பத் தேவர் பள்ளிக்கூடத்துக்கு நேரமாகிவிட்டதென்று கூறினார். அதனைக் காதில் வாங்காமல் சீவலவதேவர் விளையாடிக் கொண்டே இருந்ததனால், மூத்தவருக்குக் கோபம் மூண்டது; உடனே தம்பியை அடித்துப் பள்ளிக்கூடத்துக்கு அழைத்துப் போனார்.
சீவலவதேவர் மானமுள்ளவராதலின் பள்ளிக்கூடத்திலிருந்து வந்து தாயாரைக்கண்டவுடன் கோவென்று அழத் தொடங்கினார். தம்முடைய கண்மணியைப் போன்ற குழந்தை அங்ஙனம் எதிர்பாராதவிதமாக அழுவதைக் கண்ட பூசைத்தாயாருக்கு ஒன்றும் விளங்கவில்லை. விசாரித்தபோது விஷயம் தெரிந்தது.
குற்றம் இருவரிடமும் இருப்பதாக அவர் எண்ணினார். கல்வியே செல்வமென்று எண்ணி அவர்களைப் படிக்கவைத்தவராதலின் இளையபிள்ளை விளையாட்டிற் போதைக் கழித்தது குற்றமென்பதும், இருப்பினும் நல்லுரை கூறாது இளங்குழந்தையை அடித்தது மூத்தவரது குற்றமென்பதும் அவர் கருத்து. யாரை நோவது?? “எல்லாம் நம்முடைய பழைய நிலையிலிருந்து மாறியதனால் உண்டாகியவையே” என்று எண்ணும்போது பூசைத்தாயாருக்குத் துக்கம் பொங்கி வந்தது. தம்முடைய உள்ளுணர்ச்சியை வெளிப்படையாக அந்தக் குழந்தைகளுக்கு உணர்த்தத் துணியவில்லை. ஆயினும் தமிழ்க் கல்வியறிவுடைய அப்பெண்மணியார் ஒரு செய்யுளால் அதை வெளியிட்டார். அது வருமாறு:
“தேரோடு நின்று தெருவோ டலைகிற செய்திதனை
ஆரோடு சொல்லி முறையிடு வோமிந்த அம்புவியில்
சீரோடு நாமும் நடந்துகொண் டாலிந்தத் தீவினைகள்
வாராவ டாதம்பி சீவல ராய மருதப்பனே.”
இச்செய்யுளைச் சொல்லும்போதே அவர் கண்களில் நீர் துளித்தது.
அடிபட்ட சீவலவ தேவர் தம்முடைய துக்கத்தை மறந்தார். தம் தாயார் அவ்வாறு வருந்துவதற்குக் காரணமென்ன என்பதில் அவர் மனம் சென்றது. தங்களை அன்போடு பாதுகாத்துவரும் அன்னையார் வருந்துவதைக் கண்டபோது அவர் மனம் உருகியது.
துணையற்ற நிலையில் இருந்தாலும் தம் உள்ளத்துள் இருந்த துயரத்தை அதுகாறும் அவ்வம்மையார் வெளியிட்டதேயில்லை; தைரியமாகவே இருந்து வந்தார். தம்முடைய பழைய நிலையையும் குழந்தைகளுக்குச் சொல்லவில்லை. அன்றைத்தினமோ வருத்தம் அடக்குவதற்கு அரிதாகிவிட்டமையால் அந்தச் செய்யுளைக் கூற நேர்ந்தது.
ஒருநாளும் வருந்தாத தாயார் அங்ஙனம் வருந்துவதைக் கண்டு பொறாத இளையவர், “நம்மால் அல்லவா இந்த வருத்தம் தாய்க்கு வந்தது!” என்று எண்ணி அதிகமாக அழுதார். ” நீ என்னம்மா இப்படி வருத்தமடைகிறாய்? இதற்குக் காரணம் என்ன? சொல்லத் தான்வேண்டும்” என்று பிடிவாதம் செய்தார். தாயார் வேறு வழியில்லாமல் எல்லாச் செய்திகளையும் குழந்தைகளிடம் சொல்லி வருந்தினார்.
“இனிமேல் எப்படி அம்மா நாம் பழைய நிலைக்கு வரமுடியும்?” என்று சீவலவதேவர் கேட்டார்.
“ஆண்டவன் அருள் செய்யவேண்டும். இப்போது வடகரையார் மிக்க பராக்கிரமம் கொண்டு விளங்குகிறார்கள். அவர்கள் மனம் வைத்தால் நம்மைப் பழையபடியே நிலைநாட்டலாம்.” என்றார் பூசைத்தாயார்.
“வடகரை யரசரை நான் போய்ப் பார்த்து வரட்டுமா, அம்மா?” என்று தைரியத்துடன் சீவலவ தேவர் கேட்டார்.
“உனக்கு அவ்வளவு தைரியம் இருக்கிறதா? வடகரை சமஸ்தானாதிபதியைப் பார்ப்பது அவ்வளவு சுலபமான காரியமல்லவே!”
“பின் என்ன செய்வதம்மா?”
“பார்க்க முடியாது. ஆனால் ……”
தாயார் சிறிது யோசித்தார். அவர் மனத்தில் ஏதோ ஒரு புதிய கருத்து உதித்தது.
“பொன்னம்பலம் பிள்ளையென்பவர் அந்த சமஸ்தானத்தில் ஸ்தானாதிபதியாக இருக்கிறார்; அவர் மிகவும் நல்லவர்: தமிழில் சிறந்த புலமையுடையவர். அவர் மனம் வைத்து நமக்கு உதவி செய்ய இசைந்தாரானால் ஸமஸ்தானாதிபதியும் இணங்குவார்.” என்று தயார் கூறினார்.
“அவரையே போய்ப் பார்த்து வருகிறேன், உன்னுடைய அன்பையும் ஆண்டவன் கிருபையையும் துணையாகக் கொண்டு நான் போய்வருகிறேன்.” என்று சீவலவதேவர் முன் வந்தார்.
வீரக்குடியிற் பிறந்த பெண்மணியாராகிய பூசைத்தாயாருக்குத் தம் மகனிடத்தில் அளவற்ற நம்பிக்கை இருந்தது. “போய் வா” என்று வாழ்த்தி அனுப்பினார்.
சீவலவதேவர் தென்காசியிலிருந்து புறப்பட்டுச் சொக்கம்பட்டிக்கு வந்து பொன்னம்பலம் பிள்ளையின் வீட்டை விசாரித்துக் கொண்டு சென்று அங்கே திண்ணையில் உட்கார்ந்திருந்தார். நடுப்பகலாதலின் உள்ளே பொன்னம்பலம் பிள்ளை நீராடிப் பூஜை பண்ணி விட்டு ஆகாரம் செய்து கொண்டிருந்தார்.
அந்தச் சமயத்தில் அரண்மனையிலிருந்து, “மகாராஜா உடனே வரச் சொன்னார்” என்று ஒரு சேவகன் வந்து அழைக்கவே விரைவாக ஆகாரம் அருந்தி எழுந்தார். கரசுத்தி செய்துகொண்டவுடன் அரண்மனைக்குச் செல்லும்பொருட்டு வெளியே வருகையில் அங்கே திண்ணையில் உட்கார்ந்திருந்த இளைஞராகிய சீவலவ தேவர்மேல் அவர் பார்வை சென்றது.அவருடைய அழகிய முகத்தின் வசீகர சக்தி பிள்ளையின் உள்ளத்திற் பதிந்தது.
“நீ யாரப்பா?” என்று ஸ்தானாதிபதி வினவினார்.
சீவலவ தேவர் தாம் இன்னாரென்பதை அறிவித்தார். ஊற்றுமலை ஜமீன்தாரிணி நன்றாகப் படித்தவரென்பதை முன்னரே பொன்னம்பலம் பிள்ளை அறிந்திருந்தார். அவ்வம்மையாருக்கு இரண்டு இளங்குழந்தைகள் இருப்பதையும் கேள்வியுற்றிருந்தார்.
ஆதலின் சீவலவதேவர் இன்னரென்று தெரிந்தவுடன் அவருக்குத் திடுக்கிட்டது. அவர், “இங்கே யாரேனும் உம்மை இன்னாரென்று தெரிந்து கொண்டால் உம்முடைய தலை தப்பாதே!” என்று அஞ்சினார்.
“ஆண்டவன் திருவருளின்படியே எல்லாம் நடைபெறும்” என்றார் இளைஞர்.
அவ்விளைஞர் காட்டிய பணிவு பொன்னம்பலம் பிள்ளைக்கு மனக்கசிவை உண்டாக்கியது. அப்பொழுதே, “இவர்களைப் பழைய நிலையில் வைத்துப் பார்க்கவேண்டும்,” என்ற சங்கற்பத்தைச் செய்து கொண்டார். பிறகு மிக்க களைப்புடன் இருந்த சீவலவதேவரை வீட்டுக்குள் அழைத்துச் சென்று உணவு செய்யச் சொல்லிவிட்டு, “இங்கே படுத்து இளைப்பாறிக்கொண்டிரு; நான் அரசரிடம் சென்று வருகிறேன். ஒருவரிடமும் தாம் இன்னாரென்று தெரிவிக்கவேண்டாம்” என்று சொல்லி அரண்மனைக்குச் சென்றார்.
பொன்னம்பலம் பிள்ளை தம்முடைய தலைவராகிய சின்னணைஞ்சாத்தேவரிடம் அவர் அழைத்த விஷயமாகப் பேசிக்கொண்டிருக்கையில், “நம்மால் அழிக்கப்பட்ட ஊற்றுமலையார் வேறு சிலருடைய உதவியை நாடிக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இப்போது அந்த ஜமீன் பரம்பரையில் இரண்டு இளைஞர்களே இருக்கிறார்கள். நமக்கும் அவர்களுக்கும் நேரே பகைமையில்லை.
சமூகத்துக்குப் பரம்பரையாக அவர்கள் உறவினர்களல்லவா? சேற்றூராருக்கும் தென்மலையாருக்குமே பகை. சேற்றூராருக்கு நாம் உதவி செய்தோம்; தென்மலையாருக்கு அவர்கள் உதவி செய்தார்கள். அங்ஙனம் உதவி செய்த ஜமீன்தாரும் இப்போது இல்லை.
ஊற்றுமலை ஜமீன் தமிழ்ப்புலவர்களை ஆதரித்துக் காப்பாற்றும் புகழையுடையது. அதன் அழிவுக்கு நாமே காரணமாக இருந்தோம். இப்போது மீட்டும் அந்த ஜமீனை நாமே நிலை நிறுத்தினால் நமக்கு அளவற்ற புகழ் உண்டாகும்; அநாவசியமான பகையுணர்ச்சியும் இல்லாமற்போம்! என்றார்.
‘நீர் எப்படி செய்தாலும் நமக்குச் சம்மதமே! என்று கூறினார் ஸமஸ்தானாதிபதி.
பொன்னம்பலம் பிள்ளை உடனே தென்காசிக்குப் பல்லக்கு அனுப்பிப் பூசைத்தாரையும் மருதப்பத் தேவரையும் வருவித்தார். அவர் பூசைத்தாயாரைப் பற்றி முன்பே கேள்விப்பட்டிருந்தார். தமிழ்ப்புலமையையுடைய அவரைச் சந்தித்தபோது பொன்னம்பலம் பிள்ளைக்கு அளவற்ற வருத்தம் உண்டாயிற்று; “இவ்வளவு சிறந்த அறிவுடைய இவரை இந்நிலைக்கு உள்ளாக்கியதற்கு நாமல்லவோ காரணம்!’ என்று இரங்கினார்.
அப்பால் பூசைத்தாயாருக்கும் அவர் குமாரர்களுக்கும் தக்க வசதி அமைக்கப் பட்டது.
பொன்னம்பலம்பிள்ளை ஏவலாளர்களுடன் ஊற்றுமலை சென்று அங்கே பழுதுபட்டிருந்த கோட்டை, அரண்மனை முதலியவற்றைச் செப்பஞ் செய்வித்தார். பிறகு நல்ல லக்கினத்தில் கிருகப்பிரவேசம் நடத்த ஏற்பாடு செய்து, வடகரையிலிருந்து பல்லக்கில் ஊற்றுமலை ஜமீன்தாரிணியையும் இரண்டு குமாரர்களையும் வருவித்தார். கிரகப்பிரவேசம் மிகவும் விமரிசையாக நடந்தது. நல்லவேளையில் தமக்குரிய நிலையைப் பெற்று அவர்கள் மகிழ்ந்தார்கள்.
ஊற்றுமலையில் மீட்டும் வாழ்வோமென்று நம்பிக்கையை முழுதும் இழந்திருந்த பூசைத்தாயாருக்கு அந்நிகழ்ச்சி அளவிறந்த விம்மிதத்தை உண்டாக்கியது. பொன்னம்பலம்  அதற்குக் காரணமென்பதை அவர் அறிந்தார். தம்முடைய நன்றியறிவை அவர் ஒரு பாடலால் தெரிவித்துக் கொண்டார். அது வருமாறு:
“கூட்டினான் மிகுந்த பா ளையக்காரர் சேகரத்தைக் குறைவ ராமல்
சூட்டினான் மணிமகுடந் துரைபெரிய சாமிசெய்யுஞ் சுகிர்தத்தாலே
*தீட்டினா னம்பலம்பொன் னம்பலத்தான் றிரிகூடவரையிற் கீர்த்தி
நாட்டினா னூற்றுமலை நாட்டரசு தழைக்கநி லை நாட்டினானே.”
பூசைத்தாயாரின் பொறுமையும் புலமையும் அவர்களுடைய நன்மைக்குக் காரணமாயின; தம்முடைய அரசை நிலைநாட்டித் தழைக்கவைத்த அமைச்சர் பிரானாகிய பொன்னம்பலம் பிள்ளையை போற்றிவந்தனர்.
உ.வே.சாமிநாதய்யர்
சுட்டது

ஜமீன் சிங்கம்பட்டி ஜமீன்


முருகதாஸ் தீர்த்தபதி
ஆயிரம் ஆண்டுகள் வரலாறு உடையது சிங்கம்பட்டி ஜமீன். இதன் 32-வது பட்டத்துக்காரர் தென்னாட்டுப்புலி நல்லகுட்டி சிவசுப்பிரமணிய கோமதிசங்கர ஜெய தியாகமுத்து சண்முகசுந்தர முருகதாஸ் தீர்த்தபதி (72). என்ன தலைசுற்றுகிறதா? இதுதான் அவரது முழுப் பெயர். சுருக்கமாக, டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி. இவர் சற்று வித்தியாசமானவர்.
இன்றும் “சிங்கம்பட்டி குறுநில மன்னர்’ என அழைக்கப்படும் இவர், ஜமீன் பட்டத்தைத் துறந்தவர். இலங்கை கண்டியில் உள்ள ஆங்கிலேயக் கல்வி நிறுவனத்தில் பயின்றவர் என்பதால் நல்ல ஆங்கிலப் புலமை பெற்றவர். 1953-க்குப் பின்பு ஜமீன்கள் மறைந்துவிட்டாலும், அதன் பாரம்பரியங்களை அறிந்து கொள்ளும் வகையில் சில பொருள்களைப் பாதுகாத்து வருகிறார் முருகதாஸ் தீர்த்தபதி.
சிங்கம்பட்டி ஜமீன் அரண்மனை.
சிங்கம்பட்டி ஊரின் மூன்றில் ஒரு பங்கு நிலத்தில் (சுமார் 5 ஏக்கர்) கட்டப்பட்டுள்ள அரண்மனையின் ஒரு பகுதியில் இந்த கலைப் பொருள்கள் காப்பகம் உள்ளது. இக் காப்பகத்தில் உள்ள ஓலைச் சுவடிகளில் ஒன்றில்தான் தோலை உரிக்கும் தண்டனை குறித்தும் கூறப்பட்டுள்ளது. இப்போது இருக்கிற குண்டர் சட்டம், என்.எஸ்.ஏ. மாதிரி அப்போது சட்டம் எதுவும் கிடையாதே! எனவே, திரும்பத் திரும்ப தவறு செய்பவர்கள், இனிமேல் இவனைத் திருத்தவே முடியாது என்ற நிலைக்குப் போய்விட்டவர்களுக்கு ஜமீனில் கொடுக்கும் தண்டனைதான் “தோலுரித்தல்’.
தவறு செய்தவரைப் பிடித்து நையப் புடைத்து, ரத்தம் கசியும் வரை போட்டுத் துவைத்து, உப்புத் தடவப்பட்ட ஆட்டுத் தோலை அவன்மேல் சுற்றிக்கட்டி ஊர் பொது இடத்தில் உள்ள கல்தூணில் கட்டிவிடுவார்களாம். இரண்டொரு நாள்கள் வெயிலில் காய்ந்து, காற்றில் உலர்ந்த பின்னர், அவர் மேல் சுற்றப்பட்ட ஆட்டுத் தோலை அவிழ்த்து எடுக்குபோது, அது மனிதத் தோலையும் பிய்த்துக் கொண்டுதான் வருமாம். கற்பனைக்கு எட்டாத கொடூரம்தான்!
குதிரைக் குளம்பு ஆஷ்ட்ரே.
இந்த சிங்கம்பட்டி ஜமீனில் முக்கியமான வரலாற்றுச் சின்னம் ஒன்று உள்ளது. சிகாகோ சென்று திரும்பிய சுவாமி விவேகானந்தர், ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதிக்கு பரிசளித்த மரத்தாலான யானைச் சிற்பம் அது. பாஸ்கர சேதுபதி மகாராஜா, முருகதாஸ் தீர்த்தபதியின் தாய்வழிப் பூட்டன் ஆவார். விவேகானந்தரின் அன்புப் பரிசை பெற்ற அவர், அதைத் தனது பேத்தி வள்ளிமயில் நாச்சியாருக்கு வழங்கினார்.
வள்ளிமயில் நாச்சியார் சிங்கம்பட்டி ஜமீனுக்கு மணமகளாக வந்தபோது, தாத்தா அளித்த பரிசையும் பிறந்த வீட்டுச் சீதனமாகக் கொண்டு வந்தார். அதை இன்றும் பாதுகாப்பாக வைத்துள்ளார் முருகதாஸ் தீர்த்தபதி. இந்த ஜமீன்தாரர்களில் ஒருவர் ஆசையோடு வளர்த்த குதிரை ஒன்று திடீரென இறந்துவிட்டதாம். குதிரை இறந்துவிட்டாலும் அதன் நினைவைப் பாதுகாக்க விரும்பிய அந்த ஜமீன்தார், அதன் காலில் ஒன்றை வெட்டி, அதில் குளம்புக்கு அடியிலும், மேலேயும் வெள்ளிப் பூண் போட்டு அதை “ஆஷ் டிரே’ யாக பயன்படுத்தி வந்துள்ளார். (புகைவிடும் நேரமெல்லாம் புரவியின் நினைவு வந்து போகும் போலும்!)
அதுவும் இந்தக் கலைக் கூடத்தில் உள்ளது. சிங்கம்பட்டி ஜமீனுக்குச் சொந்தமான நிலங்களில் இருந்து ஆண்டுதோறும் 10 ஆயிரம் மூட்டை நெல் வருமாம். அதைச் சாதாரணமாக அளந்தால் எப்போது அளந்து, எப்போது முடிப்பது? எனவே நெல்லை அளக்க ஒரு பெரிய மரக்காலைப் பயன்படுத்தியுள்ளனர்.
தேக்கு மரத்தாலான இந்த மரக்காலை 2 பேர் சேர்ந்தால்தான் தூக்க முடியும். இப்போது நாம் பயன்படுத்தும் மரக்கால் அளவுப்படி 14 மரக்கால் நெல்லை அதில் ஒரு மரக்காலாக அளந்து போட்டுவிடுவார்கள். அதுவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஜமீனில் பயன்படுத்திய பூட்டு ஒன்று உள்ளது. மூன்று கிலோ எடை இருக்கும் அந்தப் பூட்டை பயன்படுத்த இரண்டு பேர் வேண்டும். பூட்டின் மேலே உள்ள மூடி போன்ற பகுதியை ஒருவர் இழுத்து பிடித்துக் கொண்டால்தான் அதை பூட்டவோ, திறக்கவோ முடியும்.
அந்தக் காலத்திலேயே அப்படி ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உள்ளனர். அந்தப் பூட்டு இன்றும் நல்ல நிலையில் உள்ளது. ஜமீன் பரம்பரை என்றால் தர்பார் வேண்டுமே! அதற்கென பயன்படுத்திய அலங்கார நாற்காலி ஒன்றும் உள்ளது. உயர்ந்த வகை மரத்தாலான அந்த நாற்காலி விலை மதிப்புள்ளதாம். தர்பார் கூடத்தில் 7 அடி நீளம், 7 அடி அகலம் கொண்ட கல் மேடை ஒன்று உள்ளது.
இந்த கல் மேடை, அதன் நான்கு கால்கள் அனைத்தும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. ஜமீன்தாரர்களுக்கு பட்டம் சூட்டும்போது அவர்கள் இந்தக் கல் மேடையில்தான் அமர்ந்திருப்பார்களாம். பழைய தமிழ் சினிமாக்களில் அரண்மனைச் சுவர்களில் சிங்கம், புலி, தலைகளை தொங்கவிடப்பட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.
ஜமீன் பரம்பரையினர் வேட்டையாடிக் கொன்ற யானையின் தலை எலும்புக் கூடு ஒன்று காப்பகச் சுவரில் மாட்டப்பட்டுள்ளது. ஜமீனில் வளர்ந்த 2 நாய்கள் இறந்தபோது அவற்றுக்கு சமாதி கட்டப்பட்டுள்ளது. அந்தச் சமாதியில் இருந்த நினைவுத் தூண்களும் காப்பகத்தில் உள்ளன. ஜமீனில் வளர்ந்த நாய்க்குக் கூட எவ்வளவு மரியாதை!
இங்கிலாந்து நாட்டில் தயாரிக்கப்பட்ட சிங்கம்பட்டி ஜமீனின் சிங்கக் கொடி பொறிக்கப்பட்ட பீங்கான் கோப்பைகள், “சோடா மேக்கர்’ போன்றவையும் உள்ளன. இவையெல்லாம் ஆங்கிலேயர்களால் ஜமீன்தார்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டவை. ஜமீன் அரண்மனையில் வளர்க்கப்பட்ட செல்லப் பிராணிகளின் நினைவாக அவற்றின் தோல் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
கடிகாரம், வாள், கடிதங்கள், திருமண அழைப்பிதழ்கள் ஆகியவையும் பாதுகாப்பாக உள்ளன. திருநெல்வேலியில் இருந்து 47 கி.மீ. தூரத்தில் உள்ள சிங்கம்பட்டி அரண்மனைக்குச் செல்வோர் விரும்பினால் இவற்றைப் பார்வையிடலாம். அதன் பொறுப்பாளர் பொ. கிட்டு, இந்தப் பழம் பொருள்கள் குறித்த விளக்கங்களை பொறுமையாக எடுத்துக்கூறுகிறார்.
ராஜ தர்பார்!
சிங்கம்பட்டி மன்னர் 32-வது பட்டம் மேதகு தென்னாட்டுப் புலி, நல்லகுட்டி, சிவசுப்பிரமணிய கோமதிசங்கர ஜெய தியாகமுத்து சண்முக சுந்தர முருகதாஸ் தீர்த்தபதி மகாராஜா பட்டத்துக்கு வந்ததில் இருந்து இன்று வரை ஆண்டுதோறும் அரசவை தர்பார் கொலுவில் வீற்றிருந்து ராஜ தரிசனம் தருகிறார்.
காரையாறு சொரிமுத்து அய்யனார் தேவஸ்தான அறங்காவலர் என்ற முறையில் ஆண்டுதோறும் கோயில் பெருவிழா நடைபெறும் ஆடி அமாவாசை தினத்தன்று ராஜ தர்பார் நடத்துகிறார். இதைக் காண திரளான கூட்டம் வருகிறது.
சிங்கம்பட்டி அரசு கி.பி. 1100-ல் உதயமானது. பாண்டியப் பேரரசின் கீழ் சிற்றரசாக இருந்தது. விஜயநகர மன்னர் காலத்தில் கி.பி. 1433-ல் பாளையமாகத் திகழ்ந்தது. ஆங்கிலேயர் ஆட்சியில் 1802-ல் ஜமீன்தாரியாக மாறியது. 900 ஆண்டுகளுக்கு மேல் பழைமைவாய்ந்தது சிங்கம்பட்டி ஜமீன் சமஸ்தானம். 1948-ல் ஜமீன் ஆட்சி முறை முடிவுக்கு வந்தது. சிங்கம்பட்டி சமஸ்தானத்தை 31 மன்னர்கள் பட்டம் தரித்து ஆட்சிபுரிந்து வந்தனர். தற்போது உள்ளவர் 32-வது “மன்னர்’.
தற்போதைய “மன்னர்’ எஸ். முருகதாஸ் தீர்த்தபதி ஆன்மிகத் திருப்பணிகளைச் செய்து வருகிறார். இதுவரை 23 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தியிருக்கிறார்.
அரச பதவியைத் துறந்தாலும் ஆன்மிகப் பணிகளில் ஈடுபட்டு 50 ஆண்டுகள் முடிவடைந்ததால் அன்பர்கள் அவருக்கு கடந்த செப். 29-ல் பொன்விழா கொண்டாடினார். அப்போது “மன்னரை’ தர்பார் கோலத்தில் மக்கள் தரிசித்தனர்.
…..சுட்ட இடம்

sd

.தமிழ்ச்öல்வன்

கொண்டாட்டங்கள்...கொடியேற்றம்...என்று தேம் விடுதலையை கொண்டாடிய ஆண்டு. இருட்டிலே வாங்கினோம் என்று பின்னர் நம்மில் பலரும் கேலி பேசினாலும், வாஸ்கோடகாமா 1498ஆம் ஆண்டு கால் வைத்த நாள் துவங்கிய கொடுமைகளும் வேதனைகளும், போராட்டங்களும் அரசியல் அரங்கிலேனும் ஒரு முடிவுக்கு வந்ததே என மக்கள் கொண்டாடினர்.

ஆனால் 1947 என்பது விடுதலையின் ஆண்டு மட்டுமல்ல.

இந்தியா என்கிற ஒரு தேம் இந்தியாபாகிஸ்தான் என இரண்டாக்கப்பட்டது. மத்தியும் தெற்கும் கொண்டாட்டத்திலிருந்த நாட்களில் மேற்கிலும் கிழக்கிலும் வடக்கின் பல பகுதிகளிலும் பின்வினையின் அர்த்தத்தை கோடான கோடி மக்கள் வர்ணிக்க முடியாத துயரங்களுடனும் இழப்புகளுடனும் உள்வாங்கிக் கொண்டிருந்தனர்.


பின்வினைக்குக் காரணம் முஸ்லீம் லீக்தான் என்று ஒரு õரரும் ஜின்னாதான் என்று சிலரும் காங்கிரஸ்தான் என்று ஒரு õராரும் காலம் காலமாக õதி இந்துக்கள் இஸ்லாமியரை தீண்டத்தகாதவராக நடத்தியதுதான் காரணம் என்று பலரும்  இதெல்லாம் தவறு, விடுதலைக்குப்பிறகு வேலைவாய்ப்பு மற்றும் அதிகாரத்தில் பங்கு பற்றிய அச்ம் கொண்டிருந்த இஸ்லாமிய உயர் மத்தியவர்க்கமும் öல்வந்தரும்தான் பின்வினைக்கு வித்திட்டனர் என்று ஒரு வாதமும் எல்லாவற்றுக்கும் மேலாக பின்ட்டீஷ் ஆட்சியாளன்ன் பின்த்தாளும் சூழ்ச்சியும் தாங்கள் போன பிறகு இந்தியர்கள் தமக்குள் வெட்டிக்கொண்டு õகட்டும் என்கிற அவர்களின் நல்லெண்ணமும் தான் காரணம் என ஒரு வாதமும் என தேமெங்கும் வாதப்பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்க அறுவைச் சிகிச்ø நடந்து முடிந்தது.

ஆனால் மக்களில் ஒரு பகுதியினர் வேறு விதமாகவும் நினைத்தனர். இந்து  முஸ்லீம் கலவரங்கள் இத்தோடு ஒழிந்துவிடுமல்லவா? முஸ்லீம்களுக்கே உன்யதாக தனியாக ஒரு நிõடு என்று கொடுத்துவிட்டோம். இத்தோடு பகைமையின் கதை முடிந்தது என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

ஆனால் பகைமையின் வேர்கள் இன்னமும் ஆழமாக இரு நாட்டு மண்ணிலும் ஊடுருவி நின்று வருங் காலத்திலும் தொடர தேப்பின்வினை மேலும் ஒரு காரணமாகிவிட்டதை அவர்கள் அன்று அறிந்திருக்கவில்லை.

இன்றுவரை தொடர்ந்து நம் மீது கருநிழல் கவிழ்க்கும் மிகப் பென்ய ன்த்திர நிகழ்வாக பின்வினை இருந்து வருகிறது.

தமிழர்களாகிய நம்மால்  அதிலும் இன்று வாழ்கிற நம்மால் தேப்பின்வினை உணர்ந்து கொள்ளப்படவில்லை. இன்றைய வகுப்புவாதப் பிரச்சினைகளை புன்ந்து கொள்ள தேப்பின்வினை பற்றிய ஒரு மீள்பார்வை நமக்கு அவசியம்.

1947 ஜூன் 3 அன்று இரண்டு நிõடுகளாக இந்தியாவைப் பின்க்கும் திட்டத்தை பின்ட்டீஷ் அரசு அறிவித்தது. அப்போது இந்தியாவில் இடைக்கால அரசு ஆட்சியில் இருந்தது. அந்த அரசு ஒரு "பின்வினை கமிட்டி'யை நியமித்தது. கவர்னர் ஜெனரல் தலைமையில் ர்தார் வல்லபாய் படேல், டாக்டர் ராஜேந்திர பிராத், திரு.லியாகத் அலிகான் மற்றும் ர்தார் அப்துர் ரப் நிஷ்தர் ஆகியோரைக் கொண்டு அக்குழு இயங்கியது.

ஜூன் 18, 1947ல் பின்ட்டீஷ் பாராளுமன்றம் இந்திய விடுதலை ம÷õதாவையும் பின்வினை ம÷õதாவையும் நிறைவேற்றியது. மூன்றே அனுபந்தங்களையும் 20 பின்வுகளையும் மட்டுமே கொண்ட அந்த ம÷õதா தேப்பின்வினையை அமுல்படுத்த பத்து நிபுணர் குழுக்களை நியமித்தது அவை:

1. அமைப்பு, ஆவணங்கள், அரசு அலுவலர்
2. öõத்துக்கள் மற்றும் கடன்கள்
3. மத்திய வருவாய்
4. ஒப்பந்தங்கள்
5. கரன்சி, நாணயம் மற்றும் பன்வர்த்தனை
6. பொருளாதார உறவுகள்குழு 1
7. பொருளாதார உறவுகள்குழு  2
8. வாழுமிடம்
9. வெளியுறவு
10.ராணுவம்
இந்த நிபுணர்குழு எதுவும் இடம் பெயர்ந்த மக்களின் துயரத்தையோ நடைபெற்ற கலவரங்களையோ பற்றி கவனிக்கவேயில்லை.

1947 ஜூன் 30 அன்று "எல்லைக் குழு' (ஆணிதணஞீணூதூ இணிட்ட்டிண்ண்டிணிண) நியமிக்கப்பட்டது. பஞ்õப் பவுண்டன் கமிஷன், பெங்கால் பவுண்டன் கமிஷன் என இரு குழுக்கள்.

இரண்டு குழுக்களுக்கும் தலைவராக ர். சின்ல் ரேட்கிளிஃப்(குடிணூ இதூணூடிடூ கீச்ஞீஞிடூடிஞூஞூ)பின்ட்டீஷ் ட்ட வல்லுநர் நியமிக்கப்பட்டார்.

பஞ்õப் பவுண்டன் கமிஷன்

1. ர்சின்ல் ரேட்கிளிஃப்
2. ஜஸ்டிஸ் தின் மொகம்மது
3. ஜஸ்டிஸ் முகமது முனிர்
4. ஜஸ்டிஸ் மெகர்ந்த் மகாஜன்
5. ஜஸ்டிஸ் தேஜாசிங்
வங்காள பவுண்டன் கமிஷன்

1. ர் சின்ல் ரேட் கிளிஃப்
2. ஜஸ்டிஸ் பி.கே. முகர்ஜி
3. ஜஸ்டிஸ் சி.சி. பிஸ்பாஸ்
4. ஜஸ்டிஸ் அபு லேஷ் முகமது அக்ரம்
5. ஜஸ்டிஸ் எஸ். ஏ. ரஹ்மான்
ஒவ்வொரு குழுவிலும் இரண்டு இந்துக்கள் இரண்டு முஸ்லீம்கள் ஆனால் எல்லோரும் நீதிபதிகள். õதாரண மக்களிலிருந்தோ இயக்கங்களிலிருந்தோ எவருமில்லை என்பதை கவனிக்க வேண்டும்.


பொதுமக்களிடமிருந்து பின்வினை குறித்த மனுக்களை இக்கமிஷன்கள் வரவேற்றன. காங்கிரஸ் கட்சி, முஸ்லீம் லீக், இந்து மகாபை, மற்றும் சீக்கிய அமைப்புகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட வாதங்களை இக்கமிஷன்களிடம் முன்வைத்தன. ஆனால் பெரும்பான்மையினரான படிப்பறிவற்ற இந்திய மக்களிடம் எவரும் கருத்து கேட்கவில்லை.

இரண்டு கமிஷன்களில் இருந்த உறுப்பினர்களுக்கு இடையிலும் தீர்க்கவே முடியாத கருத்து முரண்பாடுகள் நிலவின. வேறுவழியின்றி ட்டப்படி எது ரியோ அதைச் öய்ய கமிஷனின் தலைவர் ர் சின்ல் ரேட்கிளிப்புக்கு கமிஷன் உறுப்பினர்கள் அதிகாரம் வழங்கினர்.

1947 ஆகஸ்டு 17 அன்று ர்சின்ல் ரேட்கிளிஃப் தனது தீர்ப்பை வழங்கினார்.

இரண்டு தரப்புக்கும் திருப்தி தராத தீர்ப்பாக அது அமைந்தது.

ஆகஸ்டு 17 அன்று இரு நிõட்டுப் பிரதமர்களும் அம்பாலாவில் ந்தித்து மக்களை (இந்துக்களையும் சீக்கியர்களையும் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கும் முஸ்லீம்களை இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கும்) பரிமாறிக் கொள்ள ஒப்புக் கொண்டனர்.

ஆனால் அந்தத் தேதிக்கு முன்பாகவே இங்கிருந்து 5 லட்ம் மக்களும் அங்கிருந்து 5 லட்த்துக்கு மேலான மக்களும் öõல்லொணாத் துயரங்களை அனுபவித்தபடி இடம் பெயர்ந்துவிட்டிருந்தனர் என்பதுதான் ரித்திரத்தின் குரூர நகைச்சுவையாகும்.

இடம்பெயர்தல்:

நடுவில் கோடுகிழித்து இரண்டு தேமாக்கிவிட்டால் வகுப்புவாத அரசியல் அன்றோடு முடிவுக்கு வந்துவிடும் என்று நியாய உணர்வுள்ள பலரும் கருதினர். லட்÷õப லட்ம் மக்கள் இப்படி இடம் பெயர நேன்டும் என காந்திஜிகூட நினைக்க வில்லை. ஆனால் நவகாளியிலும் ராவல்பிண்டியிலும் 1946 இறுதியிலிருந்து நடைபெற்று வந்த கலவரங்கள் மக்களை வேறுவிதமாக நினைக்கச் öய்தன.

ஆனால் பின்வினை பற்றிய பேச்சு மக்களிடம் புழங்க ஆரம்பித்த காலத்தில் மக்களும் அப்படித்தான் நினைத்தனர்.

ராஜேந்திரசிங் (மூன்று க்கரவாகன ஓட்டுநர், டெல்லி) அளித்த பேட்டியில் கூறினார்.

''அரர்களும், அரசியல்வாதிகளும் தலைவர்களும் எப்பவுமே அதிகாரத்துக்காக போராடுவது வழக்கம் தான். அரர்களும் தலைவர்களும் மாறிக்கொண்டே இருந்ததுதானே நமது ன்த்திரம். ஆனால் மக்கள் எப்போது மாறினார்கள்? (ராஜே மகராஜே பதல்தே ரஹத்தே ஹை பர் ப்ரஜா கப் பத்லி ஹை?)''

பஞ்õப் மக்களும் இப்படித்தான் பேசிக்கொண்டார்கள். ராஜா ரஞ்சித்சிங் ஆட்சிக்கு வந்தார். மக்கள் இடம் பெயரவில்லை. சீக்கியர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தனர். அப்போதும் மக்கள் இடம் பெயரவில்லை. ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்தனர். அப்போதும் மக்கள் எங்கும் துரத்தப்படவில்லையே. எனவே அப்படி ஒன்றும் நடக்காது என்றுதான் õதாரண மக்களும் நம்பிக் கொண்டிருந்தனர்.

ஆனால் நடந்து கொண்டிருந்த நிகழ்ச்சிப் போக்குகளை கவனித்த படித்த வர்க்கம் இதை முன்கூட்டியே உணர்ந்தது. காங்கிரஸ் கட்சி அலுவலகங்களுக்கு எண்ணற்ற கடிதங்கள் வந்து குவிந்தன. அன்று காங்கிரசிலிருந்த 14.5.1947 தேதியிட்டு கிருபளானி அவர்களுக்கு வந்த ஒரு கடிதம்:

""பஞ்õபில் இருக்கும் சிறுபான்மையினரான எங்களை (இந்துக்கள், சீக்கியர்களை) பார்த்து நீங்கள் கூறுகிறீர்கள். எங்களை நாங்களே பாதுகாத்துக் கொள்ளமுடியாவிட்டால் புலம்பெயர்ந்து வந்துவிடுங்கள் என்று. மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது உங்கள் அறிக்கை. மாபெரும் காங்கிரஸ் இயக்கம் எங்களை அனாதரவாக நட்டாற்றில் கைவிட்டு விட்டது.

காலம் காலமாக அஹிம்øயை போதித்து போதித்தே பாதுகாக்க தைன்யமற்றவராக்கிய எங்களை நிராயுதபாமுயாக்கி காங்கிரஸ் கட்சி இப்போது தப்பி ஓடிவரும்படி ஆலோனை கூறுகிறது.

நான் கேட்கிறேன். ஓடிவரும் எங்களுக்கு அங்கே எந்த ஏன்யாவை ஒதுக்கியிருக்கிறீர்கள்? நாங்கள் மானத்தோடு குடியமர என்ன ஏற்பாடு? நாங்கள் எத்தனை பேர் வருவது? எப்படி வருவது? எங்கள் அøயாச் öõத்துக்களை நாங்கள் என்ன öய்வது? எங்கள் ஒவ்வொருவருக்கும் வேலை தருவீர்களா? உங்கள் நிவாரண முகாம்களில் பிச்øக்காரர்களைப் போல நீங்கள் வீசியெறியும் ரொட்டித்துண்டுகளுக்காக காத்துக்கிடக்க அழைக்கிறீர்களா?

ஐந்து நதிகள் பாயும் எங்கள் பஞ்õப் பூமியில் நாங்கள் கவுரவமாக தலை நிமிர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உங்கள் பிகான்களையும் மதராசிகளையும் உ.பி.வாலாக்களையும போலவே. நீங்கள் எங்களையும் வங்காளிகளையும் காவு கொடுத்து உங்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கு விடுதலை வாங்கித் தந்துள்ன்ர்கள்.

பைத்தியங்களைப் போலவும் நாடோடிகளைப் போலவும் எங்கள் மண்ணைவிட்டு ஓடி வர முடியாது. ராவல்பிண்டியில் நடந்தது போல இங்கும் நடக்கும் என்றால் நாங்கள் இந்துக்களாக இருப்பதற்காக ஓடிவந்து உங்களிடம் கையேந்தி நிற்கமாட்டோம். நிõங்கள் முஸ்லீம்களாக மாறி விடுவோம்.


உங்கள் வார்த்தைஜாலங்கள் எங்களுக்குத் தேவையில்லை. நேரடியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை. அதற்கு உங்களால் முடியாது என்றால் இந்த பஞ்õபில் காங்கிரஸ் கட்சியை கலைத்துவிடுங்கள். எங்கள் விதியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

''கோழைகளே! கோழைத்தனமான உங்கள் தத்துவங்களுக்கும் öõற்பொழிவுகளுக்கும் பெரிய கும்பிடு. நாங்கள் வாழ்கிறோம் அல்லது õகிறோம். இந்துக்களாக இருக்கிறோம் அல்லது எப்படியோ மாறுகிறோம். உங்களால் எதுவும் öய்ய முடியாத நிலையில் உங்கள் திருவாய்களை பொத்திக் கொண்டு ஓடிவிடுங்கள். எங்கள் கொதிக்கும் பூமியில் கால் வைக்காதீர்கள்'' (அகில இந்திய காங்கிரஸ் கட்சி முவணங்கள் கோப்பு எண் இஃ 9 பகுதி 1,1947 பஞ்õப்) இக்கடிதத்தில் எழுப்பப்பட்ட வினாக்களுக்கு எவரிடத்திலும் விடைகள் இல்லை.

அவரவர் வாழ்க்கையை அவரவர் தீர்மானித்துக் கொள்ளும் பதட்டமான சூழல் நிலவியது.

வ படைத்தவர்கள் பத்திரிகைகளில் விளம்பரம் öய்தனர். "ராவல்பிண்டியில் 14 அறைகள் கொண்ட இரண்டடுக்கு மாளிகையும் நகரை அடுத்து அறுபது ஏக்கர் விளைச்ல் நிலமும் öõந்தமாகக் கொண்ட ஒருவர் இந்தியாவில் கான்பூர் அல்லது லக்னோவை ஒட்டிய நகர்ப் பகுதியில் இதற்கு ஈடான öõத்துக்கள் உடைய ஒருவருடன் அப்படியே பரிமாற்றம் öய்துகொள்ள தயாராக இருக்கிறார். தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி..

இது போன்ற எண்ணற்ற விளம்பரங்கள் தினரிகளில் வரத்துவங்கின. ஆலை முதலாளிகள் இதுபோல öõத்துக்கள் ஆங்காங்கே இருக்க குடும்பங்கள் மட்டும் இடம் பெயர்ந்து தங்கள் நிலைகளை காப்பாற்றிக் கொண்டனர். ஆகஸ்ட் 15க்கு முன்பே இந்தப் பரிமாற்றங்கள் நிகழத் துவங்கி விட்டன.

எனினும் லட்க்கணக்கான ஏக்கர் நிலங்களை விட்டு விட்டு உயிரைச் காப்பாற்றிக் கொள்ள பூர்வீக ஊர்களை நிரந்தரமாக துறந்து இருபக்கமும் மக்கள் புலம்பெயர்ந்தனர்.

எப்படி நிகழ்ந்தது? எப்படியெல்லாம் நிகழ்ந்தது?

ஒரு கிராமத்தில் திடீரென ஒரு வதந்தி வேகமாகப்பரவும். "முஸ்லீம் குண்டர்கள் (அது முஸ்லீம் கிராமமாக இருந்தால் இந்து குண்டர்கள்) நம் ஊரை நோக்கி ஆயுதங்களோடு வந்து கொண்டிருக்கிறார்கள், வதந்தி பரவியதும் உடனே ஊரே பதறி எழும். பெண்கள் குழந்தைகள் எல்லோரும் ஒரே வீட்டில் பாதுகாப்பாக கூடுவார்கள். ஆண்கள் ஆயுதபாரியாகி எதிர்த்தாக்குதலுக்குத் தயாராவார்கள். பல இடங்களில் மோதல்கள் நடந்தன. öõத்துக்கள் சூறையாடப்பட்டன. மக்கள் கொல்லப்பட்டார்கள். கட்டாய மதமாற்றத்துக்கு நிர்பந்திக்கப்பட்டார்கள். பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள்.

இது போன்ற ம்பவங்கள் நடக்க நடக்க நாளுக்கு நாள் பீதி அதிகரித்தது. பல கிராமங்கள் ஊரைக் காலி öய்துவிட்டு கால்நடைகளுடனும் தட்டுமுட்டுச் õமான்களுடனும் இந்தியாவை (அல்லது பாகிஸ்தானை) நோக்கி நடக்க ஆரம்பித்தனர். வழியில் உள்ள கிராம மக்களும் ÷ர்ந்து கொள்வார்கள். õலைப்பயணம் நீள நீள நடக்கின்ற கூட்டமும் பத்தாயிரம் பேர் இருபதாயிரம் பேர் எனப் பெருகும். இந்த ஊர்ந்து போகும் மக்கள் திரளை "கஃபிலா' (ஓச்ஞூடிடூச்) என்று அழைத்தனர். மிகப் பெ ரிய கஃபிலாவில் ஒரு மயம் 4 லட்ம் பேர் நடந்து வந்தனர். இந்த அனாதரவான கஃபிலா ஒரு இடத்தைக் கடக்க எட்டு நாள் ஆனது.

இடையில் மதவெறியர்களின் தாக்குதலுக்கு இந்த கஃபிலா ஆளாகும். பெண்கள் கடத்திச் öல்லப்படுவார்கள்... ஒன்றும் öய்ய முடியாது. கதறி அழுதபடி "கஃபிலா'வின் பயணம் தொடரும். எதிரெதிர் திகைளில் கஃபிலாக்களின் நகர்தல்  குடிக்க நீ ரின்றி, உண்ண உணவின்றி, நோய்க்கு மருந்தின்றி, öத்துச் öத்து விழுந்த மக்கள் ஏராளம்.

பின்னர் பல கிராமங்களில் ""தாக்குதலுக்குப் படைவருகிறது'' என்ற வதந்தி பரவியதுமே கற்பழிக்கப்படலாம் என்ற அச்த்தின் விளைவாக படை எதுவும் வருவதற்கு முன்னே பெண்கள் தீக்குளித்தும் வீட்டுக்கிணறுகளில் விழுந்தும் தற்கொலை öய்து தங்கள் மானம் காத்துக் கொண்டனர். அல்லது தங்கள் வீட்டு ஆண்களால் முன்கூட்டியே கொல்லப்பட்டனர். இந்த (தற்)கொலைகள் முடிந்த பிறகு எந்த தாக்குதலும் நடக்காமலே வீண் வதந்தியாகப் போன ம்பவங்களும் உண்டு.

குறைந்தது 10 லட்ம் பேர் கொல்லப்பட்டனர். பஞ்õபில் மட்டும் ஒரு கோடிப்பேருக்கு மேல் எல்லையை கடந்தனர். 75000 பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகினர்.

கடத்தப்பட்ட தங்கள் பெண்கள், குழந்தைகள் பற்றி முறையாக புகார் தந்தவர்கள் பலர். விபரம் தென்யாமல் கண்ணீருடன் காலத்தில் புதைந்து போனவர்கள் பலர். புகார்களின் எண்ணிக்கை பெருகப் பெருக 1949ல் இந்திய அரசு ஒரு ட்டம் கொண்டு வந்தது. "கடத்தப்பட்டவர்களின் மீட்புமற்றும் மறுவாழ்வுக்கான ட்டம் 1949'' கடத்தப்பட்டவர் யார் என்பதை அந்தச் ட்டம் விளக்கியது.

"1.3.1947க்குப் பிறகும் 1.1.1949 க்கு முன்பும் தங்கள் குடும்பத்தாரிடமிருந்து பிரிக்கப்பட்ட 16 வயதுக்கு கீழ்ப்பட்ட ஆண் மற்றும் எல்லா வயது பெண்களும் இந்த தேதிகளுக்கு இடையே பிறந்த குழந்தைகளும் கடத்தப்பட்டவராக கருதப்படுவர்.

இந்திய மற்றும் பாகிஸ்தானியர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு புகார்களின் அடிப்படையில் இரு நாடுகளிலும் தேடும்பணி நடைபெற்றது. பலர் மீட்கப்பட்டு அவரவர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

1957 வரை தேடும்பணி தொடர்ந்தது. 1957 உடன் இச்ட்டம் காலாவதியானது. அதற்கு மேல் தேடுவதற்கு இரு நாடுகளிலும் அனுமதி இல்லை.

தொலைந்தவர்கள் தொலைந்து போனவர்கள்தான். ஆகஸ்டு 1956ல் கராச்சியிலிருந்து வெளிவந்த (ஈச்தடண) டான் என்ற பத்தின்கை ஒரு தந்தையின் ÷õகத்தை எழுதியிருந்தது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு துரத்தப்பட்ட குவா மருத்தீன் அகமத் என்பவர் வழியில் தன் பெண் குழந்தை கடத்தப்பட்டதை பற்றி பாகிஸ்தான் அரசுக்கு புகார் öய்தார். அரசு எதுவுமே öய்யாததால் அவரே தன் மகளைத் தேடி இந்தியாவுக்கு தன்öõந்த நகருக்கு வந்தார்.



அவர் பல சில்லறைக் காரணங்களைக் காட்டி கைது öய்யப்பட்டு பாகிஸ்தானுக்கு திருப்பப்பட்டார். மீண்டும் மகளைத் தேடி இந்தியா வந்த அவர் "பாகிஸ்தான் உளவாளி'' என குற்றம் õட்டப்பட்டு 1951ல் சிறையிலடைக்கப்பட்டார். விடுதலையான பிறகு பாகிஸ்தான் öன்று மீண்டும் அரசுக்கு விண்ணப்பித்தார். இந்திய அரசு அவருக்கு உதவாதது பற்றிகூட அவர் வருத்தப்படவில்லை. பாகிஸ்தான் அரசு எதுவுமே öய்யவில்லையே என வருந்தி கடிதங்கள் எழுதிக் கொண்டே இருந்தார்.

அதற்குள் 1957 வந்துவிட்டது. கடத்தப்பட்டவர்களை மீட்கும் ட்டமும் காலாவதி ஆனது. இரு நாடுகளிலும் வாழ்ந்த எத்தனையோ தந்தையரைப்போல அவரும் அவரது மகளை நிரந்தரமாக இழந்த ÷õகத்துடன் உறைந்து போயிருப்பார். இதுபோல கற்பழிக்கப்பட்ட பெண்களுக்குப் பிறந்து அனாதையான குழந்தைகளை என்ன öய்வது என்பது இரு நாடுகளிலும் பிரச்சினை ஆனது. ஒரு இந்து தகப்பனுக்கும் முஸ்லீம் பெண்ணுக்கும் பிறந்த குழந்தை எந்த மதத்தை ÷ரும்? அல்லது முஸ்லீம் தகப்பனுக்கும் இந்து தாய்க்கும் பிறந்த குழந்தையை எங்கே வைத்திருப்பது? இந்தியாவிலா? பாகிஸ்தானிலா? அது எந்த நாட்டுப் பிரஜையாக இருக்கும்?

நாடாளுமன்ற அவைகளில் அமைச்ர் பெருமக்கள் அறிஞர்கள் விவாதித்தனர். தகப்பனின் மதம் தான் குழந்தைக்கும் பொருந்தும் என பெரும்பாலோனோர் பேசினர். ஆனால் இந்த குழந்தைகளைப் பொறுத்தவரை பாலியல் பலாத்காரம் öய்த கயவர்களல்லவா தகப்பன்கள்? தகப்பன் என்ற வார்த்தை அவர்களுக்குப் பொருந்துமா?

அதிர்ச்சியூட்டும் கருத்துக்களை அறிஞர்கள் அவைகளில் அள்ளி வீசிக் கொண்டிருக்க அனாதைக் குழந்தைகள் இந்திய பாகிஸ்தான் தெருக்களில் குழந்தை உழைப்பாளிகளாக பிச்øக்காரர்களாக சில்லறைத் திருடர்களாக தங்கள் பால்ய காலத்தை கரைக்கத்துவங்கி விட்டிருந்தனர். ஆசிரமங்களில் இருந்த அனாதைக் குழந்தைகளை தத்து எடுத்துச் öன்றவர்களும் ஆண் குழந்தைகளையே எடுத்துச் öன்றனர். பெண் குழந்தைகளை வேறு நோக்கங்களுக்காக தத்து எடுத்துச் öன்றனர். பலர் தத்து எடுத்துச் öன்ற பெண் குழந்தைகளை ரொம்ப ÷ட்டை öய்வதாகக் கூறி மீண்டும் ஆசிரமத்திலேயே கொண்டுவிட்டனர்.

நாங்கள் யார்?:

இதற்கிடையே 50,000 தாழ்த்தப்பட்ட குடும்பங்கள் பாகிஸ்தானிலிருந்து தப்பி இந்தியா வந்து ÷ர்ந்திருந்தனர். நிவாரண முகாம்களில் அவர்களுக்கு அடைக்கலம் தராமல் அதிகான்கள் தட்டிக் கழித்தனர். எல்லைப்பகுதியில் இரண்டு வகையான நிவாரண முகாம்கள் அப்போது இயங்கின. பாகிஸ்தானிலிருந்து தப்பி வந்த இந்துக்கள் சீக்கியர்களுக்கான முகாம் ஒன்று. பாகிஸ்தான் öல்வதற்காக காத்திருக்கும் முஸ்லீம்களுக்கான முகாம் ஒன்று. õதி இந்துக்களை முகாம்களில் ÷ர்க்க முழு முயற்சியில் ஈடுபட்ட அதிகான்கள் தாழ்த்தப்பட்ட மக்களை எதிலும் ÷ர்க்க மறுத்தனர். முகாம்களில் இருப்பவர்களுக்குத்தான் ரேஷன் கிடைக்கும்.

1947 டிம்பர் வாக்கில் டாக்டர் அம்பேத்கார் இது குறித்து நேருவுக்கு கடிதம் எழுதினார். ஒன்றும் நடக்கவில்லை. பாகிஸ்தானில் நிலபுலன் வைத்திருந்தவர்கள் அதற்கான õன்றுகளை இந்திய அதிகான்களிடம் காட்டினால் அவர்களுக்கு மாற்று ஏற்பாடாக இங்கு முஸ்லீம்கள் விட்டுச் öன்ற நிலபுலன்கள் ஈடாகத் தரப்பட்டன. இதே நடைமுறை பாகிஸ்தானிலும் இருந்தது.

ஆனால் தாழ்த்தப்பட்ட மக்கள் நிலங்களில் காலம் காலமாய் பாடுபட்டார்களே ஒழிய உடமையாளர்களாக இருக்கவில்லை. எனவே ட்டப்படி இந்திய அதிகாரிகளிடம் விவாயிகள் என்று நிரூபிக்க அவர்களிடம் எந்த õன்றும் இருக்கவில்லை. ஈடாகப்பெற நிலமும் கிட்டவில்லை. நிவாரண முகாம்களில் ரேஷனும் கிட்டவில்லை.

பொறுப்புக்கு வந்ததும் முதல்காரியமாக பாகிஸ்தான் அரசு தாழ்த்தப்பட்ட தீண்டத்தகாத மக்கள் இந்தியாவுக்கு புலம் பெயர்வதை உடனடியாக தடை öய்து உத்தரவு பிறப்பித்தது. எல்லா தாழ்த்தப்பட்டோரும் இந்தியா öன்று விட்டால் கக்கூஸ் அள்ளுவது யார்? õக்கடை அள்ளுவது யார்? அத்தியாவசியப் பணி பராமரிப்பு ட்டத்தின் (உகுMஅ)கீழ் அவர்கள் கைது öய்யப்பட்டு கக்கூஸ்களுக்கு அனுப்பப்பட்டனர். இந்தியாவிலும் இது தான் நடந்தது.

தாழ்த்தப்பட்ட மக்கள் முஸ்லீம்களும் அல்லர். இந்துக்களும் அல்லர் என்றால் நாங்கள் யார்? நாங்கள் தீண்டத்தகாதவர்கள் உங்கள் பார்வையில் அசுத்தமானவர்கள் எங்களுக்கு "அசுத்தஸ்தான்'' என்று தனி நாடு கொடுங்கள் என்றெல்லாம் குரல்களும் இயக்கங்களும் கிளம்பின.

திரு. பியாலால் (Mணூ.ஆஞுச்ட ஃச்டூடூ) 1946 நவம்பரில் "அகில இந்திய அசுத்தஸ்தான் இயக்கத்தை'' நிறுவினார். "இந்துக்களும் முஸ்லீம்களும் தங்களின் எண்முக்கையை உயர்த்திக் கொள்வதற்காக இப்போது தீண்டத்தகாத எங்களை தங்கள் பக்கம் இழுக்கிறார்கள். ஆனால் இந்துஸ்தான், பாகிஸ்தான், இங்கிலீஸ்தான் ஆகிய இந்த மூன்று ஸ்தான வாதிகளும் எங்களை காலம் காலமாக கக்கிப் பிழிந்ததை நாங்கள் மறக்க முடியுமா? நாங்கள் இந்தியாவில்தான் பிறந்தோம் எனவே இந்தியாவின் ஒரு பகுதியை "அசுத்தஸ்தான்'' ஆக்கித்தாருங்கள் எங்கள் வழியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்'' என்ற திரு பியாலால் பிரகடனம் öய்தார். (ஆதாரம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஆவணங்கள் கோப்பு எண் எ19(ஓஙி1) ஹன்ஜன் வேக் ங்194648)

1947 மார்ச் 6 இல் நடைபெற்ற உத்திரபிரதே தாழ்த்தப்பட்டோர் ம்மேளன மாநாட்டில் பேசிய இடைக்கால அரசின் ட்ட உறுப்பினர் ஜே. என். மண்டல், "எனக்கு காந்திஜியின் மீது பெரிய நம்பிக்கை எதுவும் இல்லை. ஹரிஜனங்களுக்கு கோயில் கதவுகளை திறந்து விட்டு மபந்தி போஜனம் öய்தால் போதுமா? எனவே நான் லீகுடன் கை கோர்க்க தயாராகி விட்டேன். முஸ்லீம்கள் நம்மைப்போல ஏழைகள். பின்தங்கியவர்கள். தீண்டத்தகாதவர்கள்'' என முழங்கினார். (மேற்படி அஐஇஇஆவணம்.)

இன்னும் சிலர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போதிய வ களும் லுகைகளும் öய்து தராவிட்டால் அவர்கள் முஸ்லீம்களாக மதம் மாறிவிடுவார்கள். அது பிறகு காங்கிரசுக்கும் இந்துக்களுக்கும் பெரிய இடைஞ்லாக வந்து ÷ரும் என்று நியந்தும் மிரட்டியும் பேசிப்பார்த்தனர்.

எவ்வாறாயினும் தாழ்த்தப்பட்டவரின் குரல்களை எந்த நாடும் (விஷேமாக கவனிப்பது இருக்கட்டும்) கண்டு கொள்ளவே இல்லை. தலைவர்கள் உடனடியாக கவனிக்க வேறு ஆயிரம் பிரச்னைகள் இருந்தன.

ஆனால் தேப்பிரிவினையை ஒட்டி கலவரங்களின் போது தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்கப்படவில்லை. துன்புறுத்தப்படவில்லை. 1947 மார்ச் மாதத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட ராவல்பிண்டி பகுதியில் சுற்றுப்பயணம் öய்த அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் ம்மேளன பொதுச் யெலாளர் பி.என். ராஜ்போஜ" எழுதினார். "நான் சுற்றுப்பயணம் öய்த எந்தப்பகுதியிலும் தாழ்த்தப்பட்டவர் எவரும் கலவரத்தால் பாதிக்கப்படவில்லை என்பதை கண்டேன். இந்துக்களை போல தோற்றமளித்த தாழ்த்தப்பட்டவர் சிலர் ஒரு சில இடங்களில் தவறுதலாக தாக்கப்பட்டுள்ளனர். மற்றபடி வேறு எங்கும் இல்லை.

ஆனால் தாழ்த்தப்பட்ட பெண்களும் மற்ற இந்து, முஸ்லீம் பெண்களைப் போல கற்பழிக்கப்பட்ட ம்பவங்கள் நிறைய உண்டு.

பெண்ணின் உடம்பின் மீது எழுதப்படும் ரித்திரம் :

வகுப்புவாதம் தலைவிரித்தாடிய அந்த நாட்களில் பெண்கள் நடத்தப்பட்ட விதங்களை வகைப்படுத்திப் பார்ப்பது அவசியம்.


"அவர்களு''டைய பெண்களை இழிவுபடுத்துவது அவர்களுடைய மதத்தை நம்பிக்கைகளைஅவர்களுடைய தன்மானத்தை ஆழமாக, கிழிக்கும் யெல் என்பதாக பரஸ்பரம் இந்துக்களும் முஸ்லீம்களும் புரிந்து கொண்டிருந்தனர்.

மாற்று மதத்தவரின் இளம் பெண்களை கடத்திச் öன்றனர். பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கினர். அவர்களை கெடுத்ததன் மூலம் தங்கள் மதத்துக் குழந்தை அவர்களின் வயிற்றில் வளர வித்திட்டனர். பெண்முன் உடம்பின் மீது öய்யும் ஆக்கிரமிப்பு பிற மதத்தவர்மீது நாட்டிய வெற்றிக்கொடியானது.

"அவர்களது'' பெண்களை நர்வாணமாக்கி நடுத்தெருவில் ஓடச்öய்வது.

பெண்களை நிர்வாணமாக்கி அவர்களது மார்பகங்களை அறுத்து எறிவது (இதனால் இறந்தவர்கள் ஏராளம்).

பெண் உறுப்பு மற்றும் மார்பகங்களில் பிறைச்ந்திரன் திரிசூலம் சின்னத்தை சூட்டுகோலால் வரைவதுஎன்றும் அழியாத கேவலமாக பெண்முன் அந்தரங்க உறுப்பில் மாற்று மதத்தின் சின்னம்.

"அவர்கள் '' தாக்க வருகிறார்கள் என்று அறிந்தும் தாங்கள் வீட்டுப் பெண்களை கொன்று விட்டு தப்பிச் öல்வது அல்லது தம் வீட்டுப் பெண்களை தற்கொலை öய்து கொள்ளுமாறு தூண்டுவது  நிர்ப்பந்திப்பது  வழிகாட்டுவது.

தங்கள் உயிரை பலியாகக் கொடுத்த தம்வீட்டுப் பெண்களை குல தெய்வாக்கி இன்றும் வணங்கிவருவது தற்கொலை öய்ய மறுத்து இன்றும் உயிர்வாழும் தம்வீட்டுப் பெண்களை மாற்றுக் குறைவாக மதிப்பது.

முடிவற்று நீண்டு öல்லும் துயர்மிக்க கதைகளை தேப்பின்வினை நமக்குப்பரிõகத் தந்துவிட்டது.

தேப்பின்வினையில் பாகிஸ்தான் பகுதியிலிருந்து உயிர் தப்பி "நம்ம தேம்'' இந்தியாவுக்கு வந்து நிம்மதியாக பெருமூச்சு விட்ட ஆயிரக்கணக்கான சீக்கியக் குடும்பங்கள் 1984ல் இந்திராகாந்தி கொலை öய்யப்பட்ட போது மீண்டும் அதே 1947ஐ அனுபவித்தனர். டெல்லியிலும் மீரட்டிலும் கான்பூரிலும் என காங்கிரஸ் குண்டர்களும் இந்து வெறியர்களும் சீக்கிய மக்கள் மீது தொடுத்த தாக்குதல் அதிர்ச்சி மிக்க பல கேள்விகளை எழுப்புகின்றது.

1992 டிம்பன்ல் பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து பம்பாயில் முஸ்லீம் மக்கள் மீது தொடுக்கப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் ஆயிரக்கணக்கான முஸ்லீம் மக்களை அகதிகளாக்கி பம்பாயை விட்டு ஓடவைத்தது.

தமிழக தென்மாவட்ட õதிக்கலவரங்களின் போது பல கிராமங்களில் மக்கள் ஊரைக்காலி öய்து விட்டு மறைந்து திரிந்தார்கள், அகதிகளாக.

ஒரு வார்த்தையில் öõல்வதானால் "1947'' திரும்பத் திரும்ப நம் நாட்டில் நடந்து கொண்டே இருக்கிறது.

1947 ஐ மீண்டும் மறுவாசிப்பு öய்வதும் கட்டுடைத்துப் பார்ப்பதும் இன்றைய வகுப்புவாதத்தின் வேர்களை அடையாளம் காண உதவக்கூடும்.

ஒரு நூற்றாண்டு விடைபெறும் புள்ளியில் 1947 நமக்கு முன் வைக்கும் கேள்விகள் பல.

லட்க்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டது தீவிரவாதிகளால் அல்ல. õதாரணமாக இணக்கமாகஇயல்பாக வாழ்ந்து கொண்டிருந்த இந்துக்களும் முஸ்லீம்களும் பரஸ்பரம் கொலையாளிகளாகவும் பெண்களை கடத்துபவர்களாகவும் கற்பழிக்கிறவர்களாகவும் மாறியது எப்படி? மாதான காலங்களில் தூவப்படும் வகுப்புவாத விதைகள் கொழுந்து விட்டெரிய ந்தர்ப்பங்கள்தான் தேவைப்படுகின்றன. நாம் மாதானமான நேரங்களில் சும்மா இருந்துவிட்டு கலவரம் முடிந்த பிறகு மட்டும் தீவிரமாக வகுப்புவாத எதிர்ப்பு இயக்கம் நடத்துவதால் என்ன பயன் விளையும்?

கலவர நேரங்களில் மனிதர்கள் தங்கள் எல்லா அடையாளங்களும் மறக்கடிக்கப்பட்டு இந்து, முஸ்லீம் அல்லது தம் õதி என்ற ஒற்றை அடையாளத்துடன் மோதுகிறார்கள். எப்போதும் தங்கள் பன்முக அடையாளங்களை இழக்காதிருக்க இடைவிடாத கருத்துலக இயக்கம் தேவை அல்லவா? பெண்முன் உடம்பு இலகுவான ஆக்கிரமிப்புக்கான நிலப்பரப்பாக தொடர்வதை எந்த நூற்றாண்டில் நாம் முடிவுக்குக் கொண்டு வரப்போகிறோம்? குடும்ப மானம் என்பது என்ன? மதத்தின் மானம் தேத்தின் மானம் என்பதெல்லாம் என்ன? பாலியல் பலாத்காரத்தை வெறும் உடல் மீதான வன்முறையைப் போல பாவிக்க நமது புரையோடிப்போன கலாச்õரத்தை எப்படி ஒழிக்கப்போகிறோம்? வக்கிரங்கள் ஒழியும் நாள் எது? பெண்ணுக்கு நாம் öõல்லப்போகும் பதில் என்ன?

தாழ்த்தப்பட்டதீண்டத்தகாதவர் என ஒதுக்கப்பட்டமக்களுக்கு நம் தேமும் நம் ரித்திரமும் முட்டிக் கொள்ளும் மதங்களும் என்ன பதில் öõல்லப் போகின்றன?

கலவரங்களின்போது அனாதையாக்கப்படுகிற குழந்தைகளின் பால்யம் அதிர்ச்சியில் கன்றிப்போவதை நாம் எப்படி ன் öய்யப்போகிறோம்?

1947 என்பது ஒரு ஆண்டு அல்ல. 1947 என்பது இந்திய விடுதலை மட்டுமல்ல. மேலே நீளமாக பேப்பட்டுள்ள அத்தனை துயரங்கள் அவலங்கள மனிதக் கேவலங்கள் இவற்றின் ஒட்டு மொத்தமான குறியீடுதான் 1947.